தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக நாள் மற்றும் நேரம் குறித்து கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விதாயகர்த்தாவாக நான் பணியாற்றுகிறேன். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நாள் பார்த்து குறித்து கொடுத்து வருகிறேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இக்கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறித்து தருமாறு கோயில் இணை ஆணையர் கேட்டுக்கொண்டதன் பேரில் விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23-ம் தேதி (07.07.2025) காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை என இரண்டு முகூர்த்த நேரங்கள் குறித்துக்கொடுத்தேன். அப்போது இவ்வருடத்துக்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளிவரவில்லை. தற்போது வாக்கிய பஞ்சாங்கம் வெளியாகியுள்ளது. அதன் படி பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட நேரங்களை விட அபிஜித் முகூர்த்தம் சரியாக…
Author: admin
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து, “மகளிர் விடியல் பயணத் திட்டம்.” குறித்து பயணிகளிடம் உரையாடினார். அப்போது முதல்வர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பயணத்தை தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று (மே 7) பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்று தலைமைச் செயலகம் வருகைதந்த தமிழக முதல்வர், தலைமைச் செயலகத்திலிருந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள விழாவுக்கு செல்லும் வழியில், சென்னை வள்ளலார் நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் 32-B மாநகரப் பேருந்தில் அரசினர் தோட்டம் அருகில் உள்ள ஓமந்தூரார் பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் செய்து முதல்வர்…
பெற்றோருக்குரியதாக வரும்போது, எந்த அளவும் பொருந்தாது, தம்பதிகள் தங்கள் குழந்தையை சிறப்பாக உணரும் விதத்தில் வளர்க்க சுதந்திரமாக இருக்கிறார்கள், அது தோற்றமளித்தாலும், அல்லது மற்றவர்களுக்கு வித்தியாசமாக ஒலித்தாலும் கூட. “7-7-7 பயனுள்ள பெற்றோரின் விதியால்” நிறைய பெற்றோர்கள் சத்தியம் செய்கிறார்கள், இது உங்கள் பிள்ளை வளர உதவும் ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த கருவியாகும், வாழ்க்கையில் செழித்து, அவர்களை நன்கு வட்டமான நபர்களாக மாற்றுகிறது. ஆனால், 7-7-7 விதி என்ன? நாங்கள் பாருங்கள் …புரிந்துகொள்ளுதல் 777இந்த விதி ஒரு குழந்தையின் வளர்ச்சியை தலா ஏழு ஆண்டுகளின் மூன்று முக்கியமான கட்டங்களாகப் பிரிக்கிறது, ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த பெற்றோருக்குரிய விதியைப் புரிந்துகொள்வதற்கான எளிதான வழிகாட்டி மற்றும் இது குழந்தைகள் மற்றும் பெற்றோர் இருவருக்கும் எவ்வாறு பயனளிக்கிறது.பெற்றோரின் 7-7-7 விதி என்ன?7-7-7 விதி ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் 21 ஆண்டுகளை தலா…
புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்கள், 9 பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என இந்த தாக்குதல் குறித்து விவரித்த…
‘ஹரி ஹர வீர மல்லு’ படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. ஆனால், எப்போது வெளியாகும் என்பது விரைவில் தெரியவரும். பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட கடைசி 2 நாட்கள் படப்பிடிப்பை முடித்து, இதனை அறிவித்துள்ளது படக்குழு. சமீபத்தில் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கினார். இதனால் பவன் கல்யாண் குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு சென்றார்கள். இதனை முன்னிட்டு பவன் கல்யாண் இப்படத்துக்கு தேதியை ஒதுக்குவதில் தாமதம் ஆனது. விரைவில் இறுதிகட்டப் டப்பிங் பணிகளிலும் கலந்துக் கொள்ளவுள்ளார் பவன் கல்யாண். இப்படம் மே 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பவன் கல்யாண் மகனுக்கு ஏற்பட்ட விபத்தினால் பட வெளியீடு தாமதமானது. தற்போது விரைவில் புதிய வெளியீடு தேதி அறிவிக்கப்படவுள்ளது. மே 30-ம் தேதி…
சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே என்றும் மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…
கற்பூரம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
புதுடெல்லி: பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை வரவேற்றுள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இதுதான் தன் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியும் இதில் ஒருவர். அவர் தனது மனைவியுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மனைவி கண் முன்னே கொல்லப்பட்டார். லஷ்கர் இ தொய்பாவின் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசு, ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கியது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து…
‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் ரூ.104 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படத்தின் வசூலுக்கு குறைவில்லை என்பதே இந்த உற்சாகத்துக்கு காரணம். 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குத பிளவு மூல நோய், இரண்டு ஒத்த நிலைமைகள் (பிந்தையது குவியல்கள் என்றும் அழைக்கப்படுகிறது), இது ஒரு பொதுவான பிரச்சினையாகும், இது ஆசனவாயின் புறணியில் தீவிர வலி, அச om கரியம் அல்லது இரத்தப்போக்கு கூட ஏற்படுத்தும்.இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம், மேலும் இது நாள்பட்டதாக இருக்கலாம், அதாவது இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இருப்பினும், சரியான கவனிப்பு, மருந்துகள் மற்றும் தூண்டுதல்களைத் தவிர்ப்பதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.புற்றுநோய் இணைப்பு உள்ளதா?மறுபுறம், குத பிளவுகள் அல்லது மூல நோய் போன்ற பொதுவான குத பிரச்சினைகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆழமாக தோண்டுவோம் …குத பிளவுகள் மற்றும் மூல நோய் என்றால் என்ன?குத பிளவுகள் ஆசனவாயின் புறணி சிறிய கண்ணீர். அவை வழக்கமாக மலச்சிக்கல், கடினமான மலம் அல்லது குடல் அசைவுகளின் போது சிரமப்படுவதால் நிகழ்கின்றன. அவை வலி மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு…
