கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று ஒரே இரவில் உக்ரைன் மீது 40 ஏவுகணைகள் மற்றும் 580 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த சரமாரியான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருடான சந்திப்பின்போது, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வலியுறுத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய அதிபர்…
Author: admin
சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி…
நல்ல பார்வை என்பது மங்கத் தொடங்கும் வரை பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்பட்ட ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது கண் சோதனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், ஆனால் உண்மை என்னவென்றால், பலரும் உணர்ந்ததை விட பார்வையைப் பாதுகாப்பதில் உணவு மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. வறட்சியைத் தடுப்பதில் இருந்து வயது தொடர்பான கண் நிலைமைகளின் அபாயத்தைக் குறைப்பது வரை, தட்டில் என்ன நடக்கிறது என்பது கண்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை நேரடியாக ஆதரிக்கிறது. இந்திய சமையலறைகளில் பல தாழ்மையான, உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உணவுகள் கண்களுக்கு இயற்கை பாதுகாப்பாளர்களாக செயல்படலாம். அவற்றில் பத்து பேரை இங்கே ஒரு நெருக்கமான பார்வை.
பெங்களூரு: பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும், கனமழையாலும் அவை உருவாகின்றன’ என்று கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கூறினார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் இங்கே இருக்கிறோம். பாஜக இதில் அரசியல் செய்கிறது; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இன்று மாலை, முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்துகிறார். பள்ளங்கள் இயற்கையால் ஏற்படுகின்றன; யாரும் அவற்றை உருவாக்க விரும்பவில்லை. பெங்களூருவில் வாகனங்களின் அதிகரிப்பு, அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே 7,000 க்கும் மேற்பட்ட பள்ளங்களை நிரப்பிவிட்டோம், பெங்களூருவின் சாலைகளில் இன்னும் 5,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளன. பள்ளங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
காசா: ”இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. – இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள். இன்றைய நிலவரப்படி காசாவில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்தான் அங்கிருந்து இப்படியொரு வேதனைக் குரல் ஒலித்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இன்றுவரை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்பதே இஸ்ரேலின் முழுக்கமாக இருக்கிறது. இந்த உறுதிப்பாட்டை முன்வைத்தே இடையில் லெபனான், சிரியா, ஏமன், ஈரான், கத்தார் எனப் பல நாடுகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவிட்டது. இதில் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.…
கோவில்பட்டி: “தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அதனால் என்ன… அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் இன்று நடந்தது. எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் தீப்பெட்டி தொழில் கடந்து வந்த பாதை குறித்து விளக்க உரையாற்றினார். எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் செ.ராஜு, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஐடிசி நிறுவன நிதித்துறை தலைவர் சுரேந்தர் கே.ஷிபானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீப்பெட்டி…
பறவைகள் தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கின்றன, ஆனால் அவை உங்கள் வீடு, தோட்டம் அல்லது உள் முற்றம் ஆகியவற்றுக்கு மிக அருகில் கூடிவருகையில், அவை விரைவாக அழகாக இருந்து தொந்தரவாக மாறும். பழங்களில் பிச்சை எடுப்பது முதல் மோசமான இடங்களில் கூடு கட்டுவது வரை, அவற்றின் இருப்பு ஒரு குழப்பத்தை உருவாக்கி சொத்துக்களைக் கூட சேதப்படுத்தும். அதிர்ஷ்டவசமாக, தீங்கு விளைவிக்காமல் அவர்களை ஊக்கப்படுத்த இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழிகள் உள்ளன. பறவைகள் விரும்பாத நறுமணங்களைப் பயன்படுத்துவதே மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று. சில வலுவான வாசனைகள் அவற்றின் புலன்களை எரிச்சலூட்டுகின்றன, மேலும் அவற்றை உங்கள் இடத்திற்கு அருகில் குடியேறுவதைத் தடுக்கலாம். பறவைகள் வெறுக்கும் மிகவும் பயனுள்ள வாசனைகள் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களை பறவை இல்லாததாக வைத்திருக்க அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்.பறவைகளை பாதுகாப்பாக ஒதுக்கி வைப்பது எப்படி: 6 அவர்கள் வெறுக்கிறார்கள் மற்றும் எளிய வீட்டு வைத்தியம்கெய்ன் மிளகுகெய்ன் மிளகு பறவைகளுக்கு வலுவான…
வயநாடு: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இதில் எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விரைவில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார். கேரளாவின் வயநாட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஒரு ஹைட்ரஜன் குண்டை விரைவில் வெளிப்படுத்துவேன். அந்த ஆதாரம் இப்போதுள்ள நிலைமையின் யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைக்கும். ஏனென்றால், நாங்கள் சொல்வதற்கு எங்களிடம் திறந்த மற்றும் மூடிய ஆதாரம் உள்ளது. எனது முதல் மற்றும் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்புகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். எங்களிடம் கருப்பு – வெள்ளை ஆதாரம் உள்ளது. நாங்கள் ஆதாரமின்றி எதையும் சொல்லவில்லை. நடந்த பல விஷயங்களுக்கு…
Last Updated : 20 Sep, 2025 02:42 PM Published : 20 Sep 2025 02:42 PM Last Updated : 20 Sep 2025 02:42 PM ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவின் வழக்கை முன்வைத்து, ‘குட் பேட் அக்லி’ படத்தினை ஓடிடி தளத்திலிருந்து நீக்கியது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி உருவானது. தற்போது மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். ’குட் பேட் அக்லி’ படத்தில் உபயோகிக்கப்பட்ட இளையராஜா பாடல்கள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டது. அதற்கு புதிதாக ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் நடனமாடும் ‘ஒத்த ரூபாயும்’ பாடல் முழுமையாக நீக்கப்பட்டு, அதில் பாடலாக அல்லாமல் புதிதாக பின்னணி இசையாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ‘குட் பேட்…
ராமேசுவரம்: புனித தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர். நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ராமேசுவரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், இங்கு புனிதத்தை கெடுக்கும் வகையில் மதுக்கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ராமேசுவரம் தீவில் இயங்கிவந்த 11 மதுக்கடைகளில் 9 கடைகள் மூடப்பட்டன. தற்போது, பாம்பனில் மட்டும் 2 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளையும் அகற்றி, அப்துல் கலாம் பிறந்த ராமேசுவரத்தை மது இல்லாத தீவாக மாற்ற வேண்டும் என்று கோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், பாம்பன் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளி்ல் கூடுதல் விலைக்கு சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.50 முதல் ரூ.100…