சென்னை: ‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மே 1 திரைக்கு வருகிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சூர்யா, “படத்தில் ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இருக்கிறது. அதில் நாங்கள் நடனம் ஆடுவோம், சண்டை போடுவோம், விவாதம் செய்வோம். படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும் அதில் இருப்பார்கள். அது ஒரு எமோஷனலான காட்சி. அது…
Author: admin
சென்னை: மே தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 1-ம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகளின் படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் மே 1-ம் தேதி மூடப்படும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: மின் வாகன உற்பத்தியாளரான ஜிதேந்திரா இ.வி. நிறுவனம் ஹைட்ரஜன், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து வருகிறது. இதுகுறித்து ஜிதேந்திரா இ.வி.நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம்கிட் ஷா கூறியதாவது: அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிவேக மற்றும் குறைவேக இருசக்கர மின் வாகனங்களை தயாரித்து வருகிறோம். 2024-25 நிதியாண்டில் 4,200 வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இப்போது 25 நகரங்களில் 100 விநியோகஸ்தர்கள் உள்ளனர். கூடுதலாக 100 விநியோகஸ்தர்களை நியமித்து வருவதால் நடப்பு நிதியாண்டில் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, உற்பத்தி மேம்பாட்டுக்காக மேலும் ரூ.25 கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம். இப்போது ‘ஹைட்ரிக்ஸ்’ என்ற பெயரில் புதிய மாடலை தயாரித்து வருகிறோம். இதை வரும் 2028-ல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது ஹைட்ரஜன் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில்…
ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரம் போன்ற பல கலாச்சாரங்களில், மீன்கள் தங்கள் உரிமையாளர்களுக்கு செல்வம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. வீட்டிலேயே வைத்திருக்க அதிர்ஷ்டசாலி என்று கருதப்படும் இதுபோன்ற சில மீன்களை இங்கே பட்டியலிடுகிறோம்:
பிரதிநிதி படம்/AI உருவாக்கப்பட்டது உங்கள் ஆவணங்களை எனக்குக் காட்டு! இந்த ‘கோரிக்கை’ அமெரிக்காவிற்கு குடியேறியவர் – வேலையில் சட்டப்பூர்வமாக இருப்பவர்கள் அல்லது படிப்பு விசாவில் இப்போது, எந்த நேரத்திலும், எங்கும் எதிர்கொள்ளக்கூடியவர்கள் உட்பட.ஒரு வலுவான வார்த்தையில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்) கூறியுள்ளது: “18 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்கள் இந்த ஆவணங்களை எல்லா நேரங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிர்வாகம் டிஹெச்எஸ்ஸை அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது, இணக்கமற்ற சரணாலயம் இருக்காது.”ஒரு அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் டிரம்ப் நிர்வாகத்தை ஒரு சர்ச்சைக்குரிய புதிய விதியுடன் முன்னேற அனுமதித்துள்ளார், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் மத்திய அரசாங்கத்தில் பதிவுசெய்து ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ஏப்ரல் 11 முதல் வெள்ளிக்கிழமை வரை நடைமுறைக்கு வரும் இந்த கட்டுப்பாடு, அமெரிக்கா முழுவதும் குடியேறியவர்களுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.வாக்கெடுப்புபுதிய அமெரிக்க புலம்பெயர்ந்த பதிவு விதி பற்றி நீங்கள்…
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் உரி, நவுகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ‘பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை துப்பாக்கிச் சூடு நீடித்தது. ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது’ என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய, பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
சென்னை: இந்தியாவில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது விவோ Y300 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் விவோ Y300 பிளஸ் மாடல் போன் இந்தியாவில் அறிமுகமான நிலையில் தற்போது அதன் ஸ்டாண்டர்ட் மாடல் வெளிவந்துள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது. விவோ Y300 சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் AMOLED பன்ச்-ஹோல் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட் பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது.…
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற இயற்பியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் இயற்பியல் வினாத்தாள் சற்று கடினமாகவும், பொருளியல் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘இயற்பியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் கேள்விகளில் சில கடினமாக இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சிக்கு சிக்கல் இருக்காது. அதேபோல், கலைப்பிரிவு பாடமான பொருளியல் கேள்வித்தாள் எளிதாக இருந்தது’’என்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள்…
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட் டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அக்சர் படேல் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்களும் அஷுதோஷ் சர்மா 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் விளாசினர். கருண் நாயர் 18 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களும், கே.எல்.ராகுல் 14 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 28 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், அபிஷேக் போரெல் 9 பந்துகளில், 18 ரன்களும்…
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். முதலில் 26 சதவீத வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டு 27 சதவீத வரி விதிப்பு என்பதை வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், தனிப்பட்ட பரஸ்பர அதிக வரிவிதிப்பான 16 சதவீதம் ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறிவருகிறார். குறிப்பாக, அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான ஏப்ரல் 2-ம் தேதி…
