இங்கிலாந்தை தளமாகக் கொண்ட என்.ஆர்.ஐ தொழிலதிபர் லார்ட் ஸ்வ்ராஜ் பால் 94 வயதில் இறக்கிறார் (படம் கடன்: பி.டி.ஐ) முன்னணி என்.ஆர்.ஐ தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் லார்ட் ஸ்வ்ராஜ் பால் வியாழக்கிழமை மாலை தனது 94 வயதில் லண்டனில் காலமானார்.லார்ட் பால், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனர் கபரோ குழு தொழில்கள், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்டனர். ஜலந்தரில் பிறந்த லார்ட் பால் 1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார், பின்னர் தனது மகள் அம்பிகாவுக்கு சிகிச்சை கோரி, பின்னர் லுகேமியாவால் இறந்தார். எஃகு, பொறியியல் மற்றும் சொத்து ஆகியவற்றில் ஆர்வமுள்ள உலகளாவிய நிறுவனமாக விரிவடைந்த கபரோ குழுவை அவர் நிறுவினார்.பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது மரணத்தை எக்ஸ் பற்றிய ஒரு பதவியில் இரங்கினார். “ஸ்ரீ ஸ்வராஜ் பால் ஜி. பவுல் லார்ட் 1996 இல் ஒரு வாழ்க்கை சகாக மாற்றப்பட்டார் மற்றும் லார்ட்ஸ் சபையில்…
Author: admin
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேரின் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட இரு கால்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் காயம் அடைந்தவர்கள் 30 கி.மீ. தொலைவில் அத்தோலியில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள மருத்துவர்கள் கூறுகையில், “வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ளதால் இறந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. முழுமையான உடல் கிடைத்தால் உறவினர்கள் அதனை கொண்டுசென்று இறுதிச் சடங்குகள் செய்ய முடியும். ஆனால் கை, கால்கள் என தனித்தனியாக கிடைக்கின்றன. எனவே இவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்காக நாங்கள் ஜம்முவுக்கு அனுப்பி வருகிறோம்” என்றார்.
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே. 37 வயதான ரஹானே 201 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மும்பை அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் எனவும் ரஹானே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஹானே தனது எக்ஸ் வலைதள பதிவில், “மும்பை அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்கள் வென்றது பெரிய கவுரவம். உள்ளூர் சீசன் வரவிருக்கும் நிலையில், புதிய கேப்டனை தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன், எனவே, கேப்டன் பதவியில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை வழங்குவதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். மேலும் பல கோப்பைகளை வெல்ல உதவுவதற்காக மும்பை அணியுடன் ‘எனது பயணத்தைத்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்தவர் பிராங்க் கேப்ரியோ. பின்னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்டுகளாக ரோட் தீவின் முனிசிபல் நீதிபதியாக பணியாற்றினார். பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தார். ஒரு கட்டத்தில் இவரது அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அப்போது அவர்களிடம் நீதிபதி பிராங்க் கேப்ரியோ விசாரணை நடத்தும் விதமே தனித்துவமாக இருக்கும். நீதிமன்ற அறையில் குற்றவாளியாக நிற்கும் உணர்வு மக்களுக்கு ஏற்படாது. நண்பரிடம் பேசும் உணர்வே அங்கு மேலோங்கி இருக்கும். போக்குவரத்து விதிமீறல் குற்றத்துக்கு ஆதாரமாக வீடியோ காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டு காட்டுவார்கள். அதை பார்த்து ஆமாம், தவறு செய்துவிட்டேன் என்று சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய பின்புலம், எந்தச் சூழ்நிலையில் அவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு பல வழக்குகளை தள்ளுபடி செய்வார். நீதிபதி கேப்ரியோ பல…
மதுரை: நாமக்கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்து, தற்போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைத்துவிட்டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன. இருப்பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினருக்கு தொடர்புள்ளது. இதனால் மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிறுநீரக திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஊரக சுகாதாரச் சேவைகள் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிறுநீரகத் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு சுகாதார சேவைத்…
ஒரு நோய் நம்மில் ஒருவரை பாதிக்கும் வரை அது எவ்வளவு பொதுவானது என்பது பற்றி நாம் அடிக்கடி அறிந்திருக்க மாட்டோம். இதே வழக்கு பெருங்குடல் புற்றுநோயுடன் உள்ளது. ஆம் உண்மையில்! நாம் நினைப்பதை விட இது மிகவும் பொதுவானது. இது உலகளவில் முன்னணி புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது, குறிப்பாக மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் உணவு கொண்ட நாடுகளில். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும், இது அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் சுமார் 10% ஆகும், மேலும் இது உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும், மேலும் ஆண்களில் இரண்டாவது அடிக்கடி புற்றுநோயும், பெண்களில் மூன்றாவது மிகவும் பொதுவானது.யுனைடெட் ஸ்டேட்ஸில் மட்டும், பெரும்பாலும் சி.ஆர்.சி என்று அழைக்கப்படும் பெருங்குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய்களைத் தவிர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கண்டறியப்பட்ட மூன்றாவது புற்றுநோயாகும். பெருங்குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோயின்…
புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தம்பதியின் இளைய மகன் சித்தார்தை (22) காணவில்லை. இவரே மூவரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை (தெற்கு) துணை ஆணையர் அங்கிட் சவுகான் கூறுகையில், “விசாரணையில் சித்தார்த் மனநல சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் ஒருவரிடம், தனது குடும்பத்தை கொலை செய்துவிட்டதாகவும், இனி இங்கு வாழ மாட்டேன் என்றும் கூறியுள்ளார். சித்தார்த்தை நாங்கள் தேடி வருகிறோம்” என்றார்.
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரேசிலின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 44-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் பேபியானோ கருனா, 46-வது நகர்த்தலின் போது பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் லெவோன் அரோனியன், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் மோதிய ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் வெஸ்லி சோ, போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் மோதிய ஆட்டம் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 3 சுற்றுகளின் முடிவில் பேபியானோ கருனா, லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்லையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த மாகாணம் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. கடந்த 1867-ம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சி நடைபெற்றபோது அலாஸ்கா பகுதி அமெரிக்காவுக்கு ரூ.45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றளவும் அலாஸ்கா முழுவதும் ரஷ்ய கலாச்சாரம் நிறைந்திருக்கிறது. கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்சம் மதிப்புள்ள யூரல் பைக்கை பரிசாக வழங்கினார். இதுகுறித்து மார்க் வாரன் கூறியதாவது: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ரஷ்ய தயாரிப்பான யூரல் பைக்கின் தீவிர ரசிகனான நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்தேன். அதிபர்…
மதுரை: தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை (பேரிகேட்) அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இரும்புத் தடுப்புகள்…. சாலைகளில் வாகனங்களின் வேகத்தை முறைப்படுத்த உரிய இடங்களில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்படுவது வழக்கம். இது அவசரக் காலங்களில் போக்குவரத்து மாற்றத்துக்காக வைக்கப்படுகிறது. அவ்வாறு வைக்கப்படும் தடுப்புகளில் எந்த தனியார் விளம்பரங்களும் இடம்பெறக் கூடாது. ஆனால் தமிழகத்தில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் நிரம்பியுள்ளன. 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: இதனால் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் தனியார் விளம்பரங்களுடன்…