Author: admin

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது. இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. இதன் வழியாக மக்கள் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க முடியும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவு பிறப்பித்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்து இல்லாததால், பலரும் வேறு நாடுகள் வழியாக தங்கள் தாய் நாட்டுக்குச் செல்கின்றனர். வேறு சிலர், பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி…

Read More

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கொலைகளைப் பட்டியலிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, “சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று பெருமை பேசிய முதல்வரே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல்…

Read More

சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமானத் தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக் கூடிய இந்த விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டதால், அவற்றிற்கு அதிக ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. அத்துடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் சிறு கனிம நிலவரி விதிக்கப்பட்டது. இவற்றால் ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5…

Read More

அமராவதி: ஆந்​திர மாநில பிரி​வினைக்கு பிறகு ஆட்​சியை பிடித்த சந்​திர​பாபு நாயுடு அமராவ​தியை தலைநக​ராக அறி​வித்​தார். அவருக்கு அடுத்து ஆட்​சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்​கள் அமைக்​கப்​படும் என அறி​வித்​தார். இந்​நிலை​யில் 2024-ல் மீண்​டும் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு அமராவதி தான் ஆந்​தி​ரா​வின் தலைநகர் என்​பதை திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​​தார்​. இந்நிலையில் அமராவ​தி​ மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்​கல் நாட்டு விழா இன்று நடை​பெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொள்ள உள்​ளார். இதில் சுமார் 5 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வித​மாக சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு​புறம் பாகிஸ்​தான் மீது இந்​தியா போர் தொடுக்​குமா என்ற கேள்வி எழுந்​துள்ள நிலை​யில், இரு நாட்டு எல்​லைகளி​லும் போர்ப் பதற்​றம் நில​வு​கிறது. இன்று அமராவ​தி​யில் நடை​பெற உள்ள மாபெரும் பொதுக்​கூட்ட நிகழ்ச்​சி​யில் பிரதமர் என்ன பேசு​வார் என்​ப​தை​யும் மக்​கள் அறிய ஆவலாக உள்​ளனர். இதற்​கான ஏற்​பாடு​கள் அனைத்​தும்…

Read More

புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக்கொண்டுள்ள அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பதை ரகசியம் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸின் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் கடந்த வாரம் உரையாடல் நிகழ்த்திய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்து பாகிஸ்தான் தவறிழைத்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதே ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ மேற்கொண்ட உரையாடலில், குவாஜா எம் ஆசிப் கூறியதை வழிமொழிந்தார். “பாதுகாப்பு அமைச்சர் கூறியதைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. இதன் விளைவாக, நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் பல…

Read More

சென்னை: 234 தொகுதியிலும் வெல்வோம் என கூறிக்கொண்டிருக்கும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தமிழகத்தில் ஏறக்குறையை 14 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. விடுப்பு கிடையாது. நிரந்தர செவிலியர்களின் ஊதியத்தில் பாதிதான் அவர்கள் வாங்குகிறார்கள். தற்காலிக செவிலியர்களின் பணியிடங்களை இன்னும் நிரந்தரமாக்கவில்லை. அதேபோல், 6,000-க்கும் மேல் காலி பணியிடங்கள் இருந்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் கிடைக்காமல் இன்னும் போராடி கொண்டிருக்கின்றனர். டாஸ்மாக், மருத்துவம், காவல்துறை என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது. தேர்வானவர்கள்கூட இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு…

Read More

இந்து மதத்தில், பாடல்கள், மந்திரங்கள், ஸ்டோட்ராஸ் மற்றும் மந்திரங்கள் ஆகியவை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் உயர் ஆற்றல் கொண்ட சொற்கள். இது OM இன் எளிய மந்திரம் அல்லது புகழ்பெற்ற கால் பைராவ் அஷ்டகம், ஒவ்வொரு மந்திரமும் ஸ்டோட்ராவும் மறுக்க முடியாத ஆற்றலைக் கொண்டுள்ளன, அதை எந்த வகையிலும் பிரதிபலிக்க முடியாது. இந்த புனிதமான ஒலிகளும் அதிர்வுகளும் ஆன்மீக சக்தியைக் கொண்டுள்ளன, மேலும் சரியான நோக்கம், புரிதல் மற்றும் நிலைத்தன்மையுடன் கோஷமிடும்போது, ​​இந்த மந்திரங்கள் மக்களைச் சுற்றியுள்ள ஆற்றலை மாற்ற உதவுகின்றன, மேலும் சிறந்த மற்றும் நேர்மறையான விஷயங்களை அவற்றின் வழியில் அழைக்கிறது.

Read More

அமெரிக்க தென்மேற்குக்கு மேலே ஒரு பெரிய, 1,000 அடி அகல யுஎஃப்ஒவை வட்டமிடுவதைக் காண்பிக்கும் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது யுஎஃப்ஒ வெளிப்படுத்தல் “கைவினை” பறக்கும் தட்டுகளை விட விவசாய நிலத்தைப் போலவே இருப்பதாகக் கூறும் விமர்சகர்களால் உடனடியாக கேலி செய்யப்படுவதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய முன்னாள் பென்டகன் இன்சைடர் லூயிஸ் “லூ” எலிசோண்டோ வியாழக்கிழமை வாஷிங்டன் டி.சி. அறிவியல், தேசிய பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு. “FL210 இல் நான்கு மூலைகளுக்கு அருகில் கைப்பற்றப்பட்டு, 600–1,000 அடி விட்டம், வெள்ளி-ஹூட், வட்டு வடிவத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது,” X இல் UAP வெளிப்படுத்தல் நிதியம் வெளியிட்டுள்ள அதனுடன் கூடிய தலைப்பைப் படியுங்கள்.2021 ஆம் ஆண்டில் வணிக விமான விமானி எடுத்ததாகக் கூறப்படும் இந்த புகைப்படம், ஒரு வெள்ளி வட்டு கீழே பூமியில் ஒரு பெரிய நிழலைக் காட்டுவதைக் காட்டுகிறது.எலிசோண்டோ படம் ஒரு “சிவில்-தர” கேமராவுடன் எடுக்கப்பட்டதாகவும், “இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அவர் உறுதிப்படுத்த முடியாது…

Read More

புதுடெல்லி: தற்போதைய நிலையில் 1700 பண மோசடி வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளதாக அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: அமலாக்கத் துறை (இடி) விசாரணை நடத்தி வரும் 1700 பண மோசடி வழக்குகள் தற்போது விசாரணை கட்டத்தில் உள்ளன. இடி தொடர்ந்த 47 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. மூன்று பேர் மட்டுமே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிஎம்எல்ஏ-வின் கீழ் பதியப்பட்ட 1,739 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதி அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே பொதுவான காரணமாக இருக்கலாம். அமலாக்கத் துறையை பொருத்தவரையில் தனது விசாரணையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், தடயவியலையும் பயன்படுத்தும். இவ்வாறு ராகுல் கூறினார். அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இது, கடந்த 1956-ம் ஆண்டு மே 1 அன்று தொடங்கப்பட்டது.

Read More

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்ததுடன், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் முடிவை மனதார வரவேற்கிறேன். விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இது விசிக உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்கு…

Read More