புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய பியூஷ் கோயல், “பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பித்தார். ஏப்ரல் 5 முதல் 10% அடிப்படை வரி அமலில் உள்ளது. அந்த 10% அடிப்படை வரியுடன் மொத்தம் 26% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரி ஏப்ரல் 9-ம் தேதி அன்று அமலுக்கு வர திட்டமிடப்பட்டது. ஆனால், 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் தாக்கம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்தியாவின் நலனை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பலவீனமான பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து, 3-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை…
Author: admin
சென்னை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருடைய தோழி சுபாஷினி தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தானும் கவினும் உண்மையகவே காதலித்ததாகவும். இந்தக் கொலையில் தனது பெற்றோருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். கவினின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தாயும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் கவின் தோழியின் வீடியோ வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான சிறப்பு…
கொத்தமல்லி இலைகள் என்றும் அழைக்கப்படும் கொத்தமல்லி, குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக அங்கீகாரத்தைப் பெறுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், பதட்டத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும் உதவும், இது ஒரு சுவையான அழகுபடுத்தலை விட அதிகமாக இருக்கும். கொரியண்ட்ரம் சாடிவம் ஆலையில் இருந்து பெறப்பட்ட கொத்தமல்லி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளது.மக்கள்தொகையை பாதிக்கும் ஒரு மரபணு பண்பு காரணமாக சிலர் அதன் சுவையை சோப்பு என்று உணர்கிறார்கள், இது உலகளாவிய உணவு வகைகளில் பிரதானமாக உள்ளது. மெக்சிகன், இந்திய, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளில் பிரபலமான கொத்தமல்லி இலைகள் உணவுக்கு துடிப்பான சுவை மற்றும் செயல்பாட்டு ஆரோக்கிய நன்மைகளைச் சேர்க்கின்றன.வீக்கம், பதட்டம் மற்றும் இரத்த சர்க்கரையை குறைப்பதில் கொத்தமல்லி இலைகளின் நன்மைகள்1. இயற்கையாகவே வீக்கத்தைக் குறைக்கிறதுகொத்தமல்லி இலைகள் பயோஆக்டிவ் சேர்மங்கள், பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன, அவை முறையான அழற்சியை…
ராமநாதபுரம்: ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எல்லை தாண்டி மீன்பிடித்தாக படகுகளை பறிமுதல் செய்து, மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அமைச்சர்களிடம் பேசி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை செய்வேன். விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் தொடக்க வேளாண்மை வழங்கப்பட்ட பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.540 கோடி காப்பீடு தொகை அதிமுக ஆட்சியில் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன. ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் காவேரி – குண்டாறு திட்டத்தை அதிமுக ஆட்சியில் மேற்கொண்டோம். ஆனால் திமுக ஆட்சிக்கு…
அதிகாலை 2 மணிக்கு எழுந்து தூங்குவதற்கு சிரமப்படுவது வெறுப்பாக இருக்கும், மேலும் உச்சவரம்பைப் பார்த்துக் கொள்வது மோசமடைகிறது. ஆனால் டிக்டோக்கில் இழுவைப் பெறும் ஒரு புதிய வைரஸ் தந்திரம் ஆச்சரியமான நிவாரணத்தை அளிக்கும். பயனர்களால் “வூடூ மேஜிக்” என்ற புனைப்பெயர் கொண்ட இந்த நுட்பம் உங்கள் கண்களை மூடிக்கொண்டு செய்யப்படும் மெதுவான கண் அசைவுகளை உள்ளடக்கியது. இது ஒற்றைப்படை என்று தோன்றலாம், ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் அதன் பின்னால் உண்மையான நரம்பியல் தகுதி இருப்பதாகக் கூறுகிறது. தூக்க நிலைகள், தளர்வு மற்றும் கண் இயக்கம் சிகிச்சை குறித்த ஆராய்ச்சியிலிருந்து வரைந்து, இந்த எளிய பழக்கம் மனதை மீண்டும் தூக்கத்தில் எளிதாக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உங்கள் அடுத்த தூக்கமில்லாத இரவின் போது அதை முயற்சிப்பதற்கு முன்பு என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இங்கே.வைரஸ் தூக்க இயக்கம், அக்கா வூடூ மேஜிக் தந்திரம்: எளிமையான கண் இயக்கங்கள் உங்களை…
பாரிஸ்: கோட்பாடு குவாண்டம் இயக்கவியல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முன்மொழியப்பட்டதிலிருந்து அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது, ஆனாலும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது மற்றும் உண்மையில் என்ன நடக்கிறது என்பது குறித்து இயற்பியலாளர்கள் ஆழமாகப் பிரிக்கப்படுகிறார்கள் என்று நேச்சர் இதழில் ஒரு ஆய்வு புதன்கிழமை கூறியது.”வாயை மூடிக்கொண்டு கணக்கிடுங்கள்!” ஒரு பிரபலமான மேற்கோள் குவாண்டம் இயற்பியல் இது உலகின் பெரிய முரண்பாடுகளில் ஒன்றை அவிழ்க்க போராடும் விஞ்ஞானிகளின் விரக்தியை விளக்குகிறது.கடந்த நூற்றாண்டாக, குவாண்டம் இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட சமன்பாடுகள் மிகச் சிறிய பொருள்களின் நடத்தை தொடர்ந்து மற்றும் துல்லியமாக விவரித்தன.இருப்பினும், கணிதத்தின் பின்னால் உள்ள உடல் யதார்த்தத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிக்கல் தொடங்கியது, இயற்பியலின் கிளாசிக்கல் கொள்கைகள் அணுக்களின் மட்டத்தில் உள்ள விஷயங்களுக்கு பொருந்தாது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தபோது.குழப்பமாக, ஃபோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் துகள்கள் மற்றும் அலைகள் இரண்டையும்…
உடுமலை: உடுமலை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற வகையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து (58). அவர் உள்பட அந்த மலைகிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் மாரிமுத்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, மூணாறு அருகே தங்கியிருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கச் சென்றுள்ளார் மாரிமுத்து. இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் அழைக்கவே, நேற்று கேரள மாநில அரசுப் பேருந்தில் ஏறி உடுமலை சென்று கையெழுத்திட்டு மீண்டும் உடுமலையில் இருந்து மூணாறுக்கு பேருந்து ஏறியுள்ளார். சின்னாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே பேருந்து வந்தபோது. உடுமலைப்பேட்டை வனத்துறை ஊழியர்கள் பேருந்தில் இருந்து…
கல்லீரல் நோய் பெரும்பாலும் அமைதியாக முன்னேறுகிறது, சில அல்லது ஆரம்ப அறிகுறிகள் இல்லை – ஆயினும் உங்கள் தோல் மிகவும் தாமதமாகிவிடும் முன் உங்களை எச்சரிக்க முயற்சிக்கக்கூடும். ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட்-பயிற்சி பெற்ற ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி கருத்துப்படி, தோல் கல்லீரல் செயலிழப்பின் நுட்பமான ஆனால் தீவிரமான குறிகாட்டிகளை வெளிப்படுத்த முடியும். கண்களின் மஞ்சள் நிறத்தில் இருந்து தொடர்ச்சியான அரிப்பு வரை, இந்த புலப்படும் அறிகுறிகள் சிரோசிஸ் அல்லது ஹெபடைடிஸ் போன்ற ஆழமான சிக்கல்களை சுட்டிக்காட்டலாம். ஆரம்பகால அங்கீகாரம் மற்றும் மருத்துவ மதிப்பீடு ஒரு முக்கியமான வித்தியாசத்தை ஏற்படுத்தும். கல்லீரல் சிக்கலைக் குறிக்கக்கூடிய ஐந்து தோல் தொடர்பான அறிகுறிகள் இங்கே உள்ளன, அவை ஒருபோதும் கவனிக்கப்படக்கூடாது.கல்லீரல் நோய் எச்சரிக்கை: கடுமையான சிக்கலைக் குறிக்கும் 5 தோல் அறிகுறிகள்1. தோல் மற்றும் கண்களின் மஞ்சள் (மஞ்சள் காமாலை)கல்லீரல் செயலிழப்பின் மிகவும் உன்னதமான மற்றும் புலப்படும் அறிகுறிகளில் ஒன்று மஞ்சள்…
2022-ல் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான ‘ஜெர்சி’ படத்தை இயக்கி கவனம் பெற்றார் கவுதம் தின்னனூர். இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் கைகோத்திருக்கும் படம்தான் ‘கிங்டம்’. முரட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் கலந்து ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சூரி (விஜய் தேவரகொண்டா). சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன தனது அண்ணன் சிவாவை (சத்யதேவ்) தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். தன்னுடைய உயரதிகாரியை அறைந்ததால் ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகிறார். இலங்கைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு தீவில் உள்ள பழங்குடியினருடன் வாழ்ந்து வரும் தன் அண்ணனை கண்டுபிடிக்கவும், அந்த பழங்குடியினருடன் கலந்து, அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கும்பலை கண்டறியும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் அண்ணனை சூரி கண்டுபிடித்தாரா? தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றினாரா என்பதற்கு விடை சொல்கிறது ‘கிங்டம்’.…
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்றாவதாக, தேர்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றார். கூட்டணி முறிவுக்கான காரணத்தைக் கேட்டபோது, “காரணம் நாடு அறிந்ததே. அதை யாரும் சொல்லத் தேவையில்லை. பாஜக எங்களுக்கு என்ன…