Author: admin

சென்னை: 5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் 8 தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்கும் பணியில் சிஎஸ்கே இப்போதே கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ஏற்கெனவே இளம் வீரர்களான மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் 28 பந்துகளில் சதம் விளாசிய அசத்தியிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் உள்ளிட்ட 3 இளம் வீரர்களை தேர்வுக்காக சிஎஸ்கே அணி அழைத்து அவர்களது திறனை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலுடன் மும்பையை சேர்ந்த ஆல்ரவுண்டர் அமன் கான், கேரளாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் சல்மான் நிசார் ஆகியோரும் சிஎஸ்கேவின் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேர்வு…

Read More

ஜி.வி.பிரகாஷ் குமார், சரத்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘அடங்காதே’. சுரபி நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இந்தி நடிகை மந்திரா பேடி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். சரவணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இ5 என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் வெளியிடுகிறார். படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறும்போது, “இது அரசியல் திரில்லர் கதையை கொண்ட படம். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சரத்குமாரும் நடித்துள்ளனர். திருச்சியில் ஆரம்பிக்கும் கதை, காசி வரை நீள்கிறது” என்று தெரிவித்தார்.

Read More

ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆவணங்ளை அவருடைய குடும்பத்தினர் தேசிய ஆவணக் காப்பத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார். அப்துல் கலாம் ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் ‘மிஷன் ஆஃப் லைஃப்’ என்ற தலைப்பில் 2011-ம் ஆண்டு அருங்காட்சியத்தைத் தொடங்கினார். தற்போதும் இயங்கி வரும் அந்த அருங்காட்சியகத்தில் கலாம் எழுதிய புத்தகங்கள், விருதுகள், அரிய புகைப்படங்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்களின் மாதிரிகள், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியில் 2016-ம் ஆண்டு திறக்கப்பட்ட கலாம் அறிவுசார் மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், அவரது கோட், சூட், பேனா, கலாமுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ராமேசுவரத்தில் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள…

Read More

விஜயவாடா: எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய நாளே பட்டியலின, பழங்குடியின தகுதியை இழந்து விடுகிறார்கள் என்று ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், கொத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆனந்த். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் சந்தோலு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், “கொத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி மற்றும் 5 பேர், எனது சாதி பெயரை சொல்லி கீழ்த்தரமாக திட்டினர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குண்டூர் வன்கொடுமை பிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டில், “கடந்த 10 ஆண்டுகளாக ஆனந்த்…

Read More

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கெல்டன் 38 பந்துகளில், 61 ரன்களும் ரோஹித் சர்மா 36 பந்துகளில், 53 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களும் விளாசி மிரட்டினர். 218 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில், ரன்கள் ஏதும் சேர்க்காமல் தீபக் ஷாகர் பந்தில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13, நிதிஷ் ராணா 9, கேப்டன் ரியான் பராக் 16,…

Read More

புதுடெல்லி: இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு தொடர்பான 131 மில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள் மற்றும் உபகரணங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடல் கண்காணிப்பு மென்பொருள், தொழில்நுட்ப உதவி கள குழு பயிற்சி, தொலைதூர மென்பொருள், பகுப்பாய்வு ஆதரவு, தளவாட மற்றும் திட்ட ஆதரவின் பிற தொடர்புடைய உபகரணங்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என இந்தியா சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், 131 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கொள்முதலுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க டிபன்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிக்கையில், “ இந்தியாவுக்கு கடல்சார் மென்பொருள், உபகரணங்களை விற்பனை செய்ய அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் அமெரிக்க-இந்திய உறவை மேலும் வலுப்படுத்த உதவும். மேலும் இது, இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளதார முன்னேற்றத்துக்கு முக்கிய…

Read More

இலங்கை வல்வெட்டித் துறையைச் சேர்ந்த தர்மதாஸ் (சசிகுமார்), மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிது, முள்ளி (மிதுன், கமலேஷ்) ஆகியோருடன் படகில்தப்பித்து ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சென்னை வரும் அவர்கள், வசந்தியின் சகோதரர் (யோகிபாபு) மூலம் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இலங்கை வாழ்வை மறந்து சந்தோஷத்துடன் வாழத் தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பால், தர்மதாஸின் குடும்பத்தை போலீஸ் தேடுகிறது. இதில் அவர் குடும்பத்துக்கு என்ன ஆகிறது என்பது படத்தின் கதை. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் நிலையை, இயல்பாக, அழகாகப் படமாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்க்கு ஒரு பூங்கொத்து. பிழைப்புத் தேடி இன்னொரு நாட்டுக்குச் சட்ட விரோதமாக வருவது என்பது கொடூரம். அப்படி வரும் குடும்பத்தின் கதைக் களத்தை, மெல்லிய நகைச்சுவையையும் மனித மனங்களையும் சமவிகிதத்தில் கலந்துபடமாக்கி இருப்பது ரசிக்க வைக்கிறது. கதையில் வரும் சின்ன சின்னக் கதாபாத்திரங்களுக்கு சிறிய பின் கதை வைத்திருப்பதும் கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.…

Read More

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி வந்துவிட்டதாக தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துவிட்டு நிதி வரவில்லை என பொதுவெளியில் திமுக உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஜிஎஸ்டி வந்த பிறகுதான் நடுத்தர வர்க்கத்தினர் கூட வரி செலுத்தும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. ஜிஎஸ்டி வரி அறிமுகமாவதற்கு முன்பே, மதிப்புக் கூட்டு வரி, அதோடு அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரி என 17 வகையான வரிகளும், 9 செஸ் வரிகளும் இருந்து வந்தன. தற்போது, இந்த வரிகள் அனைத்தும் கலந்துதான் இன்று ஜிஎஸ்டி ஆக உருவாகி உள்ளது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பே நடுத்தர குடும்பத்தினர் தினசரி வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி இருக்கத்தான் செய்தது. அப்போது, கடைகளில் வழங்கப்படும் பில்லில் வரியை காட்டியிருக்க மாட்டார்கள். ஜிஎஸ்டி வந்த பிறகு தான் நாம்…

Read More

பூஞ்ச்: மத்திய அரசு உத்தரவால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட காஷ்மீர் போலீஸ்காரர் மற்றும் அவரது உடன்பிறந்த 8 பேர், நீதிமன்ற உத்தரவால் பூஞ்ச் திரும்பினர். கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டது. அங்கு வசித்த ஃபகுர் தின் மற்றும் அவரது மனைவி பாத்திமா பீ ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாமில் வசித்தனர். அங்கு அவர்களுக்கு மேலும் 6 குழந்தை பிறந்தது. கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஃபகுர் தின் குடும்பத்தினர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஜம்மு காஷ்மீர் முன்பு மாநிலமாக இருந்தபோது இவர்கள் நிரந்தர குடியுரிமை சான்றிதழும் பெற்றனர். ஃபகுர் தினின் மகன் இப்திகார் அலி என்பவர் ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் கடந்த 27 ஆண்டுகளாக பணியாற்றுகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு…

Read More

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கை-2020-ன்படி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2019-ல் கொண்டு வந்தது. அதன்படி, 5, 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைபவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர்கள் வெற்றி பெறாவிட்டால், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட திருத்தம் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் 5,…

Read More