ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவர்கள் ஒரு நபரின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உண்மையான சுயத்தையும் சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர். அவிழ்க்கப்படாதவர்களுக்கு, இவை உளவியல் அடிப்படையிலான வித்தியாசமான படங்கள், அவை கண்களை ஏமாற்றுகின்றன, எனவே ஆப்டிகல் மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த படங்கள் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளன, மேலும் ஒரு நபரின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களைப் பொறுத்து முதலில் அவற்றைப் பற்றி நிறைய வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது.உதாரணமாக, இந்த குறிப்பிட்ட ஆப்டிகல் மாயை படம் ஒரு நபர் உள்ளுணர்வு அல்லது தர்க்கரீதியானதா, அவர்கள் வாழ்க்கையையும் அன்பையும் எவ்வாறு கையாளுகிறார்களோ அதை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. ஆரம்பத்தில் okdiario.com ஆல் பகிரப்பட்ட படத்தில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன: பாம்பு மற்றும் காது. ஆனால், முதல் பார்வையில் ஒரு நபர் இரண்டில் ஒன்றை மட்டுமே பார்க்க முடியும். அவர்கள் முதலில் பார்ப்பதை…
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டதால் அந்த ஆற்றின் வழியாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரியாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “இது…
சென்னை: எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சென்னையை அடுத்த எண்ணூரில் தலா 660 மெகாவாட் திறனில் எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலையத்தை மின்வாரியம் அமைக்கிறது. இதனுடன், எண்ணூர் சிறப்பு 1,320 மெகாவாட், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 1,320 மெகாவாட் திறன் உடைய அனல்மின் திட்டங்களுக்கு, பொதுத் துறையைச் சேர்ந்த மகாநதி, சிங்கரேணி நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற மத்திய நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. எண்ணூர் விரிவாக்க மின்நிலைய கட்டுமான பணியை லேன்கோ என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக கடந்த 2014-ம் ஆண்டு மின்வாரியம் தொடங்கியது. அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் கடந்த 2018-ம் ஆண்டு பணிகள் முடங்கின. பின்னர், ரூ.4,442 கோடியில் எஞ்சிய பணிகளை தொடர பிஜிஆர் என்ற…
உடல் எடையை குறைப்பது அல்லது பொருத்தமாக இருக்கும்போது, ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது -அதிக கலோரிகளைச் செல்வது விரைவான முடிவுகளுக்கு சமம். அது ஓரளவு உண்மை என்றாலும், எல்லா பயிற்சிகளும் சமமாக உருவாக்கப்படவில்லை. சில இயக்கங்கள் குறுகிய ஆனால் வெடிக்கும், மற்றவை நீண்டவை ஆனால் நிலையானவை – மற்றும் அவை எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து இரண்டும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த கட்டுரை அதிக எண்ணிக்கையிலான கலோரிகளை உண்மையாக எரிக்கும் எட்டு சக்திவாய்ந்த பயிற்சிகளை உடைக்கிறது. ஒவ்வொன்றும் உடற்பயிற்சி அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றன, ஆனால் இது “ரன், சுழற்சி, மீண்டும்” பட்டியல் மட்டுமல்ல. இவை நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட தேர்வுகள், அவை தொடர்ச்சியாகவும் சரியாகவும் செய்யும்போது முடிவுகளைத் தரும்.பெரும்பாலான கலோரிகளை எரிக்கும் பயிற்சிகள் பின்வருமாறு. ஜம்ப் கயிறுஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியின் படி, ஜம்ப் கயிறு ஒரு மணி நேரத்திற்கு 667-990 கலோரிகள் வரை எரிக்கப்படலாம் (உடல் எடை மற்றும் வேகத்தின் அடிப்படையில்).…
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்புகள் இணையவழியில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இப்படிப்புகள் இணைய வழியில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இப்படிப்புகளின் நோக்கமாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். விண்ணப்ப பதிவு செய்வதற்கு மே 12, 2025 கடைசி நாளாகும்: பாடத்திட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களை…
கோவை / திருப்பூர் / ஊட்டி: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று மொத்தம் 10,637 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். திருப்பூரில் சுடிதாரில் பட்டன் அதிகமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவிக்கு, பெண் போலீஸ் ஒருவர் வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து உதவினார். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் 6,994 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 234 பேர் தேர்வெழுத வரவில்லை. 6,760 பேர் தேர்வெழுதினர். 96.65 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு மையத்தில் 22 வயதான திருநங்கை தேர்வெழுதினார். அதேபோல, பள்ளி கல்வித்துறை மூலம்…
சென்னை: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக மே 9-ம் தேதி முதல் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மே 8-ம் தேதி சேலம், மே 9-ம் தேதி சென்னை, மே 10-ம் தேதி வேலூர், மே 12-ம் தேதி மதுரை, மே 13-ம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறேன். மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரில் பேரணியை நடத்த இருக்கிறோம். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தப் பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற பெயரில் திருச்சியில் பேரணி நடத்தினோம். இந்நிலையில் விசிகவின் பேரணி மதச்சார்பின்மைக்கு ஆபத்து இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறப்போராக…
உங்கள் தலைவலி அதிக பிபி காரணமாக இருந்தால் எப்படி தெரிந்து கொள்வது
திருநெல்வேலி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் 12,349 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல் நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல் நிலைப்பள்ளி, குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரி, திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல் நிலைப்பள்ளி, திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராணி அண்ணா அரசு மகளிர்கல்லூரி, சங்கர்நகர் சங்கர்மேல்நிலைப்பள்ளி, விஜயநாராயணம் கேந்திர வித்யாலயா ஆகிய 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்த 6,413 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கூட அனுமதிச்…
சென்னை: மாணவர்களின் உயரை குடிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அன்புமணி: நீட் தேர்வில் வெற்றிபெற முடியுமா என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரை சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2017-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது. நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும்தான் பேசுகிறது. நீட் தேர்வால் மருத்துவ கல்வியின் தரம் உயரவில்லை. மருத்துவ…
