இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேஷன் கண்ணாடிகளில் ஒன்றான மெட் காலா நீண்ட காலமாக மூர்க்கத்தனமான பாணி தருணங்களுக்கு ஒரு காந்தமாக இருந்து வருகிறது, இது மேதை மற்றும் வினோதமான வரிக்கு இடையிலான கோட்டை மழுங்கடிக்கிறது. அதன் எப்போதும் வளர்ந்து வரும் கருப்பொருள்கள் மற்றும் தைரியமான ஆடைக் குறியீடுகள் பெரும்பாலும் பிரபலங்களுக்கு படைப்பு சுதந்திரத்தை அளிக்கின்றன, சில நேரங்களில் மறக்க முடியாத முடிவுகளுடன், மற்றும் பிற நேரங்களில், பேஷன் தேர்வுகள் அடையாளத்தை முழுவதுமாக இழக்கின்றன. பல ஆண்டுகளாக, மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தின் சின்னமான படிகள் ஷோ-ஸ்டாப்பிங் ஆடை முதல் நினைவு-தகுதியான குழுமங்கள் வரை அனைத்தையும் பார்த்துள்ளன, அவை இணையத்தை சலசலக்கச் செய்தன. எனவே, இந்த ஆண்டின் மெட் காலாவிற்கு நாங்கள் தயாராகி வருவதால், இங்கே ஒரு ஏக்கம் நிறைந்த, மிகச்சிறந்த, வித்தியாசமான தோற்றத்தை திரும்பப் பெற்றது, அது தலைப்புச் செய்திகளைப் பிடித்தது, சரியான காரணங்களுக்காக அல்ல.
Author: admin
ஸ்ரீநகர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சிஆர்பிஎஃப் வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் முறையான ஒப்புதல் பெற்றே தான் அப்பெண்ணை திருமணம் செய்ததாக முனீர் தற்போது தெரிவித்துள்ளார். “என்னை பணிநீக்கம் செய்துள்ளார்கள் என்பதை ஊடகம் மூலமாகவே அறிந்தேன். அதன் பின்பு தான் எனக்கு சிஆர்பிஎஃப் கடிதம் கிடைத்தது. அதில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது எனக்கும், எனது குடும்பத்துக்கும் அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சிஆர்பிஎஃப் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன். அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அனைத்தும் முறைப்படி இருப்பதாகக் கருதினேன். எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். 72-வது பட்டாலியனில் இருந்து 41-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டேன். சட்ட…
‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். நீண்ட மாதங்களாக பேட்டி எதுவும் அளிக்காமல் இருந்தார் அனிருத். தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அதில் ‘கூலி’ படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அப்பேட்டியில் அடுத்தடுத்த படங்கள் குறித்து அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனிருத், “இந்த ஆண்டு எனது இசையில் 2 படங்கள் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் ‘கிங்டம்’ வெளியாகும். அதன் 40 நிமிடக் காட்சிகள் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அடுத்து ‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டேன். ரொம்ப அற்புதமாக புதுமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். முதன் முதலாக ‘கூலி’ படத்தை முழுமையாக பார்த்துள்ளார் என்பதால் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம்…
சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்ற நிலையில் மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு செயல்படுத்தவுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை சார்பில் அந்நாட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையில், இலங்கை கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்குடன் ஆழ்கடலில் செயற்கையான பவளப்பாறைகளை வளர்க்கலாம்; இதற்காக முதற்கட்டமாக 34 படகுகளை உடைத்து மூழ்கடிப்பதன் மூலம் பவளப்பாறைகளை எளிதாக வளர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசின் முதன்மை நோக்கம்…
வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட் பலருக்கு ஒரு உத்வேகம். அவர் ஞானம், மலிவான தன்மை மற்றும் நீண்டகால முதலீட்டு தத்துவத்திற்கு பெயர் பெற்றவர். அவருடைய ஆழ்ந்த மேற்கோள்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்:
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று (மே.4) சந்தித்தார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்த நிலையில் இன்று விமானப் படை தளபதியின் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பானது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் தலைமைத் தளபதி அணில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்துக்கு சில நாட்களுக்கு பின்னர் நடக்கிறது. முன்னதாக, ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, ஏப்.23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது. அதில், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுப்பது…
அல்லு அர்ஜுன் படம் தாமதமாவதால், வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் த்ரிவிக்ரம். ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. இப்படம் வரலாற்று கதையொன்றை பின்னணியாக கொண்டது எனவும், பெரும் பொருட்செலவில் இது உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அட்லி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் அல்லு அர்ஜுன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனால், த்ரிவிக்ரம் படம் மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அல்லு அர்ஜுன் படத்துக்கு முன்பாக, வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார் த்ரிவிக்ரம். இதனை ஹரிகா அண்ட் ஹாசினி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளார். இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஆவிகொளப்பாக்கம் குறுவட்டம், வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் கண்மணி தம்பதியரின் மகள் செல்வி ஜெயலெட்சுமி (10) மற்றும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த விஜி மற்றும் சினேகா தம்பதியரின் மகன் செல்வன் நித்தேஷ் (5) ஆகிய இருவரும் சனிக்கிழமை மதியம் சுமார் 2.00 மணியளவில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கூவாகம் கிராமத்தில் உள்ள கூவாகம் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,…
புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற ஆன்மிக குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், வாராணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) இரவு அவர் காலமானார். மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், வாராணாசியின் கபீர்நகர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை நடைபெறும் என்று சீடர்கள் தெரிவித்தனர். சிவானந்துக்கு வயது 128 என அவரது சீடர்களால் கூறப்படுகிறது. பாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்த பதிவில், “சிவானந்த்…
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன், 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது கொல்கத்தா அணி. அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கூட்டாக 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர். இந்த சுழல் கூட்டணி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடும். இன்றைய ஆட்டம் உட்பட கொல்கத்தா அணிக்கு 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை தொடர்ந்து ஈடன் கார்டனில் வரும் 7-ம் தேதி…
