இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று (மே 10) அதிகாலை 3.15 மணி முதல்…
Author: admin
தேர்தல் வரப்போகிறது என்றாலே அரசுப் பணியின் அந்திம காலத்தில் இருக்கும் பலரும் ஆர்வமாய் அரசியல் களத்துக்கு வருவார்கள். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தாங்கள் விரும்பும் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்பார்கள். சிலருக்கு லக் அடிக்கும்; பலருக்கு பக் என்றாகிவிடும். பரமக்குடி பாலு இதில் இரண்டாவது ரகம். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி தொகுதிக்குள் வரும் போகலூர் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் எஸ்.பாலு. தென்காசியில் மாவட்டப் பதிவாளராக இருந்த பாலு, 2021 தேர்தலை மனதில் வைத்து பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மாணவப் பருவத்திலிருந்தே திமுக அனுதாபியாக இருந்துவந்த பாலு, பரமக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இணைந்தார். அதன் பிறகு பரமக்குடி திமுக-வில் பரபர அரசியல்வாதியான பாலு, கட்சிக்காக கோடிகளை செலவழித்தார். பரமக்குடியில் ‘ஸ்டாலின் தான் வாராரு’ கூட்டத்தை ‘பிரமாதப்’ படுத்தியதில் பாலுவுக்கு பெரும் பங்குண்டு என்று சொல்வார்கள். இத்தனையும் செய்துவிட்டு…
சமீபத்திய கர்டின் பல்கலைக்கழக ஆய்வு, எளிய, செலவு இல்லாத அன்றாட நடவடிக்கைகள் மன நலனை கணிசமாக அதிகரிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. நண்பர்களுடன் வழக்கமான அரட்டைகளில் ஈடுபடுவது மற்றும் இயற்கையில் நேரத்தை செலவிடுவது மேம்பட்ட மனநல மதிப்பெண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உளவியல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், மனநல நெருக்கடிகளைத் தடுப்பதிலும் அணுகக்கூடிய, அன்றாட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை ஆராய்ச்சி வலியுறுத்துகிறது, இந்த நடத்தைகளை ஊக்குவிக்கும் பொது சுகாதார பிரச்சாரங்களுக்கு வாதிடுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியம் முக்கியமானது, ஆனால் பெரும்பாலும் நாங்கள் அதை பின் பர்னரில் வைக்க முனைகிறோம். பலர் ஏற்கனவே அதிகமாகவோ அல்லது எரிக்கப்பட்டதாகவோ உணரும்போது மட்டுமே அவர்களின் மன நல்வாழ்வுக்கு கவனம் செலுத்தத் தொடங்குகிறார்கள்.ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதல்ல. உங்கள் அன்றாட வழக்கத்தில் எளிய செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை இணைப்பது உங்கள் மன நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில்,…
காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவை சேர்ந்த இளம் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் இரவு, இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த தாக்குதலில் ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கல்லிதாண்டா பகுதியை சேர்ந்த முரளிநாயக்(25) எனும் இளம் ராணுவ வீரர், வீர மரணம் அடைந்துள்ளார். இது தொடர்பாக நேற்று அதிகாலை அவரது குடும்பத்தாருக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்து அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர். இவரது தந்தை எம். ஸ்ரீராம், தாயார் ஜோதிபாய் ஆகியோர் மும்பையில் ஒரு கட்டுமான தொழில் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். முரளி நாயக் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு…
Last Updated : 10 May, 2025 09:51 AM Published : 10 May 2025 09:51 AM Last Updated : 10 May 2025 09:51 AM பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் தாஹிர் இக்பால். தற்போது பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தொடங்கிய போது, கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசினார். தாஹிர் இக்பால் பேசும் போது, ‘‘இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை ராணுவம் காப்பாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஓ அல்லா. உமக்கு முன்னால் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்று’’ என்று உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக…
திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள இன்னும் பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சரும் உத்தரவாதம் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஆண்கள் பெயரிலும், அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விதிகளுக்குப் புறம்பாக மகளிர் உரிமைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 1 கோடியே 14 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. அதேசமயம் இதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 57 லட்சம் பேரது மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. அப்படி முறையீடு செய்தவர்களுக்கு இதுவரை உரிமைத் தொகை கிடைத்தபாடில்லை. குடும்பத்தின் ஆண்டு வருமானம்…
ஓட்ஸ் இயற்கையாகவே பசையம் இல்லாதது, ஆனால் அவை பெரும்பாலும் கோதுமை, பார்லி அல்லது கம்பு கையாளும் தொழிற்சாலைகளில் செயலாக்கப்படுகின்றன. இது குறுக்கு மாசுபடுவதற்கு வழிவகுக்கிறது மற்றும் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நோயெதிர்ப்பு மறுமொழிகளைத் தூண்டும். ஒரு சிறிய அளவு பசையம் கூட செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குடல் புறணியை சேதப்படுத்தும். இது ஊட்டச்சத்து மாலாப்சார்ப்ஷன், வயிற்று வலி மற்றும் நீண்டகால சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சான்றளிக்கப்பட்ட பசையம் இல்லாதது மற்றும் தனி வசதிகளில் பதப்படுத்தப்பட்டால் மட்டுமே ஓட்ஸ் இருக்க முடியும். இருப்பினும், அப்போதும் கூட, சிலர் அவெனின் எனப்படும் ஓட்ஸில் உள்ள ஒரு புரதத்திற்கு வினைபுரியக்கூடும், இது அரிதான சந்தர்ப்பங்களில் பசையம் விளைவுகளை பிரதிபலிக்கிறது.
புதுடெல்லி: எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றையும் ராணுவம் பகிர்ந்துள்ளது. அதில், ‘தேசத்தின் மேற்கு எல்லை பகுதியில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றாக இன்று (மே 10) காலை 5 மணி அளவில் அமிர்தசரஸில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டன. அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து அழித்தனர். இந்தியாவின் இறையாண்மையை மீறும், நாட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பாகிஸ்தானின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களை ராணுவம் முறியடிக்கும்’ என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மூடல்: இதனிடையே, எல்லையில் பதற்றம் உச்சத்தை…
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம், 2 புதிய முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 15,408 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய பல்நோக்கு மையம் சென்னை ராயப்பேட்டை பைகிராஃப்ட் சாலையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பல்நோக்கு மையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 224 இருக்கைகள் கொண்ட திருமணக்கூடம், உணவருந்தும் இடம், தங்கும் அறைகள், வாகன நிறுத்துமிடம், லிப்ட் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.…
கோப்பு – அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதிபதி டேவிட் சூட்டர், டிசம்பர் 1993 இல் காட்டப்பட்டுள்ளது. (AP புகைப்படம்/மார்சி நைட்ஸ்வாண்டர், கோப்பு) நீதிபதி டேவிட் எச் சூட்டர் தனது அன்பான நியூ ஹாம்ப்ஷயரில் 85 வயதில் இறந்தார். 1990 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் என்பவரால் நியமிக்கப்பட்ட அவர், அவர் ஒரு பழமைவாத தலைமைத்துவமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பெரும்பாலும் நீதிமன்றத்தின் தாராளவாத முகாமுடன் இருந்தது.வாழ்நாள் முழுவதும் இளங்கலை, ச ter ட்டர் அமைதியான தனிமையை விரும்பினார், கவனத்தை ஈர்த்தார், 2009 இல் ஓய்வு பெற்ற பிறகு தனது சொந்த நியூ ஹாம்ப்ஷயருக்குத் திரும்பினார்.பல ஆண்டுகளாக, டேவிட் எச். ச ter ட்டர் – சுப்ரீம் நீதிமன்ற நீதி, புதிய இங்கிலாந்து அறிவுசார் மற்றும் கடுமையான தனியார் மனிதர் -வாஷிங்டனில் ஒரு அசாதாரண தலைப்பைக் கொண்டிருந்தார்: தலைநகரின் மிகவும் தகுதியான இளங்கலை ஒன்றாகும். முரட்டுத்தனமான புத்திசாலி, அமைதியான…
