சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து, மணல் கடத்தல் காரர்கள் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நேர்மையாக பணியாற்றிய அதிகாரியை தாக்கியதுடன், இதற்கு மேலும் கடத்தலைத் தடுக்க முயற்சித்தால் வண்டியை ஏற்றிக் கொலைசெய்துவிடுவதாக மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘திமுக ஆட்சி அமைந்ததும் மணல் அள்ளலாம்’ என அச்சாரமிட்டதை ஒப்பிட்டுப் பார்த்தால் தொடர்ந்து மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு திராவிட மாடல் அரசே ஒத்துழைப்பு தருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Author: admin
சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள். சங்கரன்கோவில் நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 12 வார்டுகளை வென்றது அதிமுக. இருந்த போதும், 9 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த திமுக, கூட்டணி தோழர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. உமா மகேஸ்வரி சேர்மனானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே சொந்தக் கட்சியினரே உமா மகேஸ்வரிக்கு எதிராக கொடிபிடிக்கத் தொடங்கினர். இதையடுத்து அதிமுக-வினருடன் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உமா மகேஸ்வரியை சேர்மன் இருக்கையை விட்டு இறக்கியது திமுக. இதையடுத்து ஆகஸ்ட் 18-ம் தேதி சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இம்முறை திமுக சார்பில் கவுசல்யாவும் அதிமுக சார்பில் அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். கடந்த முறை திமுக-வும் அதிமுக-வும் தலா 15 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இம்முறையும் அப்படித்தான் நடக்கும் என பலரும் கருதினர். ஆனால்,…
புற்றுநோய் இறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமான நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் மேம்பட்ட கட்டங்கள் வரை கண்டறியப்படாமல் போகிறது. முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், சுவாசம், மூச்சுத் திணறல், இரத்தத்தை இருமல் மற்றும் விவரிக்கப்படாத சோர்வு ஆகியவற்றால் மோசமடைந்த மார்பு வலி அடங்கும். ஆரம்பகால நோயறிதல் முக்கியமானது, எனவே இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், குறிப்பாக புகைபிடிக்கும் வரலாற்றுடன் ஒரு மருத்துவரை அணுகவும். உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் முக்கிய காரணமாகும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அனைத்து நிகழ்வுகளிலும் 85% இல், புகைபிடிப்பதே முக்கிய காரணமாகும். இந்த புற்றுநோயை அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டிருப்பதால், ஆரம்பத்தில் நோயைப் பிடிப்பது மிக முக்கியமானது. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் மேம்பட்ட கட்டங்களில் மட்டுமே கண்டறியப்படுகின்றன, அங்கு சிகிச்சை விருப்பங்கள் குறைவாகவே உள்ளன. அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பது ஆரம்பகால நோயறிதலுக்கு உதவும். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத நுரையீரல் புற்றுநோயின்…
திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி, 1982 பிப்ரவரியில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் போனார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி. நடைபயணத்தில் அவரது காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்ட அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதியை போனில் அழைத்து நலம் விசாரித்தார். அத்தோடில்லாமல் தனது நண்பருக்கு உதவியாக இருக்கட்டுமே என்பதற்காக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்றையும் மருத்துவக் குழுவினர் சகிதம் அனுப்பிவைத்தார். திமுக-வால் இதை வரவேற்கவும் முடியவில்லை; வசைபாடவும் முடியவில்லை. 43 வருடங்கள் கழித்து வரலாறு வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. இப்போது, தனது பிரச்சாரக் கூட்டங்களுக்குள் ஆளும்கட்சி வேண்டுமென்றே ஆம்புலன்ஸை விட்டு ஆட்டையைக் கலைப்பதாக ஆவேசப்பட்டிருக்கிறார் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். இபிஎஸ்ஸின் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ பரப்புரை பயணம் கடந்த 19-ம் தேதி வேலூர்…
மதுரை: மதுரையில் நேற்று மாலை நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். மதுரை பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக மேற்கொண்டிருப்பது உண்மையான, உணர்வுப்பூர்வமான, நல்ல அரசியல், நல்லவர்களுக்கான அரசியல். தமிழகத்தில் 1967, 1977-ல் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததுபோல, வரும் 2026-ம் ஆண்டிலும் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போவதை உறுதியாக சொல்கிறது இந்த மாநாடு. ‘கூட்டம் எல்லாம் ஓகே, இது எப்படி ஓட்டாக மாறும்’ என்று நம்மை விமர்சிக்கின்றனர். தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஓட்டாக இருக்காது. மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக, எங்களை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, நான்…
ரோட்டி மற்றும் காய்கறிகள் பல உணவுகளில், குறிப்பாக தெற்காசிய வீடுகளில் பிரதான உணவுகள். நீரிழிவு நோயாளிகளுக்கு, பொதுவாக நுகரப்படும் இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது இந்த நிலையை திறம்பட நிர்வகிக்க அவசியம். ரோட்டி மற்றும் காய்கறிகள் இரண்டும் ஒரு சீரான நீரிழிவு உணவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும், இரத்த குளுக்கோஸ் மீதான அவற்றின் தாக்கம் மாவின் வகை, காய்கறிகளின் வகை, பகுதி அளவு மற்றும் உணவு சேர்க்கைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது. இந்த கட்டுரை ரோட்டி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கும் இரத்த சர்க்கரை அளவிற்கும் இடையிலான உறவை ஆராய்கிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குகிறது.நீரிழிவு நோயாளிகளில் ரோட்டி மற்றும் சப்ஸி இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றனமெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய ஆய்வில், ஆரோக்கியமான தன்னார்வலர்களில் தரிசுனை, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 12 பாரம்பரிய இந்திய உணவுகளின்…
சென்னை: தமிழகத்தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங் களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையி டையே 60…
பல பெரியவர்கள் வியத்தகு மாற்றங்களைக் கவனிக்காவிட்டால் அவர்களின் பார்வை நன்றாக இருப்பதாக கருதுகின்றனர், ஆனால் நுட்பமான கண் பிரச்சினைகளை புறக்கணிப்பது ஆபத்தானது. வழக்கமான கண் பரிசோதனைகள் சரியான பார்வையை விட அதிகம் செய்கின்றன – அவை கடுமையான சுகாதார நிலைமைகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளன, சில நேரங்களில் மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு. இதுபோன்ற போதிலும், இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெரியவர்கள் வருடாந்திர பரிசோதனைகளைத் தவிர்க்கிறார்கள். வழக்கமான கண் பரிசோதனைகள் பார்வை மாற்றங்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது கண் சார்ந்த கோளாறுகள் போன்ற சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தலாம். கண் நிபுணருடன் சந்திப்பைத் திட்டமிட வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கும் பத்து பெரும்பாலும் கவனிக்கப்படாத பத்து அறிகுறிகள் இங்கே.உங்கள் கண்களுக்கு சோதனை தேவை அறிகுறிகள் மங்கலான பார்வைமங்கலான பார்வை என்பது மக்கள் கண் பரிசோதனையை நாடுவதற்கு மிகவும் பொதுவான காரணம், ஆனால் பலர் இது ஒரு…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலர் பி.சி.மோடியிடம் இண்டியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, இண்டியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். சுதர்சன் ரெட்டியின் மனுவை இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 20 பேர் முன்மொழிந்தனர். 20 பேர் வழிமொழிந்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக் கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று…
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர்…