Author: admin

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்தாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஜம்மு பிஎஸ்எஃப் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மே 8-ம் தேதி சுமார் 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் நடந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தானின் தாண்டர் பகுதியில் இருந்து அங்குள்ள துருப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினை பயன்படுத்தி பெரிய குழு ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்தது. என்றாலும் விழிப்புடன் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், மிகப்பெரிய இந்த ஊடுருவலை தடுத்தனர். குறைந்தது 7 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இதன்மூலம் பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் சேதம் விளைவித்தனர். தொடர் கண்காணிப்புகளால் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.…

Read More

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம், இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஹில் குரோவ் பகுதில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்க வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் குன்னூர் – ஊட்டி இடையே பாதிப்பின்றி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Read More

தொகுக்கப்பட்ட உணவு, ரொட்டிகள், உணவு, நம்கீன்கள் போன்றவற்றை சாப்பிடத் தயாராக இருக்கும், ஆனால் பெரும்பாலான தொகுக்கப்பட்ட உணவுகள் உப்பு, கொழுப்பு மற்றும் பாதுகாப்புகள் அதிகம், இதனால் அவை மிகவும் ஆரோக்கியமானவை, மேலும் நம் கணினிக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன.துரதிர்ஷ்டவசமாக அது மோசமடைகிறது. பல தொகுக்கப்பட்ட உணவுகளில் நீண்ட காலமாக உட்கொண்டால், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மறைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. எனவே, தீர்வு என்ன? தொகுக்கப்பட்ட உணவை வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய 4 பொருட்கள் இங்கே …பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள்தொத்திறைச்சி, பன்றி இறைச்சி, ஹாட் டாக் மற்றும் டெலி இறைச்சிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பெரும்பாலும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் உள்ளன. இந்த இரசாயனங்கள் இறைச்சியைப் பாதுகாக்கவும் அதன் நிறத்தையும் சுவையையும் மேம்படுத்தவும் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும், உடலில், அவை நைட்ரோசமைன்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்கலாம், அவை பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்ட புற்றுநோய்கள்.உலக சுகாதார அமைப்பு…

Read More

புதுடெல்லி: உத்தராகண்டில் யாத்ரீகர்களுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானி, ஐந்து யாத்ரீகர்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டின் டேராடூனில் இருந்து கங்கோத்ரிக்கு வியாழக்கிழமை காலை 6 யாத்ரீகர்களுடன் ஹெலிகாப்டர் கிளம்பத் தயாராக இருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வானிலை எச்சரிக்கை அறிவுறுத்தலை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் காலை 9 மணியளவில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனானி கிராமத்துக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளனாது. பின்பு அங்குள்ள பாகீரதி ஆற்றில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு யாத்ரீகர்களில் 5 பேர் மற்றும் விமானியும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மும்பையைச் சேர்ந்த விஜய் லட்சுமி ரெட்டி (57), ருச்சி அகர்வால் (56), கலா சந்திரகாந்த் சோனி (61), உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த…

Read More

சென்னை: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு நிலையை முன்னிட்டு, மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது ராணுவ வீரர்கள் துணிச்சலோடு எல்லையில் தங்கள் கடமையை செய்து வரும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம்…

Read More

சென்னை: தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன. துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத் துறை, ரகுபதிக்கும், அவரிடம் இருந்த சட்டத் துறை, துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி 6-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கரிடமும், மதுவிலக்குத் துறை, முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன. பொன்முடி கவனித்து வந்த வனத் துறை, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 2 அமைச்சர்களின் துறைகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரைப்படி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த சுரங்கங்கள், கனிமவளத் துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

சிறுநீரக கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தும். அறிகுறிகள் அவற்றின் அளவு, இருப்பிடம் மற்றும் அவை சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கிறதா என்பதைப் பொறுத்து மாறுபடும். சிறுநீரக கற்கள் நீரிழிவு, இருதய நோய், எலும்பு முறிவுகள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற பிற முறையான நோய்களுக்கு ஆபத்து காரணியாகும்.சிறிய சிறுநீரக கற்களின் விஷயத்தில், நீங்கள் எந்த அறிகுறிகளையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய சிறிய கற்கள் பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது, ​​எந்த அச om கரியமும் இல்லாமல் சிறுநீர் வழியாக செல்கின்றன. இருப்பினும், பெரிய கற்கள் பல அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், அவை லேசான முதல் கடுமையானவை.

Read More

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். “நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். “ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். எனவே, போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பிசிசிஐ நாட்டுடன் நிற்க விரும்புகிறது, இதனால் உடனடியாக ஐபிஎல் 2025…

Read More

சென்னை: பொய் வழக்கு பதிந்து போலீஸார் தன்னை தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் மனு தொடர்பாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பெசன்ட் நகரில் மனித உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து கடந்த டிச. 10-ம் தேதி கண்கவர் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அனுமதியளிப்பதாக வாக்குறுதி அளித்த காவல்துறையினர், நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அனுமதி இல்லை என தெரிவித்தனர். அத்துடன், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதுகுறித்து கேட்க சென்றபோது, போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிந்து, கடுமையாக தாக்கி சிறையில் அடைத்தனர். இதற்கு காரணமான காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட வழக்கு பதிவு…

Read More

நீங்கள் தசையை உருவாக்க விரும்பினால், ஒரு எளிய வீட்டில் சமைத்த உணவு போதுமானதாக இருக்காது. சப்ளிமெண்ட்ஸ் பெரும்பாலும் ‘செயற்கை’ என்பதற்கு ஒரு கெட்ட பெயரைப் பெறுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் உணவு, எவ்வளவு மாறுபட்டதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும், நம் உடலின் தேவைகளை ஆதரிக்க போதுமானதாக இல்லை, குறிப்பாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கைத் துரத்தும்போது (எடை இழப்பு, லாபம், உடல் கொழுப்பைக் குறைத்தல் அல்லது தசையை அதிகரிக்கும்). எளிய புரதத்திலிருந்து வைட்டமின் பி 12 வரை தசை வளர்ச்சியை ஆதரிக்கவும், வலிமையை மேம்படுத்தவும், மீட்பை விரைவுபடுத்தவும் சில கூடுதல் மருந்துகள் இங்கே.

Read More