புதுடெல்லி: சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. கர்நாட மாநிலத்தின் சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா (50). இவர் மற்றும் இவரது சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சொந்தமான 30 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புடைய தங்க நகைகள, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 4 வாகனங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. மேலும் 17 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வங்கி லாக்கர்களை முடக்கியது. கோவாவில் பப்பீஸ் கேசினா கோல்டு, ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பீஸ் கேசினா பிரைடு, ஓஷன் 7 கேசினோ,…
Author: admin
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. புழுக்கமும் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிப் பட்டனர். திடீரென மாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று 17 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனுக் குடன் வெட்டி அகற்றினர். கனமழை கொட்டித் தீர்த்த நிலையிலும், மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து சுரங்கப் பாலங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீராக…
பெங்களூரு: கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை போலீஸார்கைது செய்தனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அந்த சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாகவும் முன்னாள் தூய்மை பணியாளர் போலீஸில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடக அரசு இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்த குழுவை சேர்ந்த போலீஸார் நேத்ராவதி ஆற்றங்கரையில் 13 இடங்களில் தோண்டி, சோதனை நடத்தினர். அதில் 3 இடங்களில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் மண்டை ஓடு கிடைக்கவில்லை. கோயில் நிர்வாகி புகார்: இதையடுத்து…
இந்த பகுதி உலகின் பணக்கார பல்லுயிர் இடங்களில் ஒன்றான நீல்கிரி உயிர்க்கோள ரிசர்வ் உட்பட பல வனவிலங்கு சரணாலயங்களுக்கு அடைக்கலம் தருகிறது. வயநாட் வனவிலங்கு சரணாலயம் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான் மற்றும் எண்ணற்ற வகையான பறவைகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாயகமாகும், இது இயற்கை காதலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களுக்கு ஒரு சொர்க்கமாக அமைகிறது. ஜீப் சஃபாரிகள் பார்வையாளர்களுக்கு இந்த விலங்குகளை தங்கள் இயற்கை வாழ்விடத்தில் காண வாய்ப்பளிக்கிறார்கள். புகைப்படங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்கள் தொலைபேசியிலிருந்து விலகி இருக்கும் தருணத்தை அனுபவிக்க இது சரியான வாய்ப்பாகும்.
புதுடெல்லி: வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினேன் அந்த வேட்கை காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது கிடையாது. பொருளாதார பற்றாக்குறை குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதிக்கின்றனர். தற்போது இந்திய ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரச்சினை எழுந்திருக்கிறது. நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதேபோல அரசியலமைப்பு சட்டம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குடியரசு…
மூலவர்: கோணேஸ்வரர் அம்பாள்: பெரியநாயகி தலவரலாறு: பிரம்மா, வேதங்களை ஓர் அமுதக்குடத்தில் வைத்தபோது வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தி, மீண்டும் உயிர்களைப் படைத்தார். அமுதக்குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இப்பகுதியில் (குடவாசல் / குடவாயில்) விழுந்தது. காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது. பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை. சத்ரு என்பவளின் அடிமையாக இருந்தாள். தாயை மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு. போரிட்டார். அவனை வென்று குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார்.…
புதுடெல்லி: உடல் பருமனைக் குறைப்பது தொடர்பாக தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை அளித்ததாக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: விஎல்சிசி அழகு நிலைய நிறுவனம், கொழுப்பை குறைத்தல், உடல் பருமனைக் குறைத்தல் போன்ற சிகிச்சைக்காக தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. யுஎஸ்-எப்டிஏ அனுமதியளித்த உடல் பருமனைக் குறைக்கும் கருவிகளைக் கொண்டு உடலை ஒல்லியாக்குவோம் என அவர்கள் விளம்பரம் செய்திருந்தனர். இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கருவி மூலம் உடனடியாக உடல் பருமனைக் குறைக்க முடியாது என்றும், அந்த விளம்பரமானது நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகிறது என்றும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.3 லட்சம் அபராதத்தை விஎல்சிசி நிறுவனத்துக்கு சிசிபிஏ விதித்துள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக பணியாற்றும் தனது நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோர். இவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலக இயக்குனராக உள்ளார். இவரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடகத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பதாவது: செர்ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்பர். இவர் பல ஆண்டுகளாக என்னுடன் இருப்பவர். அவருக்கு பதவி உயர்வு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றுவார். சிறப்பு தூதர்: மேலும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அவர் சிறப்பு தூதராகவும் செயல்படுவார். செர்ஜியோ கோர் தலைமையிலான குழு, அமெரிக்க அரசுத் துறையில் நியமிக்க 4,000 அதிகாரிகளை குறித்த நேரத்தில் தேர்வு…
சென்னை: ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பை சேகரிக்க வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர் சங்கம், தூய்மைக் காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, தூய்மைக் காவலர்கள் சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு எடுக்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் சமத்துவமான கல்வி பெறுவதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்படுத்தும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்துக்கென பிரத்யேக மாநிலக் கல்விக் கொள்கை-2025 வடிவமைக்கப்பட்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேட்டிருந்தனர். அதற்கு அவர் அளித்த பதில்கள்: மாநில கல்விக் கொள்கை சமச்சீர் கல்வி முறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? – க.செல்வசிதம்பரம், ஆசிாியர், திருவாரூர் சமச்சீர் கல்வி முறைதான் தமிழகத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே மாநிலக்கல்விக் கொள்கை மூலம் உருவாக்க பெறும் பாடத்திட்டம் அமையும். அவை திறன்சார்ந்த கற்பித்தலையும், எதிர்காலத் தேவை மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டும் வடிவமைக்கப்படும். இந்த ஓரே மாதிாியான பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சமத்துவமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும். மாநில கல்விக் கொள்கைக்கும் தற்போதைய…