சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில்…
Author: admin
சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ,…
கார்டிசோல், பெரும்பாலும் “மன அழுத்த ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது, வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் மன அழுத்தத்திற்கு உடலின் பதில் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறுகிய வெடிப்புகளில் அவசியம் என்றாலும், நீண்டகாலமாக அதிக கார்டிசோல் அளவு எடை அதிகரிப்பு, பதட்டம், மோசமான தூக்கம் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். இயற்கையான கார்டிசோல் போதைப்பொருள் இந்த விளைவுகளை நிர்வகிக்கவும் உங்கள் உடலில் சமநிலையை மீட்டெடுக்கவும் உதவும்.காபியைக் கட்டுப்படுத்துவது, உங்கள் அன்றாட வழக்கத்தில் சிரிப்பை இணைப்பது, நினைவாற்றலைப் பயிற்சி செய்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் தூக்கப் பழக்கத்தை மேம்படுத்துவது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்கும். இந்த சிறிய மற்றும் நிலையான பழக்கவழக்கங்கள் மனநிலையை மேம்படுத்துகின்றன, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன, உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.விரைவான திருத்தங்களைப் போலன்றி, ஒரு கார்டிசோல் போதைப்பொருள் நீண்டகால நல்வாழ்வை ஆதரிக்கும் நிலையான உத்திகளில் கவனம்…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகளை கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துக் கொண்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்பி, மாநில துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில், ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய…
கோவை: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரையை இணைத்து தமிழக முதல்வருக்கு கோவையை சேர்ந்த 43 தொழில் நிறுவனங்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளன. மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க தொழில் அமைப்புகள் சார்பில் சிறப்பு கூட்டம் கோவையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடந்தது. கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, டீகா, கிரெடாய், ஆர்டிஎப், ஓஸ்மா, டேப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில ஜிஎஸ்டி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், 43 தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. மனுவில், சிறிய…
உலகளவில், மில்லியன் கணக்கானவர்கள் சிறுநீரக நோயை எதிர்கொள்கின்றனர், பெரும்பாலும் பொதுவான பழக்கவழக்கங்கள் காரணமாக. வலி நிவாரணி மருந்துகள், அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை மற்றும் போதுமான நீர் உட்கொள்ளல் ஆகியவை சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இரத்த அழுத்தம், நீரேற்றம் மற்றும் ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றை பாதிப்பதன் மூலம் தூக்கமின்மை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை சிறுநீரக சேதத்திற்கு பங்களிக்கின்றன. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு விழிப்புணர்வு மற்றும் மிதமானவை முக்கியமானவை. சிறுநீரகங்களை நல்ல நிலையில் வைத்திருப்பது மிக முக்கியம். இந்த உறுப்புகள் கழிவுகளை வடிகட்டுதல், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளவில் சுமார் 850 மில்லியன் மக்கள் சில வகையான சிறுநீரக நோயுடன் போராடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலான வழக்குகள் நாள்பட்ட சிறுநீரக நோயால் (சி.கே.டி) பங்களிக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், எங்கள் பொதுவான பழக்கவழக்கங்கள் சில சிறுநீரக நோய்களுக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக இருக்கின்றன.…
‘சிரஞ்சீவி’ நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வம்பரா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் எப்படி? – ஒரு குழந்தையிடம் கதை சொல்லும் வாய்ஸ் ஓவரில் ஓடத் தொடங்கும் இந்த டீசர் வீடியோவில் ஒரு யுத்தத்தை பற்றி சொல்லப்படுகிறது. ஃபேண்டஸி, ஆன்மீகம், போர் உள்ளிட்ட காட்சித் துணுக்குகளைக் கொண்ட இதில் அவற்றை விஞ்சும் விதமாக அதீத வன்முறைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. துண்டாக பறந்து செல்லும் கை, நெஞ்சை துளைக்கும் ஈட்டி, ஹீரோவின் கையில் இருக்கும் கண் என…
சென்னை: நாகாலாந்து ஆளுநராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்டுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்று, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், இன்று (21-ம் தேதி) நடைபெறும் இல.கணேசனின் புகழஞ்சலி நிகழ்வுக்கு குடும்பத்தினருக்கு நேரில் அழைப்பு விடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இல.கணேசன் மறைவு என்பது பெரும் இழப்பு. நான் கட்சி நிகழ்ச்சி காரணமாக வேறொரு ஊரில் இருந்ததால், என்னால், இல.கணேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார். கட்சி பாகுபாடின்றி திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் மாநாடு நடத்த உரிமை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகமும் மாநாடு நடத்தட்டும். மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான். திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி தான். திமுக ஆட்சியில்…
பெண்களுக்கு வயதாகும்போது, குறிப்பாக 40 க்குப் பிறகு, ஹார்மோன் மாற்றங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும். NIH இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கிய ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் வளர்சிதை மாற்றம், மனநிலை, தூக்கம், லிபிடோ மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றை பாதிக்கின்றன. சில மாற்றங்கள் வயதானதன் இயல்பான பகுதியாகும், தொடர்ச்சியான அல்லது கடுமையான அறிகுறிகள் ஒரு அடிப்படை ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் குறிக்கலாம். இந்த எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பராமரிப்பதற்கும் நீண்டகால சுகாதார பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் முக்கியமானது. விவரிக்கப்படாத எடை அதிகரிப்பு மற்றும் சோர்வு முதல் மனநிலை மாற்றங்கள், தூக்க பிரச்சினைகள் மற்றும் முடி அல்லது தோல் மாற்றங்கள் வரை, இந்த குறிகாட்டிகளைப் புரிந்துகொள்வது பெண்களுக்கு சரியான நேரத்தில் தலையீடுகளையும் ஆதரவையும் பெற அதிகாரம் அளிக்கிறது.10 ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அறிகுறிகள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்…
காஞ்சிபுரம்: “அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம்… அறியாமையின் காரணமாக பேசுவாதாக இதைப் பார்க்கிறேன்” என்று தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். மதுரை தவெக மாநாட்டில் அதிமுக குறித்து விஜய் பேசியதற்கு, பதிலடி தரும் வகையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுகவை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்திக் காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள். யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம், அறியாமையில்…