Author: admin

இந்தியா மீது பாகிஸ்தான் கடந்த 8-ம் தேதி நடத்திய தாக்குதலை முறியடிக்க, இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு பிரிவு எல்-70 பீரங்கி, இசட்யு-23 எம்.எம் துப்பாக்கி, சில்கா பீரங்கி, யுஏஎஸ் , எஸ்-400 சுதர்ஸன சக்ரா போன்ற போர் தளவாடங்களை பயன்படுத்தியது. அவற்றின் விவரம்: எல் – 70 பீரங்கி: ட்ரோன்கள், ஏவுகணைகள், தாழ்வாக பறந்து வரும் விமானங்களை தாக்குவதற்கு ராணுவம் எல்-70 என்ற சிறிய ரக பீரங்கிகளை பயன்படுத்துகிறது. இதில் 40 எம்எம் ரக குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எல்-70 பீரங்கி போபர்ஸ் நிறுவன தயாரிப்பு. வானில் குறைந்த உயரத்தில் பறந்து வரும் இலக்குகளை தாக்குவதற்கு இது மிகவும் சிறந்த ஆயுதம். துல்லியமான தாக்குதல் நடத்துவதற்காக, இந்த எல்-70 பீரங்கியை நவீன எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கட்டுப்பாட்டு கருவிகளுடன் இதை இந்தியா மேம்படுத்தியுள்ளது. இசட்யு-23 எம்எம் பீரங்கி: இசட்யு-23 எம்எம் என்பது இரட்டை பேரல்கள் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கி. இது சோவியத்…

Read More

ஜாக்டோ – ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், சில ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து, அனைத்து இயக்குநர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ – ஜியோ போராட்டத்தின்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க ஆணை…

Read More

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மேற்கோள்கள்ஏவுகணை மனிதனின் வார்த்தைகள், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், ஞானத்தின் புதையல் மார்பு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒரு புத்திசாலித்தனமான விஞ்ஞானி அல்ல – அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார், அவர் இளம் மனதின் சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்தவர். அவரது வார்த்தைகள் குழந்தைகளை கனவு காணவும், கடினமாக உழைக்கவும், தாழ்மையுடன் இருக்கவும் ஊக்குவிக்கின்றன. ஏபிஜே அப்துல் கலாமின் அவரது மிக சக்திவாய்ந்த மேற்கோள்களில் 10 இங்கே குழந்தைகளுக்கு சிறந்த உத்வேகம் அளிக்கிறது:

Read More

பாகிஸ்தான் படைகள், இந்திய எல்லையில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது. தற்போது இந்திய முப்படைகள் மட்டுமல்லாமல் துணை ராணுவமும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான டெர்ரிடோரியல் ஆர்மி 32 பட்டாலியன்களைக் கொண்டுள்ளது. இந்த டெர்ரிடோரியல் ஆர்மி துணை ராணுவத்தின் 14 பட்டாலியன்கள் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த 14 பட்டாலியன்களில் உள்ள வீரர்கள் பல்வேறு மாநில எல்லைப் பகுதிகளில் தாக்குதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் 14.75 லட்சம் ராணுவ வீரர்களும், 16 லட்சத்துக்கும் அதிகமான துணை ராணுவப் படையினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த தாக்குதல் நடந்து 11 நாட்களுக்கு பிறகு உரி சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இமுகம்மது இயக்கத்தின் தற்கொலைப் படை இந்த தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக 13 நாட்கள் கழித்து இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்களில்…

Read More

பாதுகாப்பு அமைச்சக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதை அல்லது நிகழ்நேர செய்தியாக்குவதை அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடக பயனர்கள் தவிர்க்க வேண்டும். முக்கியமான தகவல்களை முன்கூட்டியே நேரடியாக வெளியிடுவது ராணுவ படைகளின் செயல்பாட்டு திறனை சமரசம் செய்து பல உயிர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும். கார்கில் போர், 26/11 மும்பை தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதி, 2021, பிரிவு 6(1)(பி)-ன் படி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது தாக்குல் குறித்த விவரங்களை, விளங்கங்களை அளிப்பர். அதனை மட்டுமே ஊடகங்கள் ஒளிபரப்ப அனுமதிக்கப்படும். நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு ஊடக…

Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ளதீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தி, போரின் நாயகனாக இந்தியா திகழ்ந்தது. அடுத்தடுத்து இந்தியா நடத்திய ஆக்ரோஷத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், உலக நாடுகள் மூலம் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. தவறை உணர்ந்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முயற்சிப்பதால் அதை ஏற்கும் மனநிலைக்கு இந்தியா வந்தது. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விட்டார். அமெரிக்க துணை அதிபர் மற்றும் அதிகாரிகளின் தொடர் முயற்சி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள்…

Read More

இந்திய விமானப்படை தளங்கள், எஸ்-400 ஏவுகணை யூனிட் இருக்கும் தளம் ஆகியவற்றை அழித்தாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் என வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் பொய் தகவல்களை கூறி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிர்சா மற்றும் சூரத் விமானப்படை தளங்கள், ஆதம்பூரில் உள்ள எஸ்-400 ஏவுகணை தளம் ஆகியவற்றை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய். இந்தியாவின் முக்கியமான கட்டிடங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதும் பொய். மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அமிர்தசரஸ், ஆப்கானிஸ்தான் மீதும் இந்தியா குண்டுகள் வீசியதாக பாகிஸ்தான் பொய் தகவலை கூறிவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கன் மீது தாக்குதல் நடத்தியது யார் என…

Read More

இஸ்ரோ மே 18 அன்று EOS-09 (RISAT-1B) செயற்கைக்கோளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது புதுடெல்லி: வானத்திலிருந்து இந்தியாவின் கண்காணிப்பு சக்தி ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற உள்ளது, ஏனெனில் இஸ்ரோ ஈஓஎஸ் -09 (ரிஸாட் -1 பி) ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை மே 18 அன்று சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் பிஎஸ்எல்வி-சி 61 பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சதுஷ் டாவன் டோவ் மையத்திலிருந்து காலை 6.59 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்தியாவின் பூமி கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்தும், ஏனெனில் ஈஓஎஸ் -09 ஒரு அதிநவீன சி-பேண்ட் செயற்கை துளை ரேடாரைக் கொண்டுள்ளது, இது வானிலை நிலைகளைப் பொருட்படுத்தாமல், பூமியின் மேற்பரப்பின் உயர்-தெளிவுத்திறன் படங்களை கைப்பற்ற உதவுகிறது. அதன் வளைவு மற்றும் சர்ச்ச்-கவுண்டர்ஸுடன் செயற்கைக்கோள் முக்கிய பங்கு வகிக்கும், இது இந்தியாவின் செரோஸ்டிஸ்டர்களுடன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும், கடற்கரை கோடுகள்.மேகங்கள் அல்லது இருளுடன் போராடும் ஆப்டிகல் செயற்கைக்கோள்களைப் போலன்றி,…

Read More

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரித் மற்றும் சக்லாலா விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் நேற்று காலை குண்டு வீசன. இது குறித்து விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை குண்டு வீசின. பஸ்ரூர் என்ற இடத்தில் உள்ள ரேடார் மையம், சியால்கோட்டில்உள்ள விமான தளத்திலும் குண்டுகள் வீசப்பட்டன. இந்த விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகளை, இந்தியா மிகவும் கவனமாக தேர்வு செய்து தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் விமான தாக்குதலை முறியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ராவல்பிண்டியில் சக்லாலா என்ற இடத்தில் உள்ள ‘தி நுர் கான்’…

Read More