சென்னை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள சூழலில், திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துவிட்டனர். தவெகவின் 2-வது மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது. மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
Author: admin
மாதத்தின் அந்த நேரம் எப்போதுமே ஒரே மாதிரியான விவாதத்தைத் தூண்டுகிறது: பட்டைகள் அல்லது டம்பான்கள்? சிலர் பேட்களின் வசதியான, வம்பு இல்லாத ஆறுதலால் சத்தியம் செய்கிறார்கள், மற்றவர்கள் சுதந்திர டம்பான்கள் கொண்டு வராமல் வாழ முடியாது, குறிப்பாக ஜிம்மில் தாக்கும்போது அல்லது குளத்தில் டைவிங் செய்யும்போது. ஆனால் இங்கே உண்மையான கேள்வி: பேட்ஸ் வெர்சஸ் டம்பான்ஸ் போரை உண்மையிலேயே வெல்வது எது? ஸ்பாய்லர் எச்சரிக்கை, இது அவ்வளவு எளிதல்ல. சிறந்த தேர்வு உங்கள் தனித்துவமான உடல், ஓட்டம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நீங்கள் அனைவரும் வசதி, அதிகபட்ச பாதுகாப்பு அல்லது கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருப்பதைப் பற்றி இருந்தாலும், உண்மைகளை அறிந்து கொள்வது உங்கள் முடிவை எளிதாக்கும். உங்கள் சரியான போட்டியைக் கண்டுபிடிக்க தயாரா? என்ஐஎச் மற்றும் எக்லினிகல்மெடிசின் ஆய்வுகளின் அடிப்படையில் உங்கள் கால பக்கவாட்டியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.ஒரு திண்டு மற்றும் ஒரு…
புதுடெல்லி: “விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது” என விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி வீரரும், விமானப்படை கேப்டனான ஷுபன்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஜூலை 15-ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்பினார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை 18-ஆம் தேதி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம்-4 திட்டம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஷுபன்ஷு சுக்லா, “இந்த திட்டத்தை சாத்தியமாக்க உதவிய அரசாங்கம், இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”…
கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கவின் நாயகனாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக சென்னையைச் சுற்றியே நடத்தியுள்ளது படக்குழு. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ’கிஸ்’ படத்தின் ஒளிப்பதிவளராக ஹரீஷ் கண்ணன், இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின், எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தின் பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்ததாக வெற்றிமாறன் தயாரித்துவரும் ‘மாஸ்க்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கவின்.
சென்னை: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை,மக்கள் பிரச்சினையை திசை திருப்ப தாக்கல் செய்துள்ளார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்துள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை வெளியிட்டு ஆற்றிய உரையில் முதல்வர் இவ்வாறாக தெரிவித்தார். முதல்வர் பேசியதாவது: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு…
குடல் புற்றுநோய், அல்லது பெருங்குடல் புற்றுநோய் என்பது ஒரு பெரிய உலகளாவிய சுகாதார அக்கறை, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பெரும்பாலும், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் நுட்பமானவை மற்றும் எளிதில் கவனிக்கப்படவில்லை, இது நோயறிதலை தாமதப்படுத்தும் மற்றும் சிகிச்சையின் செயல்திறனைக் குறைக்கும். நிலை 4 குடல் புற்றுநோயால் கண்டறியப்பட்ட 39 வயதான பிரிட்டிஷ் மனிதனின் பயணத்தை ஆராயுங்கள், ஆரம்பத்தில் அவர் தவறவிட்ட அறிகுறிகள், வயிற்று வலி, குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சோர்வு உள்ளிட்டவை. ஃபைபர் நிறைந்த உணவு, வழக்கமான உடற்பயிற்சி, எடை மேலாண்மை மற்றும் வழக்கமான திரையிடல் போன்ற நடைமுறை தடுப்பு உத்திகளுடன், மரபியல், உணவு, வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் நிலைமைகள் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளையும் இது ஆராய்கிறது. குடல் புற்றுநோய் எந்த வயதிலும் உருவாகலாம், இதில் 30 வயதிற்குட்பட்ட நபர்கள் உட்பட. ஆரம்பகால அறிகுறிகளை அங்கீகரித்தல், ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது மற்றும்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கு முன் பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எனவே, ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன்.…
’விஸ்வம்பரா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. தற்போது இதன் வெளியீட்டை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு மாற்றியுள்ளது படக்குழு. இதனை சிரஞ்சீவி வீடியோ பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வம்பரா’. இதன் வெளியீட்டு தாமதம் குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே கிராபிக்ஸ் காட்சிகள் என்பதாலேயே தாமதம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனை சரியாக செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும், இதனால் தான் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதாகவும்…
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு வந்து தங்கி தரிசனம் செய்யும் வகையில், சென்னையைச் சேர்ந்தவரும், சுவாமிமலை சுவாமியை குலதெய்வமாக வழிபடுபவருமான ஒருவர் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விடுதி கட்ட முடிவெடுத்தார். அதன்படி, சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி நகரில் 8,000 சதுரடியில் இடத்தை தனது பெயரில் வாங்கி, அதில் 4 கட்டிடங்களில் மொத்தம் 16 அறைகளுடன் தங்கும் விடுதியை கட்டினார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஏப்.5-ம் தேதி சுவாமிமலை கோயிலுக்கு தானமாக அந்த விடுதியை வழங்கினார். இந்நிலையில், அந்த விடுதியில், கோயில் நிர்வாகம் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அண்மைக்காலமாக அந்த விடுதி கட்டிடங்கள் செடி, கொடிகள் மண்டி சேதமடைந்து வருகின்றன. செடி, கொடிகள் மண்டி காணப்படும் …
தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் தற்போது குறுவை, சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நடவுபு் பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, சம்பா பருவத்துக்கு 9.70 லட்சம் ஏக்கர் திட்டமிட்டு நாற்றங்கால் தயாரிப்பும், நடவும் ஆங்காங்கே செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெற்பயிருக்கு தேவையான உரங்களை இலைவழியாக வழங்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் தற்போது ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.450 வீதம் வாடகை வசூலிக்கும் தனியார் ட்ரோன் இயக்குபவர்கள், 10 ஏக்கருக்கு மேல் இருந்தால் வயலுக்கு வந்து நேரடியாக பார்வையிட்டு, ட்ரோன் மூலம் மருந்துகளை தெளித்து வருகின்றனர். ட்ரோன் மூலம் தெளிப்பதால் நெற்பயிருக்கு இலைவழியாக மருந்துகள் சீராக கிடைக்கின்றன. இதனால் பயிர்கள் நன்றாக வளரவும், அதே நேரத்தில் குருத்துப் பூச்சிகள், கருப்பு வண்டுகள், ஆணைக் கொம்பன் உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்துக்கு மருந்துகளை வாங்கி, அதை கை…