Author: admin

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், அப்போதைய சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, விஜய் – நெல்சன் இணைந்த ‘பீஸ்ட்’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். ‘துப்பாக்கி’, ‘கத்தி’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் இணைந்து பணி புரிந்துள்ளது விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. மூன்றுமே மாபெரும் வெற்றி படங்கள் என்பதால், இந்தக் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், இப்போது விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் இக்கூட்டணி இணைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது உறுதியாகிறது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம்…

Read More

சிவகங்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியதால் அதைச் சரிசெய்ய முடியாமல் 8 ஆண்டுகளாக மாணவி ஒருவர் போராடி வருகிறார். அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறு வதற்கும், தேர்வுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதாரை போலியாக தயாரித்து நலத்திட்ட உதவிகள், தனியார் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட மோசடிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்திய தேர்தல் ஆணையமும் ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஆதார் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமே 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் மகள் நாடீஸ்வரி (18). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்றபோது ஆதார் எடுத்தார். அதே சமயத்தில் அதே பள்ளியில் பயின்ற ஜெஸ்மி என்பவரும் ஆதார்…

Read More

ஆரோக்கியமான கல்லீரலை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம், ஏனெனில் இது உடலை நச்சுத்தன்மையாக்குவதிலும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதிலும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன வாழ்க்கை முறைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் மற்றும் உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் இந்த முக்கிய உறுப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கல்லீரல் செயல்பாட்டை ஆதரிப்பதற்கான ஒரு எளிய மற்றும் சுவையான வழி, உங்கள் அன்றாட உணவில் ஊட்டச்சத்து நிரம்பிய சூப்பர்ஃபுட் வெண்ணெய் பழத்தை இணைப்பதன் மூலம். ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வெண்ணெய் கல்லீரல் உயிரணுக்களைப் பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி கல்லீரல் நொதி அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தொடர்ந்து உட்பட சிறந்த கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.கல்லீரல் பாதுகாப்பு மற்றும் நச்சுத்தன்மைவெண்ணெய் வெண்ணெய் கொண்ட வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது தீங்கு விளைவிக்கும் இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்க…

Read More

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு படங்களின் வெளியீட்டிலுமே குழப்பம் நீடித்து வந்தது. முதலில் ‘ட்யூட்’ படமே தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தீபாவளி வெளியீட்டில் இருந்து ‘ட்யூட்’ படம் பின்வாங்கும் என்பது உறுதியாகிறது. டிசம்பர் வெளியீட்டுக்கு மாற்றியப்படும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் குறுகிய காலத்தில் இரண்டு பிரதீப் ரங்கநாதன் படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எல்.ஐ.கே’. லலித்குமார் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து…

Read More

ராமேசுவரம்: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடு களின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 1980-களில் தொடங்கிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். குறிப்பாக 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் இந்திய அரசின் மூலமாக 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் மட்டும் 20 ஆயிரம் இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே…

Read More

மூலிகை தேநீர் இயற்கை ஆரோக்கியத்திற்கான பிரபலமான தேர்வாக மாறி வருகிறது, இஞ்சி தேநீர் மற்றும் துளசி தேநீர் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இரண்டுமே பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன, இப்போது நவீன வாழ்க்கை முறைகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இஞ்சி தேநீர் செரிமானத்திற்கு உதவுவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், குமட்டல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கும் பெயர் பெற்றது. துல்சி தேநீர், மறுபுறம், அதன் மன அழுத்தத்தை நிவர்த்தி, நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பண்புகளுக்கு மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுவருகின்றன, இது வெவ்வேறு சுகாதார இலக்குகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இரண்டிற்கும் இடையில் நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு செரிமான ஆதரவு தேவையா அல்லது ஒட்டுமொத்த அமைதியான மற்றும் சமநிலை தேவையா என்பதைப் பொறுத்தது.இஞ்சி தேநீர் மற்றும் துளசி தேநீர்: சுகாதார நன்மைகளை ஒப்பிடுதல்இஞ்சி தேநீர்புதிய இஞ்சி வேர் அல்லது இஞ்சி தூள் துண்டுகளை சூடான நீரில் செலுத்துவதன் மூலம் இஞ்சி…

Read More

நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு கலோரிலான மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பின்னர் போட்டியில் இருந்து விலகியவருமான நிக்கி ஹேலி, இது தொடர்பாக நியூஸ் வீக் இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். நிக்கி ஹேலி எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், “சீனாவை முறியடித்து வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்குகள் மிக முக்கியமானவை. அமெரிக்க -…

Read More

சென்னை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள சூழலில், திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துவிட்டனர். தவெகவின் 2-வது மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது. மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…

Read More

மாதத்தின் அந்த நேரம் எப்போதுமே ஒரே மாதிரியான விவாதத்தைத் தூண்டுகிறது: பட்டைகள் அல்லது டம்பான்கள்? சிலர் பேட்களின் வசதியான, வம்பு இல்லாத ஆறுதலால் சத்தியம் செய்கிறார்கள், மற்றவர்கள் சுதந்திர டம்பான்கள் கொண்டு வராமல் வாழ முடியாது, குறிப்பாக ஜிம்மில் தாக்கும்போது அல்லது குளத்தில் டைவிங் செய்யும்போது. ஆனால் இங்கே உண்மையான கேள்வி: பேட்ஸ் வெர்சஸ் டம்பான்ஸ் போரை உண்மையிலேயே வெல்வது எது? ஸ்பாய்லர் எச்சரிக்கை, இது அவ்வளவு எளிதல்ல. சிறந்த தேர்வு உங்கள் தனித்துவமான உடல், ஓட்டம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நீங்கள் அனைவரும் வசதி, அதிகபட்ச பாதுகாப்பு அல்லது கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருப்பதைப் பற்றி இருந்தாலும், உண்மைகளை அறிந்து கொள்வது உங்கள் முடிவை எளிதாக்கும். உங்கள் சரியான போட்டியைக் கண்டுபிடிக்க தயாரா? என்ஐஎச் மற்றும் எக்லினிகல்மெடிசின் ஆய்வுகளின் அடிப்படையில் உங்கள் கால பக்கவாட்டியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.ஒரு திண்டு மற்றும் ஒரு…

Read More

புதுடெல்லி: “விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது” என விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி வீரரும், விமானப்படை கேப்டனான ஷுபன்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஜூலை 15-ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்பினார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை 18-ஆம் தேதி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம்-4 திட்டம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஷுபன்ஷு சுக்லா, “இந்த திட்டத்தை சாத்தியமாக்க உதவிய அரசாங்கம், இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”…

Read More