Author: admin

புதுடெல்லி: சிவில் விமானப் போக்​கு​வரத்து இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் மக்​களவை​யில் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்​டுள்​ளன. ஆகாசா ஏர் மற்​றும் ஸ்பைஸ்​ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்​றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்​தித்​துள்​ளன. அதேசம​யம், இண்​டிகோ நிறு​வனம் வரிக்கு முந்​தைய லாப​மாக ரூ.7,587.5 கோடியை ஈட்​டி​யுள்​ளது. டாடா குழு​மத்​துக்கு சொந்​த​மான ஏர் இந்​தியா வரிக்கு முன் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்​தித்​தது. நீண்ட கால​மாக லாபத்​தில் இயங்கி வந்த அதன் அங்​க​மான ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் நிறு​வன​மும் கடந்த நிதி​யாண்​டில் ரூ.5,678.2 கோடி இழப்பை பதிவு செய்​துள்​ளது. ஏர் இந்​தி​யா​வின் கடன் ரூ.26,879.6 கோடி​யாக​வும், இண்​டிகோ​வின் கடன் ரூ.67,088.4 கோடி​யாக​வும் இருந்​தது. ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ், ஆகாசா ஏர் மற்​றும்…

Read More

கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அல்லது சமீபத்தில் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) என மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு பரவலான மற்றும் பெரும்பாலும் கண்டறியப்படாத நிலை. இது ஆரம்பத்தில் சில அல்லது அறிகுறிகளுடன் இருக்கலாம் என்றாலும், முதல் உடல் அறிகுறிகள் பெரும்பாலும் வயிற்றில் அல்லது வயிற்றுப் பகுதியில் நுட்பமாக தோன்றும் என்று வளர்ந்து வரும் சான்றுகள் தெரிவிக்கின்றன.கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள் செரிமான அச om கரியம் மற்றும் வயிற்று ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்து வருகின்றனர். வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் ஹெபடாலஜி வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், NAFLD நோயாளிகள் எந்த அசாதாரண இரத்த பரிசோதனைகள் அல்லது இமேஜிங் முடிவுகள் தோன்றுவதற்கு முன்பே, வீக்கம், குமட்டல் மற்றும் வலது மேல் நாற்புற அச om கரியம் போன்ற வயிற்று அறிகுறிகளை…

Read More

புதுடெல்லி: கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. நாட்​டின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம்​(டிஆர்​டிஓ) உரு​வாக்கி வரு​கிறது. அவற்​றில் மிக​வும் சக்தி வாய்ந்​தது அக்​னி-5 ஏவு​கணை. அணு ஆயுதங்​களு​டன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது. இந்த ஏவு​கணை ஒடி​சா​வின் சண்​டிப்​பூரில் உள்ள பரிசோதனை மையத்​தில் நேற்று முன்​தினம் பரிசோ​திக்​கப்​பட்​டது. அப்​போது ஏவு​கணை​யின் அனைத்து தொழில்​நுட்ப செயல்​பாடு​களும் சரி​பார்க்​கப்​பட்​டன. இந்த சோதனை வெற்​றிகர​மாக நடை​பெற்​ற​தாக பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​தது. அடுத்​த​தாக 7,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் வகையில் அக்னி ஏவு​கணையை மேம்​படுத்​தும் முயற்​சி​யில் டிஆர்​டிஓ இறங்​கி​யுள்​ளது. பாகிஸ்​தான் பதற்​றம்: அக்​னி-5 ஏவு​கணையை இந்​தியா மீண்​டும் வெற்​றிகர​மாக சோதித்​தது பாகிஸ்​தானில் பதற்​றத்தை ஏற்படுத்​தி​ உள்​ள​து. அங்​குள்ள எஸ்​விஐ (போர் உத்தி தொலைநோக்கு மையம்)…

Read More

குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வரவேற்றார். அனைத்து முன்னாள் ராணுவவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், ஒட்டுமொத்த ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவத்தினர் கலந்துரையாடினர். கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்த பேரணி செப்டம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.

Read More

Last Updated : 22 Aug, 2025 07:20 AM Published : 22 Aug 2025 07:20 AM Last Updated : 22 Aug 2025 07:20 AM புதுடெல்லி: ரிசர்வ் வங்​கி​யின் மதிப்​பீட்​டை​யும் தாண்​டி, முதல் காலாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்​சியை அடை​யும் வாய்ப்​புள்​ள​தாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தியா வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய பொருளா​தார வளர்ச்சி குறித்து எஸ்​பிஐ வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் ஒட்டு மொத்த பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என இந்​திய ரிசர்வ் வங்கி மதிப்​பிட்​டது. ஆனால் இந்த காலாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை ஆய்வு செய்​த​போது, அது 6.9 சதவீதம் என காட்​டு​கிறது. அதனால் 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி தோராய​மாக 6.8 முதல் 7 சதவீத​மாக இருக்​கும் என ஆரம்​பகட்ட…

Read More

ஏர் பிரையர்கள் பிரபலமடைந்து, ஆரோக்கியமான வறுத்த உணவுகளை உறுதியளித்துள்ளனர், ஆனால் ஒரு இரைப்பை குடல் நிபுணர் அவர்களின் ஆரோக்கிய நன்மைகள் பயன்பாட்டைப் பொறுத்தது என்று எச்சரிக்கிறார். ஏர் வறுக்கப்படுகிறது எண்ணெயைக் குறைக்கும்போது, ​​அது தானாகவே உணவை ஆரோக்கியமாக மாற்றாது, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது அழற்சி எண்ணெய்களுடன். சரியான எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது, எரிந்த உணவு மற்றும் பழைய எண்ணெயைத் தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பான ஏர் பிரையர் லைனர்களைத் தேர்ந்தெடுப்பது குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஏர் பிரையர்கள் ஒரு சமையலறை பிரதானமாக மாறிவிட்டனர். மிருதுவான வறுத்த உணவுகளை நீங்கள் அனுபவிக்க முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு வீட்டுக்கு பிடித்ததாக ஆக்கியுள்ளது. ஒரு துளி எண்ணெய் இல்லாமல் தங்க பிரஞ்சு பொரியல்களை கற்பனை செய்து பாருங்கள் அல்லது கிரீஸில் சொட்டாத கோழி – உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. எனவே, ஏர்-வறுக்கவும் தானாக உணவை ஆரோக்கியமாக்குகிறதா? கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இரைப்பை குடல்…

Read More

புதுடெல்லி: ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்​லைன் விளை​யாட்​டு​கள் மூலம் இழப்​ப​தாக அரசு மதிப்​பீடு​கள் தெரிவிக்​கின்​றன. ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினரும் இது சம்​பந்​தப்​பட்ட தீய விளைவு​கள் குறித்து கவலை எழுப்​பி​யுள்​ளனர் என்று அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. ஆன்​லைன் சூதாட்​டத்​தில் பணம் வைத்து விளை​யாடும் பலர் தங்​களது சேமிப்பை இழந்து கடனாளி​யாகி தற்​கொலை செய்து கொள்​ளும் சம்​பவங்​கள் நாட்​டில் அதி​கரித்து வரு​கின்​றன. இதனை கருத்​தில் கொண்டு பணம் வைத்து விளை​யாடும் ஆன்​லைன் விளை​யாட்​டு​களுக்கு தடை விதிக்​கும் வகை​யில் ஆன்​லைன் கேமிங் ஒழுங்​கு​முறை மற்​றும் மேம்​பாட்டு சட்ட மசோதா நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. இது சட்​ட​மாகும்​போது, விதி​களை மீறு​வோருக்கு 3 ஆண்டு…

Read More

காஞ்சிபுரம்: ‘சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது காஞ்சிபுரம் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பினர் அவரை சந்தித்தனர். அவர்கள் பட்டு இழை, சரிகை விலை குறைப்பு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா, கூட்டுறவு சங்கங்களுக்கு வருடத்துக்கு ரூ.50 கோடி மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதேபோல் வணிகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர். விளைபொருட் களுக்கு கூடுதல் விலை, இடு பொருட்களை இலவசமாக வழங்குவது, ஏரி,…

Read More

சென்னை: ‘தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளு மன்றத்தில் கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ரகுமான் கான் எழுதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசிய தாவது: ரகுமான்கான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். அவர் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழகம் முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும். கருப்புச் சட்டம்: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்பு களை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை…

Read More

சென்னை: பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்டத்தில் மணல் கடத்​தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்​வாக அலு​வலரை வீடு புகுந்​து, மணல் கடத்​தல் காரர்கள் தாக்​கிய​தாக வெளிவந்​துள்ள செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது. நேர்​மையாக பணியாற்​றிய அதி​காரியை தாக்​கியதுடன், இதற்கு மேலும் கடத்​தலைத் தடுக்க முயற்​சித்​தால் வண்​டியை ஏற்​றிக் கொலைசெய்​து​விடு​வ​தாக மணல் கடத்​தல் கும்​பல் மிரட்​டி​யுள்​ளது. 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர், ‘தி​முக ஆட்சி அமைந்​ததும் மணல் அள்​ளலாம்’ என அச்​சா​ரமிட்​டதை ஒப்​பிட்​டுப் பார்த்​தால் தொடர்ந்து மணல் கடத்​தல் மாஃபி​யாக்​களுக்கு திரா​விட மாடல் அரசே ஒத்​துழைப்பு தரு​கிறதோ என்ற சந்​தேகம் எழுகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More