பல பெரியவர்கள் வியத்தகு மாற்றங்களைக் கவனிக்காவிட்டால் அவர்களின் பார்வை நன்றாக இருப்பதாக கருதுகின்றனர், ஆனால் நுட்பமான கண் பிரச்சினைகளை புறக்கணிப்பது ஆபத்தானது. வழக்கமான கண் பரிசோதனைகள் சரியான பார்வையை விட அதிகம் செய்கின்றன – அவை கடுமையான சுகாதார நிலைமைகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளன, சில நேரங்களில் மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு. இதுபோன்ற போதிலும், இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெரியவர்கள் வருடாந்திர பரிசோதனைகளைத் தவிர்க்கிறார்கள். வழக்கமான கண் பரிசோதனைகள் பார்வை மாற்றங்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது கண் சார்ந்த கோளாறுகள் போன்ற சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தலாம். கண் நிபுணருடன் சந்திப்பைத் திட்டமிட வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கும் பத்து பெரும்பாலும் கவனிக்கப்படாத பத்து அறிகுறிகள் இங்கே.உங்கள் கண்களுக்கு சோதனை தேவை அறிகுறிகள் மங்கலான பார்வைமங்கலான பார்வை என்பது மக்கள் கண் பரிசோதனையை நாடுவதற்கு மிகவும் பொதுவான காரணம், ஆனால் பலர் இது ஒரு…
Author: admin
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலர் பி.சி.மோடியிடம் இண்டியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, இண்டியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். சுதர்சன் ரெட்டியின் மனுவை இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 20 பேர் முன்மொழிந்தனர். 20 பேர் வழிமொழிந்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக் கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று…
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர்…
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய அக்ரூட் பருப்புகள் பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று புகழப்படுகின்றன. அவை இதய ஆரோக்கியம், மூளை செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மேலும் நோய் தடுப்புக்கு கூட உதவக்கூடும். இருப்பினும், அவற்றின் பல நன்மைகள் இருந்தபோதிலும், அக்ரூட் பருப்புகள் அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல. சில சுகாதார நிலைமைகள் அல்லது உணவுத் தேவைகள் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது ஆபத்தானது அல்லது சங்கடமாக இருக்கும்.எச்சரிக்கையின்றி அவற்றை சாப்பிடுவது செரிமான பிரச்சினைகள், அதிகரித்த யூரிக் அமில அளவு அல்லது மருந்துகளின் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் பாதுகாப்பான மற்றும் தகவலறிந்த தேர்வுகளைச் செய்வதற்கு அக்ரூட் பருப்புகளை எப்போது தவிர்க்க வேண்டும் என்பதை அறிவது முக்கியம். இந்த கட்டுரை தேசிய சிறுநீரக அறக்கட்டளை மற்றும் என்ஐஎச் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் ஆதரவுடன், அக்ரூட் பருப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ செய்ய வேண்டிய ஐந்து குழுக்களை கோடிட்டுக்…
புதுடெல்லி: பெரும்பான்மை உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசியல் சாசன அமைப்பு மற்றொரு அரசியல் சாசன அதிகாரம் படைத்த அமைப்புக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் ராமசந்திர ராவ் வழக்கில் ஏற்கெனவே தெளிவுபடு்த்திஉள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றம் காலநிர்ணயம் செய்வதாக இருந்தாலும் அதை உத்தரவாக அல்லாமல் பரிந்துரையாக செய்திருக்க வேண்டும். சட்ட…
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்காக பொறியியல் துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் துணை கலந்தாய்வில் பங்கேற்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான 20,662 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அவர்களுக்கான துணை கலந்தாய்வு இணைய வழியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கல்லூரி விருப்பத்தை தேர்வு செய்தவர்களுக்கு நாளை (ஆக.23) காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை நாளை இரவு 7 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களுக்கு 24-ம் தேதி…
சென்னை: தமிழக அரசின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் தலைவர் எஸ்.மதுரம், பொதுச்செயலாளர் பெ.முனியப்பன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த வேறொரு இடத்தை ஒதுக்குமாறும், அவர்களை கைதுசெய்ய வேண்டாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தூய்மை பணியாளர்களை பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கைது செய்தது கண்டனத்துக்குரியது. தற்போது, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போராடினால் அவர்களை காவல் துறையினர் கைது செய்வதை, போராட்டத்தை ஒடுக்கும் செயலாக கருதுகிறோம். அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் முதல் அடிப்படை பணியாளர்கள் 2.44 லட்சம் பேரும் ஆதரவு தெரிவிக்கிறோம். தேவைப்பட்டால் அவர்களுடன் இணைந்து போராடவும் எங்கள் சங்கமும், இணைப்பு சங்கங்களும் தயாராக…
சர்கோமா என்பது தசைகள், எலும்புகள், நரம்புகள், கொழுப்பு மற்றும் இரத்த நாளங்கள் போன்ற உடலின் இணைப்பு திசுக்களில் உருவாகும் ஒரு அரிய மற்றும் ஆக்கிரமிப்பு புற்றுநோயாகும். அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் 1% க்கும் குறைவாகவே, சர்கோமாக்கள் ஆரம்பத்தில் கண்டறிவது மிகவும் கடினம், குறிப்பாக அவை பெரும்பாலும் வலியற்ற கட்டிகள் அல்லது வீக்கங்களாக இருப்பதால் பலர் நிராகரிக்கின்றன. பி.எம்.சியில் வெளியிடப்பட்ட முறையான மதிப்புரைகள், சர்கோமாவில் கண்டறியும் தாமதங்கள் பெரிய கட்டிகள், அதிகரித்த மெட்டாஸ்டாஸிஸ் மற்றும் மூட்டு-ஸ்பேரிங் அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூட்டு ஊனமுற்றோர் தேவைப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்துகின்றன. 12 வாரங்களுக்கும் குறைவான அறிகுறிகளைக் கொண்ட எவிங்கின் சர்கோமா நோயாளிகள் கணிசமாக சிறந்த உயிர்வாழும் விகிதங்களை அனுபவித்ததாக பி.எம்.சி.யின் ஆராய்ச்சி காட்டுகிறது, இது ஆரம்பகால கண்டறிதலின் முக்கியமான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. காலப்போக்கில், கவனிக்கப்படாத கட்டிகள் வளர்ந்து நரம்புகள் அல்லது உறுப்புகளுக்கு எதிராக அழுத்தத் தொடங்கலாம், இறுதியில் வலி அல்லது…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில்…
சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ,…