பூமியின் காடுகள் நமது கிரகத்தை வாழக்கூடியதாக வைத்திருப்பதற்கு முக்கியமானது. “பூமியின் நுரையீரல்” என்று சுதந்திரமாக குறிப்பிடப்படுகிறது, அவை உலகின் மூன்றில் ஒரு பகுதியைப் பற்றி போர்வை செய்கின்றன, மேலும் வானிலை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.6 பில்லியன் மெட்ரிக் டன் – காற்றிலிருந்து ஏராளமான கார்பன் டை ஆக்சைடு (CO₂) காடுகள் எடுத்துக்கொள்கின்றன, நாசா கூறுகிறது – மற்றும் ஆக்ஸிஜனை வெளியேற்றும், இது பூமியில் வாழ்க்கையை சாத்தியமாக்குகிறது.வன கார்பன் மதிப்பீட்டைப் படிக்க ESA பயோமாஸ் செயற்கைக்கோளைத் தொடங்கியதுESA இன் கூற்றுப்படி, இந்த சவாலை எதிர்கொள்ள பயோமாஸ் செயற்கைக்கோள் ஏப்ரல் 29, 2025 செவ்வாய்க்கிழமை செவ்வாயன்று சுற்றுப்பாதையில் அனுப்பப்படுகிறது, பிரஞ்சு கயானாவின் க ou ரோவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஒரு வேகா-சி ராக்கெட்டில் 11:15 CEST (06:15 உள்ளூர் நேரம்).ESA இன் பயோமாஸ் மிஷன் வேகா-சிகாடுகள் மற்றும் காலநிலை ஆய்வுகளை கண்காணிப்பதில் ஒரு பெரிய…
Author: admin
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் காலக் கெடு விதித்தது. அதன்படி கடந்த 29-ம் தேதி கெடு முடிந்தது. அன்றைய தினம் இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா எல்லை வழியாக வெளியேறினர். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,376 இந்தியர்கள் தாய்நாடு திரும்பினர்.
டென்னை: கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது என்றும் டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல. 2024-25ஆம் ஆண்டில் 9.50% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. இப்போது ரூ.139, அதாவது 4.41% மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில்,…
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 3-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.68,480க்கு அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு பவுனுக்கு ரூ.1,280 விலை குறைந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில்…
ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில் முதல் திங்கட்கிழமை உயர் ஃபேஷன் காய்ச்சல் கனவாக மாறும் மெட் காலா நியூயார்க் நகரத்தை எடுத்துக்கொள்கிறது. கோச்சர் குழப்பத்தை சந்திக்கும் இடம், பிரபலங்கள் முழு அவாண்ட்-கார்டுக்குச் செல்கிறார்கள், மேலும் கருப்பொருளை யார் நகங்கள் (அல்லது தோல்வியடைகிறார்கள்) பார்க்க உலகம் கூட்டாக காத்திருக்கிறது. அந்த வகையான ஃபேஷன் மரபு மூலம், ஒவ்வொரு ஏ-லிஸ்டரும் அழைப்பிற்காக துருவிக் கொள்ளும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.ஆனால் இங்கே உதைப்பவர்: ஹாலிவுட் வரலாற்றில் மிகப் பெரிய பெயர்கள் சில ஒருபோதும் அந்த சின்னச் சின்ன மெட் படிகளை நடத்தவில்லை. நாங்கள் புராணக்கதைகள், உலகளாவிய இதயத் துடிப்புகள் மற்றும் உண்மையான ராயல்ஸ் ஆகியோரைப் பேசுகிறோம். மற்றும் நேர்மையாக? நாங்கள் இன்னும் அதற்கு மேல் இல்லை.மெரில் ஸ்ட்ரீப் – ஆன் மற்றும் ஆஃப் -ஸ்கிரீன் ஒரு பேஷன் ஐகானுடன் ஆரம்பிக்கலாம். மூன்று ஆஸ்கார் விருதுகள், ஒன்பது கோல்டன் குளோப்ஸ் மற்றும் நாங்கள் எண்ணக்கூடியதை விட மிகவும்…
பாரமுல்லா: சவுரிய சக்ரா விருது பெற்ற காவலரின் தாய், பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்தவர் முடாசிர் அகமது ஷேக். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றிய இவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இவருக்கு மறைவுக்குப்பின் சூர்ய சக்ரா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இவரது தாய் ஷமீமா அக்தர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 45 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய காஷ்மீர் பகுதிக்கு தனது 20 வயதில் வந்து விட்டார். இங்கு வந்தபின் முகமது மகசூத் என்ற காவலரை திருமணம் செய்தார். இவர்களது மகன்தான் சவுரிய சக்ரா விருது பெற்ற முடாசிர் அகமது ஷேக். இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லாம் திரும்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.…
சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது. முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியுடைந்துள்ளது. ஜனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும்…
நியூயார்க்: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளார். எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனவோ அந்த அளவுக்கே பரஸ்பரம் வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் உறுதியாக கூறியுள்ளார். இந்நிலையில் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (யுஎன்சிடிஏடி), செகரட்டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்ஸ்பேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பல நாடுகளுக்கு அதிக வரி விதித்துள்ளதால் உலகளவில் வர்த்தக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகளவிலான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உரியதாக வர்த்தகம் இருக்க வேண்டும். இன்றைய சவால்களை பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய வர்த்தக விதிகள் உருவாக வேண்டும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்காத வகையிலும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும் வர்த்தகம் அமைய வேண்டும். இது ஒத்துழைப்புக்கான நேரமே தவிர சிக்கலை அதிகரிப்பதற்கான நேரமல்ல. இவ்வாறு ரெபெக்கா கிரின்ஸ்பேன் கூறியுள்ளார்.
கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில், உங்கள் மனதைக் கூர்மைப்படுத்துவது மற்றும் கவனம் செலுத்துவது ஒரு வல்லரசாகும். உங்கள் மூளைக்கு சிறந்த கவனம் செலுத்துவதற்கும் அதிக உற்பத்தி செய்வதற்கும் சில உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது. மேலும், தெற்காசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடனான தொலைபேசி உரையாடலின்போது மார்கோ ரூபியோ, இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்,…
