Author: admin

சென்னை: கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ ( Hukum) எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிரகணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை முறையீடு செய்தார். இதை தொடர்ந்து, மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு…

Read More

சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம்- திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவை அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அவை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளன. இதன்படி, தாம்பரம் – திருச்சிராப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06191), செப்.2 முதல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது. திருச்சிராப்பள்ளி – தாம்பரத்துக்கு மேற்கண்ட கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190), செப்.2-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இருமார்க்கமாக தலா 65 சேவைகள் இயக்கப்படஉள்ளன. இதுதவிர, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் சேவை செப்.7-ம் தேதி முதல் நவ.30-ம் தேதிவரை…

Read More

மன அழுத்தம் என்பது நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகும், ஆனால் அது அதிக நேரம் நீடிக்கும் போது, ​​அது உங்கள் ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கும். இந்த பதிலின் மையத்தில் கார்டிசோல் உள்ளது, இது பொதுவாக அழுத்த ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. அட்ரீனல் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடு, இரத்த அழுத்தம் மற்றும் உடலின் சண்டை அல்லது விமான பதில் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.சிறிய வெடிப்புகளில், கார்டிசோல் நன்மை பயக்கும் – நீங்கள் அவசரநிலைகளில் நடந்துகொள்வது அல்லது அழுத்தத்தின் கீழ் எச்சரிக்கையாக இருங்கள். இருப்பினும், கிளீவ்லேண்ட் கிளினிக் மற்றும் ஹெல்த்லைன் ஆகியவற்றால் முன்னிலைப்படுத்தப்பட்டபடி, எடை அதிகரிப்பு, தூக்கக் கலக்கம், சோர்வு, பதட்டம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு கூட நாள்பட்ட உயர் கார்டிசோல் அளவுகள் பங்களிக்கக்கூடும்.உயர்த்தப்பட்ட கார்டிசோலை இயக்குகிறது மற்றும் இயற்கையாகவே அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைப் புரிந்துகொள்வது…

Read More

காஜியாபாத்: உத்தர பிரதேசத்​தின் காஜி​யா​பாத் மாவட்​டம், முராத்​நகரை சேர்ந்த இளம்​பெண்​ணுக்​கும், மீரட் பகு​தியை சேர்ந்த உடற்​கல்வி ஆசிரியர் சிவம் உஜ்​வாலுக்​கும் கடந்த மார்ச் மாதம் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மண​மாகி 6 மாதங்​களே ஆன நிலை​யில் முராத்​நகர் போலீஸ் நிலை​யத்​தில் புது மனைவி நேற்று முன்​தினம் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மணத்​துக்குபிறகு மீரட்​டில் உள்ள கணவர் வீட்​டுக்கு சென்​ற​போது, பாலிவுட் நடிகை நோரா பதேகி போன்று மனைவி வேண்​டும் என்று கணவர் வலி​யுறுத்​தி​னார். என்னை உடற்​ப​யிற்சி கூடத்​துக்கு அனுப்பி தின​மும் 3 மணி நேரம் உடற்​ப​யிற்சி செய்ய நிர்​பந்​தம் செய்​தார். உணவு கட்​டுப்​பாடு என்ற பெயரில் என்னை பசி, பட்​டினி​யில் வாடச் செய்​தார்.நீ உயர​மாக இல்​லை. அழகாக இல்லை என்று கூறி நாள்​தோறும் கணவர் அவமானப்​படுத்தி வந்​தார். தற்​போது எனது தாய் வீட்​டுக்கு வந்​து​விட்​டேன். விவாகரத்து செய்​து​விடு​வதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுகின்றனர்.எனது நகைகளை கணவர் குடும்​பத்​தினர் பறித்து வைத்​துள்​ளனர். கணவர்,…

Read More

சென்னை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். இது கடந்த ஆண்டு வெளியான கூகுள் பிக்சல் 9 மாடலின் அடுத்த வெர்ஷனாக வெளிவந்துள்ளது. கடந்த 2016 முதல் கூகுள் பிக்சல் போன்களை கூகுள் நிறுவனம் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் புதிய மாடல் ‘கூகுள் பிக்சல்’ போன்களை சந்தையில் கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளன. பிக்சல் வாட்ச் 4 மற்றும் பிக்சல் பட்ஸ் 2a-வும் இதோடு அறிமுகமாகி உள்ளன. வழக்கம் போலவே ஆண்டுதோறும் நடைபெறும் கூகுளின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகமாகின. அந்த வகையில் கூகுள் பிக்சல் 10,…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் புதுச்சேரியில் திமுகவுக்கு கிழக்கு கடற்கரைச்சாலையில் சிவாஜி சிலை அருகேயுள்ள கட்சிக்கு சொந்தமான 3000 சதுர அடி இடத்தில் கலைஞர் அறிவாலயம் கட்ட அனுமதி தந்தனர். அதைத்தொடர்ந்து திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு புதுச்சேரி நகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடந்தது. இவ்விழாவில் அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More

உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) என்பது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும், இது கடுமையான சிக்கல்கள் ஏற்படும் வரை குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக உருவாகிறது. இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது மற்றும் காலப்போக்கில் இரத்த நாளங்கள் மற்றும் முக்கிய உறுப்புகளில் சேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால கட்டுப்பாடு இருதய நிகழ்வுகளின் அபாயத்தை கணிசமாகக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், உணவு எவ்வாறு இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது தடுப்பு மற்றும் நிர்வாகத்திற்கு முக்கியமானது. புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையில் சில காலை உணவுகள் மற்றும் இரத்த அழுத்தத்தில் அவற்றின் தாக்கம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.ஏன் காலை காலை உணவு இரத்த அழுத்த கூர்முனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறதுஇரத்த அழுத்தம் இயற்கையாகவே நாள் முழுவதும் மாறுபடுகிறது, ஒரு…

Read More

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதேவேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை அப்புறப்படுத்துவதோடு, ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி…

Read More

புதுடெல்லி: இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14ம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இதனிடையே கடந்த ஏப்​ரலில் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள்…

Read More

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும். உத்தரப் பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு…

Read More