Author: admin

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இன்று நான் வழக்கத்துக்கு மாறாக நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்துள்ளேன். அதற்கு காரணம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையே. இந்த பதிலடி இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடியது. இந்த நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும். மத்திய அரசுக்கு எதிராக ரெய்ச்சூரில் போராட்டம் நடத்துவதற்காக வந்தேன். ஆனால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்ற தருணத்தில் அந்த போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் ரத்து செய்துவிட்டேன். இந்திய ராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் துல்லியமானது. பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள‌னர்.…

Read More

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் கால்நடை சேவை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் கறவைகளுக்கு தேவையான அவசரகால சிகிச்சை உதவிகள் பெற மற்றும் மருத்துவ ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய ‘பாரத் சஞ்சீவனி’ செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பால்வளத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் திமுக அரசு சரித்திர சாதனைகளை படைத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, கால்நடைகளுக்கான சிகிச்சைக்கு மருத்துவர்களை தேடி விவசாய பெருமக்கள் செல்வதை தவிர்த்து, இந்த மையத்தை தொடர்புகொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தரமான பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதவீத ஊக்கத்தொகை…

Read More

(படம்: டாக்டர் கேசி என்றால் புதியது அமெரிக்க அறுவை சிகிச்சை ஜெனரல். முன்னாள் ஃபாக்ஸ் செய்தி பங்களிப்பாளர் டாக்டர் ஜேனட் நேஷிவாட்டின் நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பின்னர் 37 ஆண்டுகள் பழமையான ஆரோக்கிய செல்வாக்கு, தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் முன்னாள் ஆலோசகர்.வழிமுறைகள் “எங்கள் அற்புதமான சுகாதார மற்றும் மனித சேவைகளின் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர், தலைகீழாக மாற்றுவதற்காக எங்கள் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிசெய்யும் நாள்பட்ட நோய் தொற்றுநோய்எதிர்காலத்தில், அனைத்து அமெரிக்கர்களுக்கும் பெரும் ஆரோக்கியத்தை உறுதிசெய்க, “டிரம்ப் உண்மை சமூகத்தில் அறிவித்துள்ளார், ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் அறுவை சிகிச்சை ஜெனரல் பொது சுகாதாரத்தில் நாட்டின் முன்னணி செய்தித் தொடர்பாளர் ஆவார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, சர்ஜன் ஜெனரல் அறிவியல் அடிப்படையிலான சுகாதார தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குகிறார் மற்றும் சுகாதாரக் கொள்கை குறித்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறார். சுகாதார…

Read More

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஹைதராபாத்தில் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கம் தகுந்த பாடம் கற்பித்துள்ளோம். பிரதமரின் நடவடிக்கைக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாட்டில் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை பிரதமர் ஓய மாட்டார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் அரசியல்வாதிகள் தங்களின் மனோபாவத்தை மாற்றிக்கொள்வது அவசியம். இந்திய ராணுவத்தையோ, அரசையோ சமூக வலைதளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

Read More

மதுரை: குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை காளிகாப்பானைச் சேர்ந்த எம்.சவுந்தரபாண்டி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காளிகாப்பான் குட்லக் அவென்யூ குடியிருப்பு பகுதியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 16.12.2024-ல் முதுமையால் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தியின் உடல் என் வீடு அருகே அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு கிராம ஊராட்சி விதிகள்படி, குடியிருப்புப் பகுதியிலிருந்து 90 மீட்டருக்குள் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது. மேலும், உரிமம் பெறப்படாத இடங்களில் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற முழு அமர்வும், இரு நீதிபதிகள் அமர்வும் 2023-ல் உத்தரவிட்டன. எனவே, குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் உடலை அங்கிருந்து அகற்றி, அனுமதிக்கப்பட்ட மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்…

Read More

சியா விதைகள் மிருதுவான கிண்ணங்கள் மீது தெளிக்கப்படுவதையும், ஒரே இரவில் ஓட்ஸில் கிளறப்படுவதையோ அல்லது உங்களுக்கு பிடித்த ஆரோக்கிய செல்வாக்கின் “உள் ஷவர்” பானத்தில் ஜெல்லி போன்ற குமிழ்களாக வீங்கியதையோ நீங்கள் பார்த்திருக்கலாம்.ஆனால் இன்ஸ்டாகிராம் அழகியல் மற்றும் டிக்டோக் போக்குகளுக்கு அப்பால், சியா விதைகள் ஊட்டச்சத்து பவர்ஹவுஸ்கள், அவை தீவிரமான பஞ்சைக் கட்டுகின்றன -சிறிய அளவுகளில் கூட.எனவே இன்று, நாங்கள் ஒரு தேக்கரண்டி சியா விதைகளில் பெரிதாக்குகிறோம் – ஏனெனில் ஆம், ஒரு ஸ்பூன் உங்கள் முழு உணவையும் அமைதியாக மேம்படுத்த முடியும். அந்த 60-இஷ் கலோரிகள் உங்கள் உடலுக்கு என்ன செய்கின்றன (ஸ்பாய்லர் எச்சரிக்கை: நிறைய), உங்கள் அன்றாட வழக்கத்தில் அவை ஏன் ஒரு இடத்திற்கு தகுதியானவை.சியா விதைகளின் ஒரு கரண்டியால் எத்தனை கலோரிகள் உள்ளன?அடிப்படைகளுடன் ஆரம்பிக்கலாம். சியா விதைகளின் ஒரு தேக்கரண்டி சுமார் 12 கிராம் எடையும், சுமார் 58 முதல் 60 கலோரிகளையும் கொண்டுள்ளது. ஆனால் அந்த…

Read More

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 81 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் 11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில்…

Read More

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கிவைத்தார். அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை, பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2025-2026) அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறை செயலர் சி.சமயமூர்த்தி, தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு…

Read More

ரோம் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறார். சிஸ்டைன் சேப்பலில் உள்ள மைக்கேலேஞ்சலோவின் சின்னமான ஓவியங்களின் பார்வையின் கீழ், கிரிம்சன் உடையில் உள்ள கார்டினல்கள் பூமியில் மிகவும் மர்மமான மற்றும் வரலாற்று மரபுகளில் ஒன்றான போப்பாண்டவர் மாநாட்டிற்காக சேகரிக்கின்றன. எல்லா கண்களும் அந்த புகைபோக்கி மீது வெள்ளை புகைக்காக காத்திருக்கும்போது, ​​இங்கே நீங்கள் தவறவிட விரும்பாத வேறு ஒன்று: புதிய போப்பின் பெயர்.அந்த ஒரு பெயர் எல்லாவற்றையும் குறிக்க முடியும் – அவருடைய நம்பிக்கைகள், அவரது முன்னுரிமைகள், அவர் எந்த வகையான தலைவராக இருப்பார் என்று நம்புகிறார்.ஒரு உரையை விட சத்தமாக பேசும் பெயர்நம்புவோமா இல்லையோ, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பின் முதல் உண்மையான செய்தி ஒரு பெரிய முகவரி அல்லது கோட்பாட்டில் பெரும் மாற்றத்தின் வடிவத்தில் வரவில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் பெயரில் அது இருக்கிறது. கார்டினல்-திரும்பிய-போப் அந்த வத்திக்கான் பால்கனியில் வெளியேறும் தருணம், “ஹபேமஸ் பாப்பம்” (எங்களிடம் ஒரு போப்!) என்று கேள்விப்படுகிறோம், பின்வரும்…

Read More

தஞ்சாவூர்: சித்திரைப் பெருவிழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆரூரா… தியாகேசா…’ என்று முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த ஏப். 23-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தேரில் தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா.. என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேருக்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் சென்றன. தேரோடும் வீதிகளில் மேலவீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ் வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில்,…

Read More