ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில் 53 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் லிடியா பஷரேவா 40 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் ஷா 250.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபினவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
Author: admin
சென்னை: இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். “எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386! சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சியா விதைகள் புதிய ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார். ஆரோக்கிய குருக்கள் முதல் சுகாதார செல்வாக்கு செலுத்துபவர்கள் வரை, எல்லோரும் சியா விதைகளைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். எடை இழப்பு முதல் ஆரோக்கியமான குடல் வரை, சியா விதைகளின் நன்மைகள் ஏராளமாக உள்ளன. சிலர் தங்கள் நாள் சியா விதைகளை தண்ணீரில் குடிக்கத் தொடங்குகையில், மற்றவர்கள் தங்கள் இனிப்பை தயிரில் நனைத்த சியா விதைகளுடன் மாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஆரோக்கியமானவர்களா? இந்த கூற்றுக்கள் உண்மையா? கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, சியா விதைகளின் நன்மைகளை விளக்கியுள்ளார், மேலும் அவற்றைப் பற்றிய சில கட்டுக்கதைகளையும் நீக்கிவிட்டார். சியா விதைகளின் ஊட்டச்சத்து மதிப்பு சியா விதைகள் பாலைவன ஆலையிலிருந்து பெறப்பட்டவை சால்வியா ஹிஸ்பானிகா. இந்த சிறிய கருப்பு விதைகள் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஆகியவற்றின்…
புதுடெல்லி: விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வெள்ளிக்கிழமை விண்வெளியில் இருந்து இந்தியாவின் மூச்சடைக்கக் கூடிய நேரத்தைக் பகிர்ந்து கொண்டார், குடிமக்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் தனது பயணத்தின் பார்வையை வழங்கினார்.X இல் கிளிப்பை இடுகையிட்டால், சுக்லா எழுதினார்: “திரை பிரகாசத்துடன் நிலப்பரப்பில் வீடியோவைப் பாருங்கள். சுற்றுப்பாதையில் இருந்தபோது நான் படங்களையும் வீடியோக்களையும் கைப்பற்ற முயற்சித்தேன், இதன் மூலம் இந்த பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். இது பாரதத்தின் விண்வெளியில் இருந்து ஒரு காலக்கெடு வீடியோ. ஐ.எஸ்.எஸ். இந்திய பெருங்கடலில் இருந்து வடகிழக்கு, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் நகர்கிறது.”வீடியோவில் காணப்படும் ஊதா நிற ஃப்ளாஷ்கள் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை, அதைத் தொடர்ந்து இமயமலை பார்வைக்கு மங்கலாக இருந்தது, பின்னர் சுற்றுப்பாதையில் சூரிய உதயம் – அனைத்தும் பளபளக்கும் நட்சத்திரங்களின் பின்னணியில். “இது உண்மையிலேயே ஒரு அழகான காட்சியாக மாறும் இயற்கை கூறுகளின் மயக்கும் நடனம்”…
புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிமாநில தமிழ்ச் சங்க பள்ளிகளுக்கு பாடநூல்களை தொடர்ந்து இலவசமாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களாலும் தமிழ் கல்வி அமைப்புகளாலும் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மற்றும் தமிழ் பாடப்பிரிவுக்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இவை நீண்ட வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த இலவச விநியோகத்தை நடப்பு வருடம் முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்திருந்தது. இது தொடர்பான செய்தி கடந்த 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் வெளியானது. இலவச விநியோகம் ரத்து செய்யப்பட்டதற்கு பரவலாக கண்டனம் எழுந்தது. இதன் தாக்கமாக, தற்போது தமிழ்நாடு அரசு தனது முடிவை மாற்றி இலவசப் பாடநூல் விநியோகத்தை தொடர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து…
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ எச்சரித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அந்தந்த மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் மூலம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தெற்கு மண்டல அணி துலிப் கோப்பைக்கான அணியில் ராகுல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், முகமது சிராஜ் போன்ற டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்யாமல் விட்டதுதான் பிசிசிஐ-யின் இந்தக் கண்டிப்புக்குக் காரணம். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஒரு மாத கால ஓய்வில் இருக்கின்றனர். பிசிசிஐயின் செயல்பாடுகள் தலைவர் அபய் குருவில்லா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு டெஸ்ட் வீரர்களை, மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார். “உள்நாட்டுத் தொடர்களின் பெருமையையும் தரத்தையும் தக்க வைக்க…
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகளை, சென்னை காவல் துறை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில், அன்றைய தினம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்பட உள்ளன. பின்னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் காவல் கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), பிரவேஷ்குமார் (வடக்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில்,…
இது நாக்கில் பாதிப்பில்லாத அழற்சி என்றாலும், இது மேற்பரப்பு பகுதியை பாதிக்கிறது. இந்த நிலையில், நாக்கு பொதுவாக நாக்கில் இளஞ்சிவப்பு-வெள்ளை புடைப்புகளால் மூடப்பட்டிருக்கும். டாக்டர் வாஸ் இந்த நாக்கு நிலைக்கு இணைக்கப்படக்கூடிய பிற நிபந்தனைகளை பட்டியலிடுகிறார், அதாவது வீக்கம், ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை, நோயெதிர்ப்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்.இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிவதற்கு டாக்டர் வாஸ் பல சோதனைகளை பரிந்துரைக்கிறார்: சிஆர்பி, ஏ.என்.ஏ, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம்.டாக்டர் வாஸின் வார்த்தைகளில்: உங்கள் நாக்கு உங்களுக்குக் காண்பிப்பதை புறக்கணிக்காதீர்கள். இது நிலையான ஆய்வகங்களில் காண்பிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இது ஆழ்ந்த செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஏதாவது முடக்கப்பட்டால் ஆழமாக சோதிக்கவும்.
பிலாஸ்பூர்: நாய் அசுத்தம் செய்த மதிய உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார்-படாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள், நாய் அசுத்தம் செய்த உணவை 84 மாணவர்களுக்கு வழங்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. விவரம் அறிந்த பின்னர் அந்த மாணவர்களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த விவகாரத்தை அரசின் கவனக்குறைவு என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: நாய் அசுத்தம் செய்த உணவைச்…
சென்னை: 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி. மேலும் இதன் மூலம் இந்த சீசனில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய அளவில் விரைவாக பந்தய இலக்கை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வகையில் ஜப்பானின் யூகி ஜோசப் நகாஜிமா (44.84 விநாடிகள்), கத்தாரின் அமர் இஸ்மாயில் இப்ராஹிம் (44.90…