Author: admin

புதுடெல்லி: சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி தங்​கம் உள்​ளிட்​ட​வற்றை அமலாக்​கத் துறை கைப்​பற்​றி​யுள்​ளது. கர்​நாட மாநிலத்​தின் சித்​ரதுர்கா தொகுதி காங்​கிரஸ் எம்​எல்ஏ வீரேந்​திரா (50). இவர் மற்​றும் இவரது சகோ​தரர் உள்​ளிட்ட குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான 30 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று முன்​தினம் சோதனை நடத்​தி​யது. பல்​வேறு மாநிலங்​களில் நடை​பெற்ற இந்த சோதனை​யில் வெளி​நாட்டு கரன்சி உட்பட ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி மதிப்​புடைய தங்க நகைகள, 10 கிலோ வெள்​ளிப் பொருட்​கள் மற்​றும் 4 வாக​னங்​களை அமலாக்​கத் துறை கைப்​பற்​றியது. மேலும் 17 வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் 2 வங்கி லாக்​கர்​களை முடக்​கியது. கோவா​வில் பப்​பீஸ் கேசினா கோல்​டு, ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பீஸ் கேசினா பிரைடு, ஓஷன் 7 கேசினோ,…

Read More

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. புழுக்கமும் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிப் பட்டனர். திடீரென மாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று 17 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனுக் குடன் வெட்டி அகற்றினர். கனமழை கொட்டித் தீர்த்த நிலையிலும், மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து சுரங்கப் பாலங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீராக…

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை போலீஸார்கைது செய்தனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அந்த சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்த‌தாகவும் முன்னாள் தூய்மை பணியாளர் போலீஸில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடக அரசு இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்த குழுவை சேர்ந்த போலீஸார் நேத்ராவதி ஆற்றங்கரையில் 13 இடங்களில் தோண்டி, சோதனை நடத்தினர். அதில் 3 இடங்களில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் மண்டை ஓடு கிடைக்கவில்லை. கோயில் நிர்வாகி புகார்: இதையடுத்து…

Read More

இந்த பகுதி உலகின் பணக்கார பல்லுயிர் இடங்களில் ஒன்றான நீல்கிரி உயிர்க்கோள ரிசர்வ் உட்பட பல வனவிலங்கு சரணாலயங்களுக்கு அடைக்கலம் தருகிறது. வயநாட் வனவிலங்கு சரணாலயம் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான் மற்றும் எண்ணற்ற வகையான பறவைகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாயகமாகும், இது இயற்கை காதலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களுக்கு ஒரு சொர்க்கமாக அமைகிறது. ஜீப் சஃபாரிகள் பார்வையாளர்களுக்கு இந்த விலங்குகளை தங்கள் இயற்கை வாழ்விடத்தில் காண வாய்ப்பளிக்கிறார்கள். புகைப்படங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்கள் தொலைபேசியிலிருந்து விலகி இருக்கும் தருணத்தை அனுபவிக்க இது சரியான வாய்ப்பாகும்.

Read More

புதுடெல்லி: வரும் செப்​. 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார். எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்டு உள்​ளார். பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் நீதி​மன்​றங்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றிய​போது அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றினேன் அந்த வேட்கை காரண​மாகவே தற்​போது குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் போட்​டி​யிடு​கிறேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது கிடை​யாது. பொருளா​தார பற்​றாக்​குறை குறித்து பல்​வேறு தரப்​பினரும் விவா​திக்​கின்​றனர். தற்​போது இந்​திய ஜனநாயகத்​தில் இது​போன்ற பிரச்​சினை எழுந்​திருக்​கிறது. நமது நாட்​டின் ஜனநாயகத்​தில் பற்​றாக்​குறை ஏற்​பட்​டிருக்​கிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வரு​கிறது. இதே​போல அரசி​யலமைப்பு சட்​டம், பல்​வேறு சவால்​களை எதிர்​கொண்டு வரு​கிறது. குடியரசு…

Read More

மூலவர்: கோணேஸ்வரர் அம்பாள்: பெரியநாயகி தலவரலாறு: பிரம்மா, வேதங்களை ஓர் அமுதக்குடத்தில் வைத்தபோது வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தி, மீண்டும் உயிர்களைப் படைத்தார். அமுதக்குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இப்பகுதியில் (குடவாசல் / குடவாயில்) விழுந்தது. காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது. பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை. சத்ரு என்பவளின் அடிமையாக இருந்தாள். தாயை மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு. போரிட்டார். அவனை வென்று குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார்.…

Read More

புதுடெல்லி: உடல் பரு​மனைக் குறைப்​பது தொடர்​பாக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை அளித்​த​தாக விஎல்​சிசி நிறு​வனத்​துக்கு மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யம்​(சிசிபிஏ) ரூ.3 லட்​சம் அபராதத்தை விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய நுகர்​வோர் நலத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: விஎல்​சிசி அழகு நிலைய நிறு​வனம், கொழுப்பை குறைத்​தல், உடல் பரு​மனைக் குறைத்​தல் போன்ற சிகிச்​சைக்​காக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. யுஎஸ்​-எப்​டிஏ அனு​ம​தி​யளித்த உடல் பரு​மனைக் குறைக்​கும் கருவி​களைக் கொண்டு உடலை ஒல்​லி​யாக்​கு​வோம் என அவர்​கள் விளம்​பரம் செய்​திருந்​தனர். இதுதொடர்​பாக மத்​திய நுகர்​வோர் நலத்​துறை அமைச்​சகத்​தின் கவனத்​துக்​குக் கொண்டு வரப்​பட்​டது. இதையடுத்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், அந்​தக் கருவி மூலம் உடனடி​யாக உடல் பரு​மனைக் குறைக்க முடி​யாது என்​றும், அந்த விளம்​பர​மானது நுகர்​வோருக்​குத் தவறான தகவல்​களைத் தரு​கிறது என்​றும் தெரிய​வந்​தது. இதையடுத்து ரூ.3 லட்​சம் அபராதத்தை விஎல்​சிசி நிறு​வனத்​துக்கு சிசிபிஏ விதித்​துள்​ளது. இவ்​வாறு அந்த செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

Read More

நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோர். இவர் வாஷிங்​டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் உள்ள அதிபர் அலு​வலக இயக்​குன​ராக உள்​ளார். இவரை இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இது குறித்து சமூக ஊடகத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தாவது: செர்​ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்​பர். இவர் பல ஆண்​டு​களாக என்​னுடன் இருப்​பவர். அவருக்கு பதவி உயர்வு அறி​விப்​ப​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். அவர் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக பணி​யாற்​று​வார். சிறப்பு தூதர்: மேலும் தெற்கு மற்​றும் மத்​திய ஆசிய விவ​காரங்​களில் அவர் சிறப்பு தூத​ராக​வும் செயல்​படு​வார். செர்​ஜியோ கோர் தலை​மையி​லான குழு, அமெரிக்க அரசுத் துறை​யில் நியமிக்க 4,000 அதி​காரி​களை குறித்த நேரத்​தில் தேர்வு…

Read More

சென்னை: ஊ​ராட்​சிகளில் தூய்​மைக் காவலர்​களுக்கு சுழற்சி அடிப்​படை​யில் வாரம் ஒரு​நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணை​யர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, மாவட்ட ஆட்​சி​யர்​கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்​பிய சுற்​றறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஊராட்​சிகளில் வீடு​தோறும் குப்பை சேகரிக்க வெளிநிர​வல் முறை​யில் கிராம வறுமை ஒழிப்பு சங்​கம் அல்​லது ஊராட்சி அளவி​லான கூட்​டமைப்​பு​கள் மூலம் தூய்​மைக் காவலர்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​கின்​றனர். இந்​நிலை​யில், தமிழ்​நாடு மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்டி இயக்​குபவர்​கள், தூய்​மைக் காவலர்​கள், தூய்​மைப் பணி​யாளர் சங்​கம், தூய்​மைக் காவலர்​களுக்கு விடு​முறை மற்​றும் விடுப்பு வழங்​கு​வது குறித்து கோரிக்கை விடுத்​துள்​ளது. எனவே, தூய்​மைக் காவலர்​கள் சுழற்சி முறை​யில் வாரம் ஒரு​நாள் விடுப்பு எடுக்​கலாம். இதற்கு மேல் கூடு​தலாக விடுப்பு எடுக்​கப்​பட்​டால் அவர்​களுக்கு ஒரு​நாள் ஊதி​ய​மாக ரூ.160 பிடித்​தம் செய்​யப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Read More

சென்னை: தமிழகத்​தில் அனைத்து மாணவர்​களும் சமத்​து​வ​மான கல்வி பெறு​வதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்​படுத்​தும் என்று அன்​பில் மகேஸ் தெரி​வித்​துள்​ளார். தேசி​யக் கல்விக் கொள்​கைக்கு மாற்​றாக தமிழகத்​துக்​கென பிரத்​யேக மாநிலக் கல்விக் கொள்​கை-2025 வடிவ​மைக்​கப்​பட்டு தமிழக அரசால் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான சந்​தேகங்​கள், கேள்வி​களை ஆசிரியர்​கள், மாணவர்​கள் உள்​ளிட்​டோர் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸிடம் கேட்​டிருந்​தனர். அதற்கு அவர் அளித்த பதில்​கள்: மாநில கல்விக் கொள்கை சமச்​சீர் கல்வி முறை​யில் எத்​தகைய மாற்​றங்​களை ஏற்​படுத்​தும்? – க.செல்​வசிதம்​பரம், ஆசிாி​யர், திரு​வாரூர் சமச்​சீர் கல்வி முறை​தான் தமிழகத்​தின் முது​கெலும்​பாக திகழ்​கிறது. அதை மேலும் வலுப்​படுத்​தும் வித​மாகவே மாநிலக்​கல்விக் கொள்கை மூலம் உரு​வாக்க பெறும் பாடத்​திட்​டம் அமை​யும். அவை திறன்​சார்ந்த கற்​பித்​தலை​யும், எதிர்​காலத் தேவை மற்​றும் சவால்​களைக் கருத்​தில் கொண்​டும் வடிவ​மைக்​கப்​படும். இந்த ஓரே மாதிாி​யான பாடத்​திட்​டம் அனைத்து பள்​ளி​களி​லும் மாணவர்​கள் சமத்​து​வ​மான கல்வி பெறு​வதை உறு​தி​செய்​யும். மாநில கல்விக் கொள்​கைக்​கும் தற்​போதைய…

Read More