Author: admin

ஒரு லானிஸ்டர் எப்போதுமே தனது கடன்களை செலுத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் – ஆனால் நெட்மார்பில் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ரசிகர்களின் ஆரம்ப அணுகல் பொறுமையை திருப்பித் தருமா?சிம்மாசனத்தின் விளையாட்டு: கிங்ஸ்ரோட். அனைத்து முக்கிய மொபைல் இயங்குதளங்களிலும், பி.சி. முதல் வெளியீடு மற்றும் ஆரம்ப அணுகல் முதலில் மார்ச் 2025 இல் நீராவி ஆரம்ப அணுகல் மூலம் வெளியிடப்பட்டது, கிங்ஸ்ரோட் ஒரு ‘கலப்பு’ பயனர் மதிப்பீட்டை சந்தித்தது. சில வீரர்கள் அதன் அதிசயமான கதைசொல்லல் மற்றும் பழக்கமான வெஸ்டெரோஸ் அமைப்பைப் பாராட்டினாலும், விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு பணமாக்குதலை மையமாகக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மிகவும் மேம்பட்ட நீராவி மதிப்பாய்வு குறிப்பிட்டது: ‘இது ஸ்டெராய்டுகளில் ஒரு மொபைல் கேம் போன்றது, நல்ல வழியில் இல்லை.’ கேம் ஆப் த்ரோன்ஸ்: ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் சின்னமான பிரபஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட அதிரடி-சாகச ஆர்பிஜி கிங்ஸ்ரோட் 21 மே 2025 அன்று முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது,…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சார்பில் வழக்கறிஞர் ஹதேஷ் குமார் சாஹு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். “இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்ததன் மூலம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு கைகோர்த்துள்ள ஒரு முக்கியமான தருணம் இது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் நமது படைகளின் மன உறுதியைக் குலைக்காதீர்கள்” என்று நீதிபதி என். கோடீஸ்வர்…

Read More

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கொளத்தூர் பூம்புகார் நகரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து…

Read More

அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக, அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தத்தை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பல்வேறு பாதகங்கள் இருந்தாலும் கூட, ஜவுளித் துறையில் பெரும் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டார். ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின்படி, சீனாவுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத…

Read More

தொழில்நுட்ப கோடீஸ்வரர் பில் கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருபோதும் தலைப்புச் செய்திகளில் ஈடுபடத் தவறவில்லை. இந்த நாட்களில், மெலிண்டா மற்றும் பில் கேட்ஸின் மகள் ஃபோப், சமீபத்தில் செய்திகளில் அதிகம். அவரது பெற்றோரைப் போலல்லாமல், ஃபோபிக்கு ஃபேஷனில் ஆர்வம் உள்ளது, மேலும் அவர் சமீபத்தில் தனது முன்னாள் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ரூம்மேட் உடன் AI- இயங்கும் ஷாப்பிங் பயன்பாடான PHIA ஐ இணைந்து நிறுவினார். இளம் தொழில்முனைவோரும் தோன்றினார் அவளை அப்பா போட்காஸ்ட் என்று அழைக்கவும் சமீபத்தில், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது தந்தை பில் கேட்ஸ் பற்றி திறந்தார்.அவரது தந்தை பில் கேட்ஸ் பற்றி பேசுகிறார் ஃபோப் கேட்ஸ் அவரது தந்தைக்கு ஆஸ்பெர்கரின் நோய்க்குறி உள்ளது என்று கூறினார் – இப்போது ஒரு நிபந்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ஏ.எஸ்.டி). தனது தந்தையின் தனித்துவமான ஆளுமைப்…

Read More

கோவை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்களுக்கு ஆட்தேர்வு செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி கொண்ட மனுதாரர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 25-ம் தேதியாகும். தேர்வு குறித்த மேலும் விவரங்களை ww.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் மே 6-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படும். இப்பயிற்சி…

Read More

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் தங்கம் 66,480-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,310-க்கு விற்பனை. தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பவுனுக்கு ரூ.1,280 என குறைந்தது. இந்த நிலையில் இன்று (ஏப்.5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.90 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,480 மற்றும் ஒரு கிராம் ரூ.8,310 என சந்தையில் விற்பனை ஆகிறது. உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டியது தங்கம். இதற்கு உலக நாடுகளிடையே…

Read More

ஸ்வேதா திவாரி தனது அதிர்ச்சியூட்டும் சேலை தோற்றத்தால் ஒருபோதும் ஈர்க்கத் தவறவில்லை. பாரம்பரியத்தை காலமற்ற கிளாமுடன் கலக்கும் அவரது மிக நேர்த்தியான தென்னிந்திய சேலை தருணங்களில் 10 இங்கே.

Read More

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள சிம்மாசலம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று நிஜரூப தரிசனம் நடந்தது. இதற்கான டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது, சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே சிம்மாசலம் மலை மீது பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மூலவரின் சந்தன காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனம் நடக்கிறது. இதனால் நிஜரூப தரிசனத்தை காண சிம்மாசலம் கோயிலில் நேற்று முன் தினம் இரவு முதலே பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வந்தனர். இந்நிலையில், செவ்வாய் கிழமை இரவு சிம்மாசலத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்த பக்தர்கள் மீது அருகே இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் மூன்று பெண்கள்,…

Read More

’கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. ‘கனிமா’ பாடல் சமூக வலைதளங்களில் பெற்ற மாபெரும் வரவேற்பு, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது ‘ரெட்ரோ’. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) – சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார். தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதில் காதலி…

Read More