Author: admin

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், கிச்சா ரவி, பூவையார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி இயக்குநர் விஷால் வெங்கட் கூறியதாவது: இது நையாண்டி டிராமா படம். உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கக் கூடிய கதையை கொண்டது இந்தப் படம். ஒரு கற்பனை உலகத்தை நாங்கள் படைத்திருக்கிறோம். அந்த உலகத்தின் ஊர் ஒன்றில் ஒரு பிரச்சினை நடக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிற ஒரு தரப்புக்கும், இல்லை என்கிற இன்னொரு தரப்புக்குமான பிரச்சினை அது. அதனால் பிரிந்திருக்கிற ஊரை இரண்டு நண்பர்கள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பது கதை.…

Read More

சென்னை: “தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.…

Read More

வெண்ணெய் பழங்கள் சுகாதார உலகின் தங்கக் குழந்தையாக மாறிவிட்டன. அவை சிற்றுண்டியில் வெட்டப்பட்டு, மிருதுவாக்கல்களில் கலக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் இதய ஆரோக்கியமாக இருப்பதற்காகவும், நல்ல கொழுப்புகளால் ஏற்றப்பட்டதாகவும் பாராட்டப்பட்டாலும், ஒரு கேள்வி தொடர்ந்து வருகிறது: உங்கள் சிறுநீரகங்களுக்கு வெண்ணெய் பழையா?சரி, பதில் எளிமையான ஆம் அல்லது இல்லை. இவை அனைத்தும் உங்கள் சிறுநீரகங்களின் நிலை, உங்கள் ஒட்டுமொத்த உணவு மற்றும் நீங்கள் உண்மையில் எத்தனை வெண்ணெய் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆகவே, உங்கள் குவாக்காமோலைத் தள்ளிவிடுவதற்கு முன்பு அல்லது வெண்ணெய் சிற்றுண்டியை இரட்டிப்பாக்குவதற்கு முன், சில கட்டுக்கதைகளை உடைத்து உண்மைகளை அழிப்போம்.கட்டுக்கதை: வெண்ணெய் பழங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானதுஉண்மை இல்லை! உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், தாழ்மையான வெண்ணெய் பழத்தை அஞ்சுவதற்கு உங்களுக்கு பூஜ்ஜிய காரணம் இருக்கிறது. உண்மையில், வெண்ணெய் பழக்கவழக்கங்கள் உண்மையில் சிறுநீரக ஆரோக்கியத்தை பல வழிகளில் ஆதரிக்க முடியும். அவை மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிரம்பியுள்ளன (அக்கா நல்ல வகை), நார்ச்சத்து,…

Read More

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெற்றி இலக்கான 301 ரன்களை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, ஜாஷ் ஹேசில்வுட்டின் 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லினால் 33.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி, தன் 2-வது இன்னிங்ஸில் 310 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஷமார் ஜோசப் அட்டகாசமாக வீசி 5 விக்கெட்டுகளை 87 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஷமார் ஜோசப் மே.இ. தீவுகளுக்கு ஒரு அரிய பொக்கிஷமாகத் திகழ்கிறார். அவரிடம் ஒரு கபில் தேவ் ஒளிந்திருக்கிறார். இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமார் ஜோசப், 2-வது இன்னிங்சில் இறங்கி 22 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார்.…

Read More

டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார் இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதில் உண்மையாக இருந்தால், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கொமேனியை அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது மில்லியன் கணக்கான இதயப்பூர்வமான ஆதரவாளர்களை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். நமது ஏவுகணைகளால் தகர்க்கப்படுவதைத் தவிர்க்க, இஸ்ரேலுக்கு ‘அப்பாவிடம்’ ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகுக்குக் காட்டிய மகத்தான சக்திவாய்ந்த ஈரான் மக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் அவமானங்களை தயவுசெய்து கவனத்தில் கொள்ளாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியை நன்றியுணர்வு இல்லாதவர் என்று குற்றம் சாட்டி, அவரை படுகொலையிலிருந்து…

Read More

ஸ்ரீ கணேஷ் இயக்​கும் படம், ‘3 பிஹெச்​கே’. சித்​தார்த் ஹீரோ​வாக நடிக்​கும் இதில், சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​ளிட்​டப் பலர் நடித்​துள்​ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, “இந்​தப் படத்​தைப் பார்த்​து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்​ததோ, அது​போல இந்​தப் படமும் அமை​யும். நானும் சித்​தார்த்​தும் ஒன்​றாக வளர்ந்​தோம். சித்​தார்த், எப்​போதும் தப்​பான படங்​கள் செய்​த​தில்​லை. இனி​யும் அப்​படித்​தான் இருப்​பார். அவருக்கு வாழ்த்​துகள். நான் பிறந்​த​தில் இருந்தே வாடகை வீட்​டில் இருந்​தது இல்​லை. சொந்த வீட்​டில்​தான் இருந்​திருக்​கிறேன். இப்​போது வாடகை வீட்​டில் இருப்​ப​தால் என்​னால் இந்​தக் கதையை தொடர்​புப் படுத்​திக் கொள்ள முடிந்​தது. நல்ல கதைகளை​யும் படங்​களை​யும் பார்க்க விரும்​புவர் களுக்​கான சிறந்த படமாக இது இருக்​கும்” என்​றார். இயக்​குநர்​கள் ராம், மடோன் அஸ்​வின்,…

Read More

சென்னை: நிலத்தடி நீருக்கான வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசின் அறிவிப்பு நகலைஎரிக்கும் போராட்டம் இன்று நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நிலத்தடி நீரை முறைப்படுத்தும் வகையில், விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து, விவசாயிகளுக்கு வரி விதிக்கும் விதமாக ரூ.1,600 கோடியில் நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்தும் திட்டம் அமலாக்கப்பட உள்ளதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹெச்.எம்.பாட்டீல் அறிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு எதிரான தாக்குதலாகும். தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களையே நம்பி உள்ளது. தமிழகத்துக்கான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையில், வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படையாக இருந்து வருவது நிலத்தடி நீர்தான். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின் சாதன கருவிகள்…

Read More

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 28) பவுனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.680 என குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 28) கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.71,440-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன்…

Read More

உங்கள் உடல் உயிர்வாழக்கூடிய அதிகபட்ச வெப்பம் என்ன காலநிலை மாற்றம் தொடர்ந்து உலகளாவிய வெப்பநிலையை முன்னோடியில்லாத நிலைகளுக்குத் தள்ளுவதால், இங்கிலாந்தில் உள்ள ரோஹாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு மனித உடலை தீவிர வெப்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி ஜூலை 4 பூமியில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான நாளாக குறிக்கப்பட்டுள்ளது, இது மருத்துவ செய்திகளால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆபத்தான சூடாக இருக்கும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தெளிவான புரிதலை விஞ்ஞானிகள் இப்போது வழங்கியுள்ளனர்.ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் நடைபெற்ற சோதனை உயிரியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த ஆய்வு வழங்கப்பட்டது. உயரும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு மனித உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை இது ஆராய்ந்தது, உடல் அதன் உள் வெப்பநிலையை இனி திறம்பட கட்டுப்படுத்த முடியாத புள்ளியில் கவனம் செலுத்துகிறது. பல நாடுகள் நீண்ட மற்றும் தீவிரமான வெப்ப அலைகளை சாட்சியாகக்…

Read More

ரத்லம்: தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். ம.பி. முதல்வர் மோகன் யாதவ் நேற்று ரத்லம் மாவட்டத்தில் பிராந்திய தொழில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவரது பயணத்தின் போது உடன் செல்லும் கான்வாயில் இடம்பெறுவதற்காக இந்தூரில் இருந்து 19 கார்கள் புறப்பட்டுச் சென்றன. செல்லும் வழியில் இந்த கார்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் சென்றன. அங்கு டீசல் நிரப்பிய பிறகு நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்றதும் கார்கள் பழுதைடைந்து நின்றது. சில கார்கள் பெட்ரோல் நிலையத்திலேயே பழுதடைந்து நின்றன. இதையடுத்து டீசலை ஆய்வு செய்த டிரைவர்கள் அதில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து உள்ளூர் துணை தாசில்தார் ஆசிஷ் உபாத்யாய அங்கு…

Read More