ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தகர்த்த 9 பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல்களை அரசு பகிர்ந்துள்ளது. ஆபரேஷன் சித்தூரில் தாக்குதல் நடத்திய இலக்குகள் குறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின் படி கீழ்கண்ட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து முகாம்களின் விபரம்: 1.முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது. 2.முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: இது லஷ்கர் இ முகம்மதுவின் ஒரு நிலையாகும். இது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட தளமாகும்.…
Author: admin
‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டையால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது. தற்போது வரை கேரளாவில் மட்டும் ரூ.75 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது. கேரளாவில் அதிக வசூல் செய்த படங்களில் 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘பிரேமலு’ படத்தின் வசூலை முறியடித்து 8-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக 11 நாட்கள் ரூ.5 கோடி வசூலை கடந்திருக்கிறது. கேரளா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இரண்டு இடங்களை மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ ஆகியவை பிடித்திருக்கிறது. இந்திப் படமான ‘சாவா’ படத்தின் வசூலை முறியடித்தது ‘துடரும்’.…
ரவீந்திரநாத் தாகூரின் கோடுகள்ஒவ்வொரு ஆண்டும் மே 7 அன்று, இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர், ஒரு சின்னமான கவிஞர், ஒரு திறமையான கலைஞர் மற்றும் மிகவும் பிரபலமான பாலிமத் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தியை உலகம் கொண்டாடுகிறது. தாகூரின் 10 வரிகளை இங்கே குறிப்பிடுகிறோம், அவை எப்போதும் ஊக்கமளிக்கும் மற்றும் அழகாக இருக்கின்றன.
நாசா மற்றும் ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கூட்டு ஆய்வு அடுத்த பில்லியன் ஆண்டுகளில் பூமியின் வாழ்விடத்தை மாதிரியாகக் கொள்ள அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறது. இறுதியில் மரணத்தை முன்வைக்கும் ஒரு விரிவான காலவரிசையை இந்த ஆய்வு முன்வைக்கிறது பூமியில் வாழ்க்கை. சூரியனின் வளர்ந்து வரும் வெப்பம் போன்ற நிலையான ஆனால் மீளமுடியாத சுற்றுச்சூழல் மாற்றங்களால் இந்த செயல்முறை தூண்டப்படும், இது துரிதப்படுத்தப்படும் காலநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல நிலைகளை மாற்றியமைக்கவும். ஆராய்ச்சி பூமியின் சூழலின் படிப்படியான, தொடர்ச்சியான மாற்றத்தை அடையாளம் காட்டுகிறது, இறுதியில் அதை வசிக்க முடியாதது, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வாழ்க்கையின் நிலைத்தன்மையுடன், மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை நெருக்கடியை விட மிக அதிகம்.சூரியன் வெப்பமடைவதால் பூமி மெதுவாக இறந்துவிடும், ஆய்வு கண்டுபிடிக்கிறதுபூமியை வாழக்கூடிய உலகமாக இறப்பதற்கு இறுதியில் காரணம் சூரியன் என்று ஆய்வு ஆணையிடுகிறது. அடுத்த பில்லியன் ஆண்டுகளில், சூரியன் பெருகிய முறையில் அதன் ஆற்றலை அதிகரிக்கும்.…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலின் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…
உயர் யூரிக் அமிலம் உங்கள் மூட்டுகளில் சிறிய படிகங்களை உருவாக்கி, வீக்கத்திற்கு வழிவகுக்கும். தீவிரமாக, இது பெருவிரல் அல்லது பிற மூட்டுகளில் லேசான கூட்டு அச om கரியம், விறைப்பு அல்லது லேசான வீக்கம் போன்றதாக உணரக்கூடும். இந்த அறிகுறிகள் பொதுவாக புறக்கணிக்கப்படுவதற்கு லேசானவை, ஆனால் விரைவாக கீல்வாதமாக உருவாகலாம், இதனால் கடுமையான வலி மற்றும் மூட்டு சேதம் ஏற்படுகிறது.
குவாஹாட்டி: அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியிருந்தார், அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவுரவ் கோகோய் பாகிஸ்தான் சென்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரது வருகை மற்றும் புறப்பாடு அட்டாரி எல்லையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமாபாத்தில் 15 நாட்கள் தங்கியிருந்தார். முதல் 7 நாட்கள் அவருடன் அவரது மனைவி தங்கியிருந்தார். மனைவி திரும்பிய பிறகு கோகோய் அங்கு தங்கியுள்ளார். அவரது பயண விவரம் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என கருதுகிறோம். அவர் ராணுவத் தலைமையகம், லாகூர், சிந்து அல்லது பிற முக்கியமான இடங்களுக்குச் சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும் வேண்டும்.…
சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. பணி நிறைவேறும் வரை இனி ஓய்வில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார். இதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தை அவர் டேக் செய்துள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக,…
நேரடி மோதலுக்கு பதிலாக, இந்த வகை கையாளுபவர் மற்றவர்களை கிண்டல், பின்னடைவு பாராட்டுக்கள் அல்லது தாமதமான பதில்கள் மூலம் நுட்பமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். முக்கிய தகவல்களைக் கடந்து செல்ல அவர்கள் “மறந்துவிடலாம்” அல்லது ஒரு அணியின் வீரர் மோசமாக தோற்றமளிக்க வேலையை தாமதமாக வழங்கலாம். அவர்களின் நடத்தை குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது, அதே நேரத்தில் தவறுகளை மறுக்க அனுமதிக்கிறது. அத்தகைய நபரை நீங்கள் பணியிடத்தில் கையாளுகிறீர்கள் என்றால், இதுபோன்ற சிக்கல்களை அமைதியான, தொழில்முறை தொனியில் ஆவணப்படுத்தவும் உரையாற்றவும்.
புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோனி அல்பனீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அப்போது வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமருடன் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “எனது நண்பர் அந்தோனி அல்பனீஸ் கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க அவருடன் பேசினேன். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை புதிய உற்சாகத்துடன் வலுப்படுத்தவும், இரு தரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிய இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.
