இயற்கையும் ஆயுர்வேதமும் நமது ஆரோக்கியத்தை ஆதரிக்க எளிய மற்றும் சக்திவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த பொருட்களை எங்களுக்கு வழங்கியுள்ளன, மேலும் எங்கள் சமையலறைகளில் பெரும்பாலும் காணப்படும் மூலிகைகளிலிருந்து மிகவும் பயனுள்ள சில தீர்வுகள் வருகின்றன. பிராமி, அஸ்வகந்தா, ஜடமன்சி போன்ற மூலிகைகள் எங்கள் நரம்பு மண்டலத்தை ஆதரிக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன, மேலும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைக்க உதவுகின்றன.மூலிகைகள் நன்மைகள்நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறதுமன தெளிவை மேம்படுத்துகிறதுதூக்கத்திற்கு உதவுகிறது, குறிப்பாக இரவில்
Author: admin
சென்னை: அமித் ஷா 1000 முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் நேற்று முன்தினம் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசை அகற்றுவோம் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதிகார மமதையுடன் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டுமென்று கூறும் அமித் ஷா, அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அதிமுக தலைமையோ,உள்துறை அமைச்சரின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பொருந்தாக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள். திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எந்த வழக்கும், எந்த நீதிமன்றத்திலும்…
சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்களூரு புகழேந்தி நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அண்ணாமலைக்கு தனி செல்வாக்கு இருந்தது. ஆனால், தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று அவர் பேசுகிறார். ஏன் இப்படித் தடுமாறிவிட்டார் என்று தெரியவில்லை. வடக்கில் இருந்து 100 தலைவர்கள் தமிழகம் வந்தாலும், இங்கு ஆட்சி அமைக்க முடியாது. விஜய் மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்தனர். இதை யாராலும் மறுக்க முடியாது. எங்களுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என்று திமுக அமைச்சர் ஒருவர்கூறுகிறார். ஆனால், தற்போது சீமானுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. அதேபோல, வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி. வெளியில் வராமல் அரசியல் செய்ய முடியாது. விஜய்க்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்கள்? கட்சி தொடங்கிய 7 மாதங்களில் என்டிஆர் ஆட்சி அமைத்தார். அரசியலில் எதுவும் நடக்கும்.
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 10,850 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களுக்கு பிறகு உபரிநீர் வெளியேற்றப்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கு மட்டும் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், உபரிநீர் திட்டத்தில் ஏரிகளுக்கும் தண்ணீர்…
மதுரை: குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் குடியிருப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில், வீடுகளில் சேரும் குப்பையை மட்டும் கொட்ட வேண்டும். தனியார் மற்றும் அரசுமருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் தரம் பிரித்து, அவர்களிடம் வந்து சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கடந்த காலத்தில் வைகை ஆறு, கால்வாய்களில் மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் கொட்டினர். ஆணையர் சித்ரா அதிரடி நடவடிக்கை எடுத்து, தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகு, ஓரளவு இதுபோன்று மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி 35-வது வார்டில் உள்ள செண்பகத் தோட்டம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து அப்பகுதி சுகாதார ஆய்வாளர், மாநகராட்சி நகர் நல அலுவலர் இந்திராவுக்கு…
திருச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது, விலை கட்டுப்பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்கி, குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்குக்கொடுத்தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஆக. 30-ல் ஓய்வுபெறுகிறார். ஆனால், அடுத்த டிஜிபிக்கான பெயர்ப் பட்டியலை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான வடம்பிடித்து தேர் இழுத்தனர். அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளியம்மனும் தனித்தனி வாகனங்களில் வீதியுலா சென்றனர். விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சுவாமி குமரவிடங்க பெருமான் தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ரதவீதிகள் சுற்றி வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து, வள்ளியம்மன்…
சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சட்டம்- ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபிக்கள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித்தேவ் வான்கடே என அடுத்தடுத்து பட்டியலி்ல் உள்ளனர். வழக்கமாக புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி பணியிடம் காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கும். அதில், 3 பேர் பட்டியலை…
புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: ‘ஆர்யபட்டாவில் இருந்து ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை’ என்பதே இந்த ஆண்டு விண்வெளி தினத்தின் கருப்பொருள். கடந்த 2023-ல் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனை படைத்தோம். அதை தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த…
சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆக.29-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது. அதை பின்பற்றி, விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி முடிக்க வேண்டும். கைப்பந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப் பந்து,மேசைப் பந்து, கயிறு தாண்டுதல், கோ-கோ போன்ற போட்டிகளை நடத்தலாம்.மேலும், இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…