தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கேனிசா உடன் வந்திருந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியுடன் விவகாரத்துக்கு விண்ணப்பத்திருக்கும் ரவி மோகன், கேனிசா தனது தோழி என்றே பேட்டிகளில் கூறியிருந்தார். இதையொட்டி, ஆர்த்தி ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் விவரம்: “ஓராண்டாக நான் அமைதிக் கவசம் பூண்டிருந்தேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல; என் மகன்களுக்கு என்னைவிட அதிகமான அளவில் அமைதி தேவைப்பட்டது என்பதால்தான். என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும், அத்தனை வசைபாடுதல்களையும், எனை நோக்கி முணுமுணுக்கப்பட்ட கடுஞ்சொற்களையும் கூட உள்வாங்கிக் கொண்டிருந்தேன். என் மேல் உண்மை இல்லை என்பதற்காக அல்ல; என் குழந்தைகளுக்கு பெற்றோர்களில் யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காக! இன்று, இந்த உலகம் கவனமாக தொகுக்கப்பட்ட தோற்றங்களை, புகைப்படத் தலைப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் இந்த…
Author: admin
தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 19-ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெறும். இந்நிலையில் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 18,19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் நிலக்கல் முதல் சபரிமலை வரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் குடியரசுத் தலைவரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “குடியரசுத் தலைவர்…
சமநிலை என்பது நேரம் மட்டுமல்ல, இது ஆற்றலைப் பற்றியது. உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை கவனித்துக் கொள்ளுங்கள். ஊட்டமளிக்கும் உணவை உண்ணுங்கள், உங்கள் உடலை நகர்த்தவும், போதுமான தூக்கம், மகிழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். இந்த அத்தியாவசியங்களைத் தவிர்க்க வேண்டாம்; வாழ்க்கை பிஸியாக இருக்கும்போது அவர்கள் பெரும்பாலும் முதலில் செல்வார்கள், ஆனால் அவை உற்பத்தித்திறனின் அடித்தளமாக இருக்கின்றன. மேலும், ஆற்றல் வடிகட்டிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: வதந்திகள், நச்சு சகாக்கள் மற்றும் அதிகப்படியான கம்யூன்சி. இல்லை, அவிழ்த்து, மீட்டமைக்க வேண்டாம் என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். நன்கு ஓய்வெடுக்கும், மனரீதியாக தெளிவான நீங்கள் ஒரு தீர்ந்துபோன அதிகப்படியான சாதனையாளரை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது செயல்பாட்டு தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மேலும் கூறியதாவது: தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வேளையில், விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வது மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இந்த கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில அதிகாரிகள் மற்றும் களத்தில் உள்ள நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை பராமரிக்க அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் பயணிக்கிறது. இந்த நிலையில், விழிப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான தகவல் தொடர்பு மிகவும் அவசியமானது என்பதை அமைச்சக…
புதுச்சேரி: நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், 13-ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் பணியில் சேருமாறும் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் அனைத்து துறைகளுக்கும் பிறப்பித்த உத்தரவின் விவரம்: “நாட்டில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உருவாகி வரும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. கடுமையான மருத்துவ அல்லது அவசர கால சூழ்நிலைகளைத் தவிர, மறு உத்தரவு வரும் வரை எந்த விடுப்பும் அனுமதிக்கப்படாது. முன்னர் அனுமதிக்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.…
பெருங்குடல் புற்றுநோய் 20 மற்றும் 30 களில் உள்ளவர்கள் உட்பட இளைய நபர்களை அதிகளவில் பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வுகள் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே ஆரம்பகால பெருங்குடல் புற்றுநோய் (ஈஓசிஏசி) வழக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகின்றன. 2010 மற்றும் 2019 க்கு இடையில், ஆரம்பகால புற்றுநோய்கள், குறிப்பாக பெருங்குடல், இந்த வயதினரில் 80% அதிகரித்துள்ளன. நோய் பரவுவதைத் தடுக்க அதன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிரின் குற்றச்சாட்டுக்கு , இந்தியா கர்னல் சோபியா குரேஷி மூலம் தக்க பதில் அளித்துள்ளது என காங். எம்.பி சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வாழ்வது சாத்தியமற்றது என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் கூறினார். அதற்கு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் பாக். ராணுவ தளபதிக்கும், உலகத்துக்கும் இந்தியா சரியான பதில் அளித்துள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். அவருடன் இணைந்து பேட்டியளித்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். இது பாக். ராணுவ தளபதியின் கருத்துக்கு சரியான பதிலடி. இது பாகிஸ்தானியர்கள் கூறுவதுபோல் இந்து – முஸ்லிம் பிரச்சினை அல்ல. இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒன்றாக இணைந்து வாழ்கிறோம்…
சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வரும் 2025-26-ம் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.19 கோடி பாடநூல்கள் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.72 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.47 கோடி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு…
“எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும்…” என்று பட விழாவில் பேசும்போது யோகி பாபு காட்டமாக குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்பு ‘கஜானா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் யோகி பாபு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு ரூ.7 லட்சம் கேட்பதாக தயாரிப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டினார். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ‘கஜானா’ தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனிடையே யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்துகொண்டு பேசும்போது, “என் சம்பளம் எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அனைத்தையும் வெளியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்களே சம்பளத்தை முடிவு செய்து நல்ல கதைகளை அனுப்புங்கள். ஆனால், சொன்ன சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். சம்பள பாக்கியை கேட்டால் தான் இங்கு எதிரியாகி விடுகிறேன். அதுதான் உண்மை.…
கன்று உயர்த்துவது உங்கள் கன்று தசைகளை வலுப்படுத்த எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும்.அதை எப்படி செய்வது: உங்கள் கால்களை தோள்பட்டை அகலத்துடன் நிற்கவும். மெதுவாக உங்கள் கால்விரல்களில் உயர்ந்து, உங்கள் குதிகால் முடிந்தவரை தரையில் இருந்து உயர்த்தவும். ஒரு நொடி பிடித்துக் கொள்ளுங்கள், பின்னர் உங்கள் குதிகால் மெதுவாக கீழே குறைக்கவும்.மறுபடியும்: 15 முதல் 20 வரை 2 முதல் 3 செட் செய்யுங்கள்.நன்மைகள்: இந்த உடற்பயிற்சி கன்று தசைகளை செயல்படுத்துகிறது, அவற்றின் உந்தி செயலை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது எங்கும் செய்யப்படலாம்-வரிசையில் காத்திருக்கும்போது அல்லது வேலையில் இடைவேளையின் போது.
