Author: admin

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவ்னி ஜோடி தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பாவ்னி. தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன தம்பி’ தொடரின் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 மாதங்களிலேயே பிரதீப் குமார் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். இதன்பிறகு 2022ஆம் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார். இதே போட்டியில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற அமீர் உடன் பாவ்னிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து…

Read More

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அண்மையில் 9 பேரும் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டார். தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும்…

Read More

மும்பை: நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணத்தைத் தவிர இதர வகைகளில் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை (என்ஐஎன்எப்ஆர்ஐஎஸ்) இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை மண்டல அளவில் அதன் ரயில்வே மேலாளர்களே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மும்பை-மன்மட் பஞ்சவதி விரைவு ரயிலில் உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது புசவால் ரயில்வே மண்டலம் மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ரயிலில் பொருத்தப்பட்ட முதல் ஏடிஎம் ஆகும். ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதும் இந்த ஏடிஎம்மிலிருந்து பயணிகள் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏடிஎம் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பொருத்தப்பட்டிருந்தாலும், அனைத்து பயணிகளும் அதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமல்லாமல்,…

Read More

21 வயது இந்திய மாணவர், ஹர்சிம்ரத் ரந்தாவா ஒன்ராறியோவின் ஹாமில்டனில் புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது தவறான தோட்டாவால் தாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். ரந்தாவா, ஒரு மாணவர் மொஹாக் கல்லூரிஇரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஷாட்கள் சுடப்பட்டபோது ஒரு அப்பாவி பார்வையாளராக இருந்தார்.படப்பிடிப்பில் ரந்தாவா ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திய ஹாமில்டன் பொலிசார் தற்போது இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணியளவில் அப்பர் ஜேம்ஸ் ஸ்ட்ரீட் மற்றும் சவுத் பெண்ட் சாலை அருகே நிகழ்ந்தது.பொலிசார் கூறுகையில், ஒரு கருப்பு செடானில் ஒரு பயணி ஒரு வெள்ளை செடான் குடியிருப்பாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதனால் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது, இது ரந்தாவாவையும் தாக்கியது. துணை மருத்துவர்களும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் பின்னர் அவர் துப்பாக்கிச்…

Read More

பஸ்தர்: மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநில எல்லைகள் சந்திக்கும் மலைப் பகுதியை பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். இந்த ஆபரேஷனுக்கு ‘‘தீர்க்கமான நடவடிக்கை’’ என பெயிரிடப்பட்டுள்ளது. இதில் சரணடைவது அல்லது இறப்பது என்ற இரு வழிகள் மட்டுமே மாவோயிஸ்ட்டுகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்காக மகாராஷ்டிராவில் சி-60 கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டது. அதேபோல் தெலங்கானா காவல்துறையில் க்ரேஹவுண்ட் என்ற பெயரில் சிறப்பு படை உருவாக்கப்பட்டது. சத்தீஸ்கரில் டிஆர்ஜி என்ற பெயரில் சிறப்பு படை உள்ளது. இது தவிர மத்திய அரசின் சிஆர்பிஎப் படையும் நக்சல் ஒழிப்பில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஈடுபட்டுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல்…

Read More

Last Updated : 10 Dec, 2024 11:26 AM Published : 10 Dec 2024 11:26 AM Last Updated : 10 Dec 2024 11:26 AM Sora மாடல் ஜெனரேட் செய்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் கலிபோர்னியா: டெக்ஸ்டுகளை வீடியோவாக மாற்றும் Sora ஏஐ வீடியோ ஜெனரேட்டரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். அது குறித்து பார்ப்போம். மாயாஜால கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் வரும் காட்சி போல ஏஐ தொழில்நுட்பம் மாயை நிகழ்த்தி வருகிறது. கதை, கட்டுரை, கவிதை, படம் போன்றவை மட்டுமல்லாது பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்டுகளுக்கு (ப்ராம்ப்ட்) ஏற்ப வீடியோவையும் ஜெனரேட் செய்து வருகிறது. அப்படி வீடியோவை ஜெனரேட் செய்து தரும் Sora ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த பிப்ரவரி மாதம் இதனை சோதனை முயற்சியாக ஓபன் ஏஐ வெளியிட்டது. குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே அதனை பயன்படுத்தும்…

Read More

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற வேதியியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இறுதிநாளில் வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘1, 2 மதிப்பெண் வினாக்களை தவிர 3, 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தன. வழக்கமாக 2-ம் தொகுதி பாடப்…

Read More

முலான்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். பஞ்சாபின் முலான்பூரிலுள்ள மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆர்யா 15 பந்துகளில் 22 ரன்கள் விளாசி கிருணல் பாண்டியா பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் பிரப்சிம்ரன் 17 பந்துகளில் 33 ரன்கள் (5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து கிருணல் பாண்டியா பந்துவீச்சில், டிம் டேவிட்டிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார்.…

Read More

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி வருகின்றனர். வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறி செயல்படுவதாக கூறி, வாஷிங்டன், நியூயார்க், ஹுஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சல் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ட்ரம்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். டிரம்பின் நடவடிக்கை குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “ ஒரு சிலரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளால் மற்றும் மூர்க்கத்தனமான நிர்வாகத்தால் அமெரிக்காவின் நட்பு நாடுகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரின் செயல் இங்குள்ள மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்துகிறது. அவர் (ட்ரம்ப்) நமது அரசமைப்பு முறையை அழிக்கிறார்” என்று தெரிவித்தனர். தற்போது…

Read More

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி. அன்னதானம், எஸ்.வி. பிராணதானம், ஸ்ரீ எஸ்.வி. வித்யாதானம் ஆகிய அறக்கட்டளைகளுக்கு ரூ.1.23 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசா கன்ஸ்டிரக்‌ஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இதற்காக வரைவோலைகளை திருமலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினர். இதில் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 11,111, எஸ்.வி. பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சத்து 11,111, எஸ்.வி வித்யாதானம் அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சத்து 11,111 என நன்கொடை வழங்கப்பட்டது. இதேபோல் திருப்பதியை சேர்ந்த கே.எஸ்.பி.டாக்கீஸ் நிறுவன தலைவர் கேதன் சிவபிரீதம் ஸ்ரீ வெங்கடேஸ்வர நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Read More