Author: admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று (மே 10) ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக போராடக் குழுவினர் அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்பட உள்ளதால், இந்த கிராமத்தை மையமாக வைத்து இத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 1019 நாளாக நடைபெற்றது. திடீரென்று போராட்டம் ஒத்திவைப்பு: இந்நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக திடீரென்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக போராட்டக் குழுவின் தலைவர் ஜி.ரவிச்சந்திரன், செயலர் ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்ம் “பரந்தூர் புதிய விமான…

Read More

ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் பயனளிக்கும் கொழுப்புகள். இவை இன்சுலின் அளவுகளை மேம்படுத்துகின்றன, கொழுப்பைக் குறைக்கின்றன, இரத்த குளுக்கோஸ் அளவிற்கு பயனளிக்கின்றன மற்றும் மிக முக்கியமாக இதயத்திற்கு நல்லது, இதயம் தொடர்பான எந்த நிலைமைகளையும் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமான அல்லது நல்ல கொழுப்புகள் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகும். இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் இயற்கையாகவே உடலால் தயாரிக்கப்படுவதில்லை, ஆனால் அவை தேவைப்படுகின்றன, இதனால், மனிதர்கள் இந்த கொழுப்புகளை உடலுக்கு வழங்குவதன் மூலம் உடலை வழங்குகிறார்கள். ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட 8 உணவுகள் கீழே உள்ளன, அவை உங்கள் உடலுக்கு உதவ உங்கள் உணவில் சேர்க்கலாம்.

Read More

புதுடெல்லி: போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமாண்டர் ரகு நாயர் தெரிவித்துள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு கமாண்டர் ரகு ஆர் நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், “வெளியுறவுச் செயலாளர் கூறியதுபோல இந்தியா – பாகிஸ்தான் இடையே கடல், வான் மற்றும் நிலம் என அனைத்து தளங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைகள் இந்தப் புரிதலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் புரிதலை நாங்கள் கடைப்பிடிப்போம். அதே நேரத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் நாங்கள் முழுமையாகத் தயாராகவும் விழிப்புடனும் உறுதியாகவும் இருக்கிறோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான சாகசமும் பலத்துடன்…

Read More

ஸ்ரீநகர்: எந்த ஒரு அவசர நிலையையும் சமாளிக்க முழு அளவில் தயாராக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வந்தது. இதனால், ஜம்மு காஷ்மீரில் எல்லையோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாக ஜம்மு – காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவொரு சூழ்நிலையையும் கையாள ஜம்மு காஷ்மீர் அரசு முழு அளவில் தயாராக இருக்கிறது. சுகாதாரத் துறை அதன் அவசரகால நெறிமுறைகளை முழுமையாக செயல்படுத்தியுள்ளது. எந்தவொரு மருத்துவ அவசரநிலைகளையும் கையாள சுகாதாரத்துறை முழுமையாகத் தயாராக உள்ளது. பொதுமக்களிடம் அச்சம் தேவையில்லை, அமைதியாக இருக்குமாறும், பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட…

Read More

சென்னை: இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர் புரிந்துவரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவுத்திடல் அருகே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் நோக்கி, பேரணி துவங்கியது. இந்தப் பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள், சர்வ மத பிரதிநிதிகள், அமைச்சர்கள், திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழக காவல் துறையின் ஆயுதப்படை, சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்…

Read More

கருத்துகள் (()வரிசைப்படுத்துதல்: புதியதுமேம்பட்டதுபழமையானதுவிவாதிக்கப்பட்டதுடவுன் வாக்களித்தார்மறைவுகள்எண்ணிக்கை: 3000Xஆபாசமான, அவதூறான அல்லது அழற்சியான கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாதது, பெயர் அழைப்பது அல்லது எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. கருத்துகளை நீக்க எங்களுக்கு உதவுங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவர்களை தாக்குதல் செய்வதன் மூலம். உரையாடலை சிவில் வைத்திருக்க ஒன்றாக வேலை செய்வோம்.மதிப்பாய்வு செய்த முதல் நபராக இருங்கள்.சரிபார்ப்பு மின்னஞ்சலை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளோம். சரிபார்க்க, செய்தியில் உள்ள இணைப்பைப் பின்தொடரவும்

Read More

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், மே 08 முதல் 09 வரை ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றி தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போரில் (1941-45) சோவியத் யூனியன் பெற்ற வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2025 மே 09 அன்று மாஸ்கோவில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சஞ்சய் சேத், வெற்றி தின அணிவகுப்பை, பிற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இணைந்து பார்வையிட்டார். வெற்றி தின அணிவகுப்பில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பங்கேற்றது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பின்…

Read More

பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பவர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் என இலவச ஐஏஎஸ் பயிற்சியாளரும், கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை தலைவருமான பி.கனகராஜ் கூறுகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: “பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பைப் பொறுத்தவரையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முக்கிய பாடமாக உள்ளது. யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வில் அரசியல் அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்கள் உள்ளது. முதன்மைத் தேர்வில் பொது அறிவு இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்கள் வருகிறது. பொது கட்டுரை தாளில் 250 மதிப்பெண் வருகிறது. சிவில் சர்வீஸ் போட்டி தேர்வு நேர்காணலில் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படும். சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் விருப்ப பாடமாக அரசியல் அறிவியலை…

Read More

வாஷிங்டன்: “இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் அளித்துள்ளன. இரு நாடுகளும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சி: இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா இன்று வலியுறுத்தியது. முன்னதாக, “போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார். கூடவே, பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக்…

Read More

சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனை கணக்கில் கொண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. தற்போது சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். 90-களில் நடக்கும் கதை என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக்குழு. ‘ஃப்ரீடம்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Read More