Author: admin

எலன் டிஜெனெரஸ் மற்றும் அவரது மனைவி போர்டியா டி ரோஸி, இப்போது வாழ்க கோட்ஸ்வொல்ட்ஸ்தென்-மத்திய இங்கிலாந்தில் ஒரு பகுதி. முன்னாள் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரான டிஜெனெரஸ் அங்கு இடமாற்றம் செய்யத் தேர்வு செய்தார். டொனால்ட் டிரம்பின் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்காவிலிருந்து இந்த நடவடிக்கை வந்ததாக டிஜெனெரஸுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்ததாக டெய்லிமெயில் தெரிவித்துள்ளது. மாண்டெசிட்டோவில் உள்ள தம்பதியரின் வீடு விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடு லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே அமைந்துள்ளது. அவர்கள் 2019 ஆம் ஆண்டில் சொத்தை வாங்கி அதை தங்கள் பிரதான வீடாக மாற்றினர். தெற்கு கலிபோர்னியாவில் மற்ற வீடுகளை விற்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட்டியலை கையாளும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ரிஸ்கின் பார்ட்னர்ஸ், கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.அவளுடைய புதியது நெட்ஃபிக்ஸ் நகைச்சுவை சிறப்பு.டிஜெனெரஸ் அவளைப் பற்றிய பொதுமக்களின் மாற்றத்தை ஒப்புக் கொண்டார், “‘கனிவானவர்’ பெண் கருணை காட்டவில்லை, அதுதான் தலைப்பு.”தனது பேச்சு…

Read More

புதுடெல்லி: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டது இயல்பான ரியாக்‌ஷன் தான் என என்ஐஏ கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சாகச அனுபவத்துக்கான ஜிப் லைனில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதன்போது தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அந்த சுற்றுலா பயணி. அப்போதுதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி தோட்டாக்களின் சத்தம் கேட்டதும் அந்த ஜிப் லைனை இயக்கிய ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கியதாக சுற்றுலா பயணி தெரிவித்திருந்தார். இதையடுத்து முஸ்ஸமில் எனும் பெயர் கொண்ட அந்த ஜிப் லைன் ஆப்பரேட்டரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது இயல்பான ரியாக்‌ஷன் என என்ஐஏ…

Read More

சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒன்பிளஸ் 13ஆர் போனும் வெளிவந்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. குவால்கம் ப்ராஸசரில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் இயங்குகிறது. இந்தியாவில் குளிர்கால அறிமுகமாக வெளிவந்துள்ளது ப்ரீமியம் மாடல் சீரிஸ் போன் இது. 4 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அம்சங்கள் 6.82 இன்ச் எல்டிபிஓ QHD+ டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி…

Read More

சென்னை: மின்னணுவியல், ஆட்டோமேஷன், 3டி பிரிண்டிங் போன்ற முன்னணி துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச திறன் பயற்சி வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு வகையான திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சிபெற்ற 28 இளைஞர்கள் அசோக் லேலாண்ட், ஜி-கேர் இந்தியா, டிசிஎஸ், தெர்மோபிஃசர் போன்ற தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இதில் சிஸ்டம் இன்ஜினியரிங், மின்னணுவியல் வடிவமைப்பு, உற்பத்தி துறை, இன்டஸ்டிரியல் ஆட்டோமேஷன், இயந்திரவியல், 3டி பிரிண்டிங் போன்ற முக்கிய துறைகள் சார்ந்த திறன்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் தொழில்நுப்ட புத்தாக்க நிறுவனங்களை உருவாக்க இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்கள்…

Read More

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டம் இழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். கில் உடன் சேர்ந்து வலுவான கொல்கத்தா பவுலிங் யூனிட்டை பந்தாடினார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் பேட் செய்ய வந்தார். மறுமுனையில் ஆடிய கில்…

Read More

வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று கெடுபிடி காட்டியுள்ளார். பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைய அமெரிக்க பொருட்களுக்கான வரி இன்று (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்தச் சூழலில் தான் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை…

Read More

திருமலை: கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 5-ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து விஐபி பக்தர்கள் பலர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் தவிர ஆந்திரா, தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் மூலமும் விஐபி பிரேக் தரிசனத்தில் பலர் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை வருவதால் விஐபி பிரேக் தரிசனத்திற்கு வருவோரை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்ளூர் விஐபிகளின் சிபாரிசு கடிதங்கள் பெறுவதை தேவஸ்தான அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் 30-ம் தேதி வரை…

Read More

சென்னை: சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக வரும் நடிகை ரஷ்மி வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீிடியோவில், “இந்தப் படத்தில் நடித்த என்னை அடையாளம் கண்டு, பாராட்டுத் தெரிவிக்கும் ரசிகர்களின் வாழ்த்து அலை போல் வருகிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடிகை ரஷ்மி என்பவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வரும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் அண்மையில் வைரலானது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டா வீடியோ ஒன்றை ரஷ்மி வெளியிட்டுள்ளார். அதில் “நான் இந்த ரீல்ஸைப் பதிவிடுவதற்கு காரணம், கடந்த இரண்டு நாட்களாக பலரும் என்னை நினைவுகூர்கின்றனர். அதேநேரம், இயக்குநர் ஜான் இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகைகள் ஜெனிலியா பிபாஷா பாஷு உள்ளிட்டோர் நடித்த சச்சின் படத்தின் மறுவெளியீட்டைக் கொண்டாடி வருகிறோம். உங்களில்…

Read More

சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருக்கிறார். வாய் ஜாலங்களில் வித்தகர்களான திமுகவினர் அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளின் வரிசையில் இதுவும் ஒன்று. ‘காலனி’ பெயர் நீக்கம் என்பது புரட்சி என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவினரை பார்த்து நான் எழுப்பும் கேள்வி இதுதான். கட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை நீக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? சட்டப்பேரவையில் இந்த…

Read More

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக இன்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்பனை. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.22) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.275 என ஏற்றம் கண்டுள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கு விற்பனை ஆகிறது. காரணம் என்ன? – தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர…

Read More