உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) என்பது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும், இது கடுமையான சிக்கல்கள் ஏற்படும் வரை குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக உருவாகிறது. இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது மற்றும் காலப்போக்கில் இரத்த நாளங்கள் மற்றும் முக்கிய உறுப்புகளில் சேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால கட்டுப்பாடு இருதய நிகழ்வுகளின் அபாயத்தை கணிசமாகக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், உணவு எவ்வாறு இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது தடுப்பு மற்றும் நிர்வாகத்திற்கு முக்கியமானது. புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையில் சில காலை உணவுகள் மற்றும் இரத்த அழுத்தத்தில் அவற்றின் தாக்கம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.ஏன் காலை காலை உணவு இரத்த அழுத்த கூர்முனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறதுஇரத்த அழுத்தம் இயற்கையாகவே நாள் முழுவதும் மாறுபடுகிறது, ஒரு…
Author: admin
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதேவேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை அப்புறப்படுத்துவதோடு, ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி…
புதுடெல்லி: இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14ம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்…
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும். உத்தரப் பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு…
புதுடெல்லி: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், எவர்மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்ரிக். இவருக்கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரியானோவுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தன. கடைசி ஆண் குழந்தை நோயல் ரோட்ரிக் (6). இந்த சிறுவனுக்கு நரம்பு மண்டல பாதிப்பு, சுவாசக் கோளாறு, எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்தன. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய மரியானோ, மெக்ஸிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதன்பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஸ்தீப் சிங் என்பவரை, சிண்டி ரோட்ரிக் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் 6 வயது சிறுவன் நோயல் ரோட்ரிக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “சிறுவன் நோயல் அவனது தந்தை மரியானோவுடன் மெக்ஸிகோவில் வசிக்கிறான்” என்று சிண்டி தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் சிண்டி ரோட்ரிக்,…
ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில் 53 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் லிடியா பஷரேவா 40 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் ஷா 250.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபினவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
சென்னை: இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். “எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386! சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சியா விதைகள் புதிய ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார். ஆரோக்கிய குருக்கள் முதல் சுகாதார செல்வாக்கு செலுத்துபவர்கள் வரை, எல்லோரும் சியா விதைகளைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். எடை இழப்பு முதல் ஆரோக்கியமான குடல் வரை, சியா விதைகளின் நன்மைகள் ஏராளமாக உள்ளன. சிலர் தங்கள் நாள் சியா விதைகளை தண்ணீரில் குடிக்கத் தொடங்குகையில், மற்றவர்கள் தங்கள் இனிப்பை தயிரில் நனைத்த சியா விதைகளுடன் மாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஆரோக்கியமானவர்களா? இந்த கூற்றுக்கள் உண்மையா? கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, சியா விதைகளின் நன்மைகளை விளக்கியுள்ளார், மேலும் அவற்றைப் பற்றிய சில கட்டுக்கதைகளையும் நீக்கிவிட்டார். சியா விதைகளின் ஊட்டச்சத்து மதிப்பு சியா விதைகள் பாலைவன ஆலையிலிருந்து பெறப்பட்டவை சால்வியா ஹிஸ்பானிகா. இந்த சிறிய கருப்பு விதைகள் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஆகியவற்றின்…
புதுடெல்லி: விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வெள்ளிக்கிழமை விண்வெளியில் இருந்து இந்தியாவின் மூச்சடைக்கக் கூடிய நேரத்தைக் பகிர்ந்து கொண்டார், குடிமக்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் தனது பயணத்தின் பார்வையை வழங்கினார்.X இல் கிளிப்பை இடுகையிட்டால், சுக்லா எழுதினார்: “திரை பிரகாசத்துடன் நிலப்பரப்பில் வீடியோவைப் பாருங்கள். சுற்றுப்பாதையில் இருந்தபோது நான் படங்களையும் வீடியோக்களையும் கைப்பற்ற முயற்சித்தேன், இதன் மூலம் இந்த பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். இது பாரதத்தின் விண்வெளியில் இருந்து ஒரு காலக்கெடு வீடியோ. ஐ.எஸ்.எஸ். இந்திய பெருங்கடலில் இருந்து வடகிழக்கு, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் நகர்கிறது.”வீடியோவில் காணப்படும் ஊதா நிற ஃப்ளாஷ்கள் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை, அதைத் தொடர்ந்து இமயமலை பார்வைக்கு மங்கலாக இருந்தது, பின்னர் சுற்றுப்பாதையில் சூரிய உதயம் – அனைத்தும் பளபளக்கும் நட்சத்திரங்களின் பின்னணியில். “இது உண்மையிலேயே ஒரு அழகான காட்சியாக மாறும் இயற்கை கூறுகளின் மயக்கும் நடனம்”…
புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிமாநில தமிழ்ச் சங்க பள்ளிகளுக்கு பாடநூல்களை தொடர்ந்து இலவசமாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களாலும் தமிழ் கல்வி அமைப்புகளாலும் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மற்றும் தமிழ் பாடப்பிரிவுக்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இவை நீண்ட வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த இலவச விநியோகத்தை நடப்பு வருடம் முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்திருந்தது. இது தொடர்பான செய்தி கடந்த 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் வெளியானது. இலவச விநியோகம் ரத்து செய்யப்பட்டதற்கு பரவலாக கண்டனம் எழுந்தது. இதன் தாக்கமாக, தற்போது தமிழ்நாடு அரசு தனது முடிவை மாற்றி இலவசப் பாடநூல் விநியோகத்தை தொடர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து…