திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி, 1982 பிப்ரவரியில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் போனார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி. நடைபயணத்தில் அவரது காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்ட அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதியை போனில் அழைத்து நலம் விசாரித்தார். அத்தோடில்லாமல் தனது நண்பருக்கு உதவியாக இருக்கட்டுமே என்பதற்காக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்றையும் மருத்துவக் குழுவினர் சகிதம் அனுப்பிவைத்தார். திமுக-வால் இதை வரவேற்கவும் முடியவில்லை; வசைபாடவும் முடியவில்லை. 43 வருடங்கள் கழித்து வரலாறு வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. இப்போது, தனது பிரச்சாரக் கூட்டங்களுக்குள் ஆளும்கட்சி வேண்டுமென்றே ஆம்புலன்ஸை விட்டு ஆட்டையைக் கலைப்பதாக ஆவேசப்பட்டிருக்கிறார் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். இபிஎஸ்ஸின் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ பரப்புரை பயணம் கடந்த 19-ம் தேதி வேலூர்…
Author: admin
மதுரை: மதுரையில் நேற்று மாலை நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். மதுரை பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக மேற்கொண்டிருப்பது உண்மையான, உணர்வுப்பூர்வமான, நல்ல அரசியல், நல்லவர்களுக்கான அரசியல். தமிழகத்தில் 1967, 1977-ல் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததுபோல, வரும் 2026-ம் ஆண்டிலும் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போவதை உறுதியாக சொல்கிறது இந்த மாநாடு. ‘கூட்டம் எல்லாம் ஓகே, இது எப்படி ஓட்டாக மாறும்’ என்று நம்மை விமர்சிக்கின்றனர். தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஓட்டாக இருக்காது. மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக, எங்களை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, நான்…
ரோட்டி மற்றும் காய்கறிகள் பல உணவுகளில், குறிப்பாக தெற்காசிய வீடுகளில் பிரதான உணவுகள். நீரிழிவு நோயாளிகளுக்கு, பொதுவாக நுகரப்படும் இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது இந்த நிலையை திறம்பட நிர்வகிக்க அவசியம். ரோட்டி மற்றும் காய்கறிகள் இரண்டும் ஒரு சீரான நீரிழிவு உணவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும், இரத்த குளுக்கோஸ் மீதான அவற்றின் தாக்கம் மாவின் வகை, காய்கறிகளின் வகை, பகுதி அளவு மற்றும் உணவு சேர்க்கைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது. இந்த கட்டுரை ரோட்டி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கும் இரத்த சர்க்கரை அளவிற்கும் இடையிலான உறவை ஆராய்கிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குகிறது.நீரிழிவு நோயாளிகளில் ரோட்டி மற்றும் சப்ஸி இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றனமெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய ஆய்வில், ஆரோக்கியமான தன்னார்வலர்களில் தரிசுனை, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 12 பாரம்பரிய இந்திய உணவுகளின்…
சென்னை: தமிழகத்தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங் களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையி டையே 60…
பல பெரியவர்கள் வியத்தகு மாற்றங்களைக் கவனிக்காவிட்டால் அவர்களின் பார்வை நன்றாக இருப்பதாக கருதுகின்றனர், ஆனால் நுட்பமான கண் பிரச்சினைகளை புறக்கணிப்பது ஆபத்தானது. வழக்கமான கண் பரிசோதனைகள் சரியான பார்வையை விட அதிகம் செய்கின்றன – அவை கடுமையான சுகாதார நிலைமைகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளன, சில நேரங்களில் மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு. இதுபோன்ற போதிலும், இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெரியவர்கள் வருடாந்திர பரிசோதனைகளைத் தவிர்க்கிறார்கள். வழக்கமான கண் பரிசோதனைகள் பார்வை மாற்றங்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது கண் சார்ந்த கோளாறுகள் போன்ற சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தலாம். கண் நிபுணருடன் சந்திப்பைத் திட்டமிட வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கும் பத்து பெரும்பாலும் கவனிக்கப்படாத பத்து அறிகுறிகள் இங்கே.உங்கள் கண்களுக்கு சோதனை தேவை அறிகுறிகள் மங்கலான பார்வைமங்கலான பார்வை என்பது மக்கள் கண் பரிசோதனையை நாடுவதற்கு மிகவும் பொதுவான காரணம், ஆனால் பலர் இது ஒரு…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலர் பி.சி.மோடியிடம் இண்டியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, இண்டியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். சுதர்சன் ரெட்டியின் மனுவை இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 20 பேர் முன்மொழிந்தனர். 20 பேர் வழிமொழிந்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக் கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று…
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர்…
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய அக்ரூட் பருப்புகள் பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று புகழப்படுகின்றன. அவை இதய ஆரோக்கியம், மூளை செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மேலும் நோய் தடுப்புக்கு கூட உதவக்கூடும். இருப்பினும், அவற்றின் பல நன்மைகள் இருந்தபோதிலும், அக்ரூட் பருப்புகள் அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல. சில சுகாதார நிலைமைகள் அல்லது உணவுத் தேவைகள் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது ஆபத்தானது அல்லது சங்கடமாக இருக்கும்.எச்சரிக்கையின்றி அவற்றை சாப்பிடுவது செரிமான பிரச்சினைகள், அதிகரித்த யூரிக் அமில அளவு அல்லது மருந்துகளின் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் பாதுகாப்பான மற்றும் தகவலறிந்த தேர்வுகளைச் செய்வதற்கு அக்ரூட் பருப்புகளை எப்போது தவிர்க்க வேண்டும் என்பதை அறிவது முக்கியம். இந்த கட்டுரை தேசிய சிறுநீரக அறக்கட்டளை மற்றும் என்ஐஎச் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் ஆதரவுடன், அக்ரூட் பருப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ செய்ய வேண்டிய ஐந்து குழுக்களை கோடிட்டுக்…
புதுடெல்லி: பெரும்பான்மை உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசியல் சாசன அமைப்பு மற்றொரு அரசியல் சாசன அதிகாரம் படைத்த அமைப்புக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் ராமசந்திர ராவ் வழக்கில் ஏற்கெனவே தெளிவுபடு்த்திஉள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றம் காலநிர்ணயம் செய்வதாக இருந்தாலும் அதை உத்தரவாக அல்லாமல் பரிந்துரையாக செய்திருக்க வேண்டும். சட்ட…
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்காக பொறியியல் துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் துணை கலந்தாய்வில் பங்கேற்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான 20,662 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அவர்களுக்கான துணை கலந்தாய்வு இணைய வழியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கல்லூரி விருப்பத்தை தேர்வு செய்தவர்களுக்கு நாளை (ஆக.23) காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை நாளை இரவு 7 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களுக்கு 24-ம் தேதி…