திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பம்பையில் இன்று காலை தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் சங்கமத்தை தொடங்கிவைத்தார். இதில், தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நாம் சிந்திக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே 2011-12ம் ஆண்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் தொடங்கப்பட்டது. மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.148.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை தடுக்க சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இது துரதிருஷ்டவசமானது. ஐயப்பன் மீதான பக்தியா, வனப் பாதுகாப்பு மீதான அக்கறையா, மத தூய்மையா? ஆனால், இவை எதுவும் இல்லை என்பது…
Author: admin
‘ஜனநாயகன்’ படமாக எப்படியிருக்கும் என்று ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். ’ஜனநாயகன்’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது. இதுவரை சில போஸ்டர்கள் மற்றும் சிறிய டீஸரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணமுள்ளன. முதன் முறையாக இப்படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத், “’ஜனநாயகன்’ விஜய் சாருடைய பக்கா கடைசிப் படமாக இருக்கும். மாஸ், ஆக்ஷன், கமர்ஷியல் அனைத்தும் கலந்த படமாக இருக்கும். பக்கா ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகமாக்கி இருக்கிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
சென்னை: அரசு பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், மாவட்ட அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டுப் பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசு பள்ளிகளில் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடியாத மாநில அரசு, அமைச்சர்களின் தற்புகழ்ச்சிக்கு இடம் கொடுப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இந்த விவகாரம் தெரியுமா? அவரின் ஒப்புதலோடு தான் பள்ளி மாணவர்கள் பிறந்த நாள் பாடலை பாடினார்களா? மாவட்ட அமைச்சர்கள் குறுநில…
ஒரு நீண்ட, அமைதியான தூக்கம் போல் உணர்ந்த பிறகும் ஒரு தலைவலியுடன் எழுந்திருப்பது பொதுவான மற்றும் குழப்பமான அனுபவமாகும். தூக்கம் உடலையும் மனதையும் ரீசார்ஜ் செய்ய வேண்டும், ஆனால் அதிக தூக்கம், பெரும்பாலும் “தூங்குவது” என்று குறிப்பிடப்படுகிறது, சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். புத்துணர்ச்சியுடன் உணருவதற்குப் பதிலாக, நீங்கள் நாள் கனமான, கஷ்டம் அல்லது தலை வலியுடன் தொடங்கலாம். எப்போதாவது நீண்ட காலமாக பொய்யானது பாதிப்பில்லாதது என்றாலும், அடிக்கடி அதிக தூக்கம் வருவது உடலின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து தலைவலிக்கு பங்களிக்கும். இது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அதைத் தடுப்பதற்கான முதல் படியாகும், மேலும் உங்கள் தூக்கத்தை உறுதி செய்வது உங்களை உற்சாகப்படுத்துகிறது, சங்கடமாக இல்லை.அதிக தூக்கம் மற்றும் தலைவலி இடையே மறைக்கப்பட்ட இணைப்பு; 9 மணி நேரத்திற்கு அப்பால் தூங்குவது வலிக்கிறதுபெரும்பாலான பெரியவர்களுக்கு, ஏழு முதல் ஒன்பது மணிநேர தூக்கம் ஆரோக்கியமாக கருதப்படுகிறது. பொதுவாக தூங்குவது என்பது…
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். “அதிகாலை 4 மணிக்கு 36 வினாடிகளில் 2 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் விழித்திருந்து இதை பார்த்தாலும் திருடர்களை பாதுகாக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தனது தலைமை தோல்வி அடைந்ததை ராகுல் ஏற்க வேண்டியிருந்தது. அவரது தலைமை பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இட்டுச் சென்றது. இந்திய இளைஞர்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியை தொடர் தோல்விக்கு இட்டுச் சென்ற ராகுல் இந்தியாவின் ஜனநாயக அமைப்பை அவமதிக்கிறார். அவரை இந்த நாடு நம்பாது. ஏழைகள், விவசாயிகள் மற்றும் சாமானியர்கள் பிரதமர் மோடியை தங்கள் தலைவராக கருதுகின்றனர். தேர்தல் தோல்விகளுக்கு பிறகு ராகுல்…
சென்னை: பதவி உயர்வுக்கு தகுதியான 26 பேரின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கூறி, மின்வாரிய தலைமையகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, அவர்கள் பணிபுரியும் வட்டத்தின் தலைமை அலுவலர், சம்பந்தப்பட்ட ஊழியரின் திறன் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவற்றுடன் பட்டியல் தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். அதனடிப்படையில், தேர்வு செய்யப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படும். மின்வாரிய விதி: மேலும், உயர் பதவியும், ஏற்கெனவே பணிபுரியும் அலுவலகம் அல்லது அதற்கு அருகில் உள்ள அலுவலகத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்பது வாரிய விதி. ஆனால், இதுபோன்ற விதிகளை பின்பற்றாமல் பதவி உயர்வு வழங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அண்மையில் கணக்கு மேற்பார்வையாளர் பதவியில் இருந்து உதவி கணக்கு அலுவலராக 96 பேர் அடங்கிய பட்டியல் உருவாக்கப்பட்டது. இதில், 93…
நம்மில் பெரும்பாலோர் குறட்டை ஒரு எரிச்சலூட்டும் பழக்கம் அல்லது சோர்வாக இருப்பதற்கான அறிகுறி என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் கார்ன்வாலைச் சேர்ந்த 51 வயதான கிளாரி பார்பருக்கு, இது மிகவும் தீவிரமான ஒன்றுக்கு சிவப்புக் கொடி. ஒரு இரவு, அவள் மூக்கு தடுக்கப்பட்டதால் அவள் காற்றிற்காக வாயை மூடிக்கொண்டு, வாயில் சுவாசிப்பதைக் கண்டாள். முதலில், வேலையில் அடிக்கடி நாசி சோதனைகளிலிருந்து நீடித்த கோவிட் விளைவுகள் அல்லது எரிச்சலை அவர் குற்றம் சாட்டினார், மேலும் தனது மருத்துவரின் வருகையைத் தவிர்த்தார். அதிர்ஷ்டவசமாக, அவள் சென்றாள். சோதனைகள் ஆல்ஃபாக்டரி நியூரோபிளாஸ்டோமா எனப்படும் ஒரு அரிய நாசி புற்றுநோயை வெளிப்படுத்தின. திடீர் அல்லது அசாதாரண குறட்டை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என்று கிளாரின் கதை காட்டுகிறது.முதல் முறையாக குறட்டை: ஒரு பொதுவான அறிகுறி தீவிரமான ஒன்றை மறைக்கும் போதுபெரும்பாலான மக்கள் குறட்டை ஒரு எரிச்சலூட்டும் ஆனால் பாதிப்பில்லாத தூக்க பிரச்சினை என்று நினைக்கிறார்கள். இது பொதுவாக தடுக்கப்பட்ட…
எல் சோபிரான்ட் சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே பல எதிர்ப்பாளர்கள் கூடினர் (கோப்பு புகைப்படம்) அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) 73 வயதான இந்திய பாட்டியான ஹர்ஜித் கவுரை தடுத்து வைத்த பின்னர் கலிபோர்னியா முழுவதும் கோபம் மற்றும் அனுதாபம் ஏற்பட்டது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் கவுர், செப்டம்பர் 8 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் குடியேற்ற அதிகாரிகளுடன் வழக்கமான சோதனையின் போது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பேக்கர்ஸ்ஃபீல்டில் உள்ள மேசா வெர்டே ஐஸ் செயலாக்க மையத்திற்கு மாற்றப்பட்டார்.கான்ட்ரா கோஸ்டா கவுண்டியில் எல் சோப்ராண்டே சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே அண்மையில் நடந்த போராட்டத்தில், 200 க்கும் மேற்பட்டோர் கூடி, “பாட்டி வீட்டிற்கு கொண்டு வாருங்கள்” என்று படித்த அடையாளங்களை வைத்திருந்தனர். ஆதரவாளர்கள் அவளை “அனைவரின் பாட்டி” என்று வர்ணித்தனர், கார்களை ஒற்றுமையுடன் கடந்து சென்றனர்.உள்ளூர் அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களும் இணைந்தனர், மத்திய…
புதுடெல்லி: ஜெய்ஸ் -இ-முகமது கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி ஒப்புதலை தொடர்ந்து, முரித்கே பகுதியில் இருந்த ‘மர்காஷ்-இ-தொய்பா’ முகாம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தரைமட்டமானதாக லஷ்கர் கமாண்டர் குவாசிம் தற்போது கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று, லஷ்கர் பிரிவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. மசூத் குடும்பத்தினர் மரணம்: இந்நிலையில் ஜெய்ஸ்-இ- முகமது அமைப்பின் கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி சமீபத்தில் அளித்த வீடியோ பேட்டியில், “இந்திய தாக்குதலில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் பஹவல்பூர் முகாம் தகர்க்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் தங்கள் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் சிதைக்கப்பட்டனர்” என கூறியிருந்தார். இதையடுத்து சமூக ஊடகத்தில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் லஷ்கர்…
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சென்னை – கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தின் நிதி கூறுகளின் கீழ், நெடுஞ்சாலைத் துறையின் திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். இக்கட்டிடம், 5,546 சதுர மீட்டர் பரப்பளவில், 3 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட் டுள்ளது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் ஆகியவை இப்புதிய கட்டிடத்தில்…