மும்பை: ஆட்டோமொபல் துறைக்கு நிம்மதி அளிக்கும் விதமாக அத்துறை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது. முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டு எண் 2.10 சதவீதம் அதிகரித்து (1,577 புள்ளிகள்) 76,734 புள்ளிகளிலும், நிப்டி 2.19 சதவீதம் (500 புள்ளிகள்) உயர்ந்து 23,328 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இருப்பினும், சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து காணப்படவே அதிக வாய்ப்புள்ளது என்பதே இத்துறை சார்ந்த வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 4.6 சதவீதம் உயர்ந்தது. நேற்றைய செலாவணி சந்தையைப் பொருத்தவரை தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்ந்து…
Author: admin
எங்கள் காலையை சரியாகப் பெறுவது ஒரு நீண்ட, சோர்வான நாளுக்கு முன்னால் வென்ற போர் பாதி. இது சரியான நேரத்தில் எழுந்திருக்கிறதா, பவர் பேக் செய்யப்பட்ட காலை உணவை வைத்திருப்பது, சில உடற்பயிற்சிகளில் இறங்குவது அல்லது சில சூரிய ஒளியில் ஊறவைத்தாலும், மகிழ்ச்சியான காலை உங்களுக்கு வேலையிலோ அல்லது வீட்டிலோ உற்பத்தி செய்ய உதவுகிறது. இருப்பினும், உங்கள் வழக்கமான காலை வழக்கத்தைத் தவிர, சதுகுருவின் கூற்றுப்படி, எழுந்த பிறகு நீங்கள் இதைச் செய்ய வேண்டும் – இங்கே ஏன் …
இந்தியன்-ஆரிஜின் மருத்துவர் மும்தாஸ் படேல் (படக் கடன்: ராயல் கல்லூரி மருத்துவர்கள்) இந்திய மூலமாக டாக்டர் மும்தாஸ் படேல் 123 வது தலைவராக மாறிவிட்டது ராயல் கல்லூரி மருத்துவர்கள் (ஆர்.சி.பி), 40,000 உலகளாவிய உறுப்பினர்களுடன் இங்கிலாந்தின் தொழில்முறை மருத்துவ அமைப்பை வழிநடத்தும் ஒரு மதிப்புமிக்க நிலை. வடமேற்கு இங்கிலாந்தின் லங்காஷயரில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த பெற்றோருக்கு பிறந்த டாக்டர் படேல் மான்செஸ்டரில் ஆலோசகர் நெப்ராலஜிஸ்டாக பணிபுரிகிறார்.ஆர்.சி.பி அவளை “அறிவித்தது”முதல் இந்தோ-ஆசிய முஸ்லீம் ஜனாதிபதி”16 ஆம் நூற்றாண்டிலிருந்து அமைப்பின் வரலாற்றில் ஐந்தாவது பெண் தலைவர்.” டாக்டர் மும்தாஸ் படேல் ராயல் மருத்துவர்களின் கல்லூரியின் 123 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘கல்லூரியை நவீனமயமாக்குவதற்கும், ஆர்.சி.பியை எங்கள் உறுப்பினர் மற்றும் மருத்துவத்தின் குரலாக மீண்டும் நிறுவுவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், “என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தல் திங்களன்று முடிந்தது, அவரது நான்கு ஆண்டு காலத்தின் தொடக்க தேதி உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது. “ஜனாதிபதியாக, ஆர்.சி.பியை அது…
சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியா 2 அணைகளை அப்பகுதியில் கட்டி வருவதாக சிந்து நதிக்கான முன்னாள் ஆணையரும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப ஆலோசகருமான ஏ.கே.பஜாஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வுக்கான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதைத்தவிர அட்டாரி எல்லை பகுதி மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து போன்ற பல முக்கிய முடிவுகளையும் இந்தியா எடுத்துள்ளது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, சிந்து நதி அமைப்பில் பகுல்துல் மற்றும் பர்சார் ஆகிய இரண்டு புதிய நீர் சேமிப்பு அணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த இரண்டு நீர்…
சென்னை: இந்தியாவில் லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா 4 அறிமுகமாகி உள்ளது. இது என்ட்ரி செக்மென்ட் பயனர்களை கருத்தில் கொண்டு சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும். சிறப்பு அம்சங்கள்: 6.56 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி டிஸ்பிளே யுனிசோக் டி606 ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் 4ஜிபி ரேம் 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ் பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா 5,000mAh பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜர் …
காஞ்சிபுரம்: “உயர் கல்வி முடிக்கும் மாணவர்கள் சமூக முன்னேற்றதுக்கு ஏதாவது பங்காற்ற வேண்டும்” என்று முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி ஆண்டு விழா இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் முருககூத்தன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இறையன்பு பேசியது: “மாணவர்கள் உயர் கல்விக்கு வரும்போதுதான் ஒரு படிப்பை ஆழ்ந்து படிக்கின்றனர். பள்ளியில் பல்வேறு பாடங்களை படிக்கிறோம். ஆனால் உயர் கல்வியில் புலமை பெரும் வகையில் ஒரு குறிப்பிட்ட பாடத்தை ஆழ்ந்து படிக்கிறோம். உயர் கல்வியில் சிறந்து படிப்பவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக முடியும். பல நாடுகளுக்கு செல்வதால் கிடைத்த புகழைவிட கல்வி வளர்ச்சியால் கிடைத்த புகழ்தான் முக்கியமானது. கிரேக்கத்துக்கு பணத்தாலா புகழ் கிடைத்தது. அங்கு பல்வேறு தத்துவஞானிகள் தோன்றினர். கல்வியால்தான் கிரேக்கம் புகழ் பெற்றது. இந்த விழாவில் மாணவர்களை பார்க்கும்போது திருவிழாக் கூட்டத்தை பார்ப்பதுபோல் உள்ளது.…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷி நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி மிரளச் செய்தார். அவரது புயல் வேக ஆட்டத்தால் 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பிஹார் மாநில தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமஸ்திபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் வலுவான மும்பை அணிக்கு எதிராக களமிறங்கினார். யு-19 இந்திய அணிக்காகவும் சூர்யவன்ஷி விளையாடி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா ஏ அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4 நாட்கள் ஆட்டத்தில் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க…
கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு கொழும்புவில் பேசிய அதிபர் அனுர திசநாயக்க, “வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்த கொள்கையின் தொடக்கமாக பிரதமர் மோடியும் நானும் பல்வேறு மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் சாத்தியமான கூட்டாண்மை குறித்து விவாதித்தோம். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்துக்காக இந்திய அரசு வழங்கியுள்ள ரூ.300 கோடி நிதியுதவிக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை அரசு அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடி) இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை வழங்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த…
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14-ம் தேதி மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக அங்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஐயப்ப பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சாரலாகப் பெய்த மழை வலுவடைந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பத்தினம்திட்டா, ஆலுவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ’ஏஸ்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே, தற்போது மே 23-ம் தேதி ‘ஏஸ்’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் வியாபார பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இப்படத்தின் பாடல்களை ஜஸ்டின் பிரபாகரன் உருவாக்கி இருக்கிறார். பின்னணி இசையமைக்கும் பணிகளை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கும் இதனை ஆறுமுக குமாரே தயாரித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக மலேசியாவிலேயே நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்…
