Author: admin

ஹைதராபாத்: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு நேற்று ஹைத​ரா​பாத்​தில் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, கடப்பா மாவட்​டம், ஒண்​டிமிட்டா ஸ்ரீ கோதண்​ட​ராமர் கோயி​லில் நித்ய அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் ரூ.4 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. கடந்த ஜெகன் ஆட்​சி​யில் திரு​மலை​யில் அவரது கட்​சிக்​காரர்​கள் 12 பேருக்கு ஓட்​டல்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இந்த ஒதுக்​கீடு ரத்து செய்​யப்​பட்​டு, இ-டெண்​டர் மூலம் ஓட்​டல்​களை ஒதுக்கி உள்​ளோம். ஸ்ரீவாணி அறக்​கட்​டளை தரிசன நேரத்தை மாற்றி உள்​ளோம். காலை​யில் டிக்​கெட் பெற்ற பக்​தர்​களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும். ஏழு​மலை​யானை பக்​தர்​கள் விரை​வாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படும். இதன் மூலம் ஏழு​மலை​யானை 1 முதல் 2 மணி நேரத்​துக்​குள் பக்​தர்​கள் தரிசனம் செய்​ய​லாம். இதற்​கான ஏற்​பாடு நடை​பெற்று வரு​கிறது. ஏழு​மலை​யான் தரிசனம், பிர​சாத விற்​பனை தொடர்​பாக சைபர் குற்​றங்​கள் நடை​பெற்று வரு​கிறது. இதனை…

Read More

சென்னை: 64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் தமிழரசு பந்தய தூரத்தை 10.22 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரரான ராகுல் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலெட்சுமி தங்கப் பதக்கமும், அபிநயா ராஜராஜன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

Read More

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது மம்மூட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் அவர் குணமடைந்துவிட்டதாகவும் படங்களில் மீண்டும் நடிக்கத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மோகன்லால், மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்துள்ளார். “டைகரை மீண்டும் வரவேற்கிறோம்” என்று மஞ்சு வாரியரும், “இந்தச் செய்தியைக் கேட்க நான் பிரார்த்தனை செய்தேன்” என்று…

Read More

சென்னை: பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஊழியர்​கள் தமிழகம் முழு​வதும் நடத்​திவரும் போ​ராட்​டம் நேற்றும் நடை​பெற்​றது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்​கக் கோரி தமிழகம் முழு​வதும் கடந்த 18-ம் தேதி​ முதல் போக்​கு​வரத்​துத் தொழிலா​ளர்​கள் போ​ராடி வரு​கின்​றனர். காத்​திருப்​புப் போ​ராட்​டம், சாலை மறியல், ஆர்ப்​பாட்​டம் என பல்​வேறு வகை​களில் போ​ராடு​பவர்​களை காவல் துறை கைதுசெய்து வரு​கிறது. அந்த வகை​யில் நேற்​றும் போ​ராட்​டம் நீடித்​தது. சென்​னை​யில் தாம்பரம், வடபழனி உள்​ளிட்ட 7 பணி மனை​களில் தொழிலா​ளர்​களின் காத்​திருப்​புப் போ​ராட்​டம் நடை​பெற்​றது. இதில் சிஐடியு போக்​கு​வரத்து சங்கத்தை சார்ந்த ஆறு​முகந​யி​னார், தயானந்​தம், துரை, பாலாஜி, சசிகு​மார் உள்​ளிட்ட பல்​வேறு நிர்​வாகி​கள் கலந்து கொண்​டனர். அவர்​கள் கூறும்​போது, “போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்கு வழங்​கப்பட வேண்​டிய பணப்​பலனை தீபாவளிக்கு முன்​பாக அளிக்க வலி​யுறுத்​துகிறோம். அல்​லது எப்​போது வழங்​கப்​படும் என்​ப​தற்​கான உத்​தர​வாதத்​தை​யா​வது அளிக்க வேண்​டும். எங்​களின் கோரிக்​கையை நிறைவேறா​விட்​டால் தீபாவளி வரை தொடர் போ​ராட்​டம் நடத்​தப்​படும்” என்​றனர்​.

Read More

புதுடெல்லி: இந்​திய மியூச்​சுவல் பண்ட் சங்​கம் (ஏஎம்​எப்​ஐ), இந்​தியா போஸ்ட் ஆகியவை ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளன. இதன்​மூலம் நாட்​டில் ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளித்து அதில் பொது​மக்​களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்​கப்​பட​வுள்​ளது. இதன்​படி பயிற்​சி​யைப் பெறும் தபால்​காரர்​கள், மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் என்று அழைக்​கப்​படு​வர். இதன்​மூலம் அவர்​கள் நாட்​டிலுள்ள சிறிய நகரங்​கள், கிராமப்​புறப் பகு​தி​களில் மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி, அந்​தத் திட்​டத்​தில் மக்​களைச் சேர்க்​கும் பணி​களைச் செய்​வர். இதுகுறித்து ஏஎம்​எப்ஐ அமைப்​பின் தலை​மைச் செயல் அதி​காரி வெங்​கட் நாகேஸ்வர் சலசானி கூறும்​போது, “ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளிக்​கப்​படும். இதைத் தொடர்ந்து 4 மாநிலங்​களைத் தேர்வு செய்து அதி​லுள்ள ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 10 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் நியமனம் செய்​யப்​படு​வர். அடுத்த ஆண்​டில் அந்த மாநிலங்​களின் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் 10 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் இருப்​பர்’’ என்றார்.…

Read More

ஆசியா என்பது வேலைநிறுத்த முரண்பாடுகளின் கண்டம். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற உலகளாவிய பொருளாதார நிறுவனங்களின் தாயகமாக, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களைக் கொண்டிருக்கும், மறுபுறம் வறுமை, மோதல் மற்றும் கட்டமைப்பு சவால்களுடன் நாடுகளும் உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வைப் புரிந்து கொள்ள, பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) திரும்பப் பெறுகிறார்கள், இது வாங்கும் சக்தி சமநிலை (பிபிபி) மூலம் சரிசெய்யப்படுகிறது, இது நாடுகளில் வாழ்வின் செலவு வேறுபாடுகளுக்கு காரணமாகும். ஆயினும்கூட, புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இந்த நாடுகளில் பல பொருளாதார கஷ்டங்கள் இருந்தபோதிலும் சாகச பயணிகளை தொடர்ந்து ஈர்க்கும் நிலப்பரப்புகள், பணக்கார கலாச்சாரங்கள் மற்றும் நெகிழக்கூடிய சமூகங்கள் ஆகியவற்றின் இடங்களுக்கும் சொந்தமானவை.2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அவுட்லுக் தரவுத்தள கணிப்புகளின் படி, பல ஆசிய நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (பிபிபி) ஏணியின் அடிப்பகுதியில்…

Read More

புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார். அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க முதல்​வர் ரேகா குப்​தாவை நெருங்​கிய அவர் சிறிது நேரம் பேசி​னார். பின்​னர் முதல்​வரை திட்​டிய அவர் திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர் ஒரு​வரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​திருந்​த​தாக​வும், அதற்​காக…

Read More

செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்த உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் நேற்று 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். பிரக்​ஞானந்​தா, அமெரிக்​கா​வின் பேபி​யானோ கருனா மோதிய ஆட்​டம் 37-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. அமெரிக்​கா​வின் லேவோன் அரோனியன் – பிரேசிலின் சாமுவேல் சேவியன் மோதிய ஆட்​ட​மும், பிரான்​ஸின் மாக்​சிம் வச்​சி​யர் லாக்​ரேவ் – அமெரிக்​கா​வின் வெஸ்லி சோ ஆகியோர் மோதிய ஆட்​ட​மும், போலந்​தின் டுடா ஜான் கிரிஸ்​டோஃப் – பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்​ட​மும் டிரா​வில் முடிடைவடைந்​தது. 2 சுற்​றுகளின் முடி​வில் லேவோன் அரோனியன், அலிரேசா ஃபிரோஸ்​ஜா, பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 1.5 புள்​ளி​களு​டன் முதல்…

Read More

நடிகர் அசோக் செல்வன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர், தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்எல், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Read More

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலை கருத்​தி​யல் யுத்​த​மாக முன்​னெடுக்க காங்​கிரஸ், திமுக கூட்​டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்​வாக குடியரசுத் துணைத் தலை​வர் வேட்​பாள​ராக மகா​ராஷ்டிரா ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார். இதன்​மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்​கிய இடத்​தில் வைத்​திருப்​ப​தாக​வும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் முக்​கி​யத்​து​வம் அளித்​திருப்​ப​தாக​வும் தேர்​தலின்​போது வலு​வான பிரச்​சா​ரத்தை முன்​னெடுக்க பாஜக திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. இதனால் இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் யார் என்​ப​தற்​கான எதிர்​பார்ப்பு கிளம்​பியது. திமுக எம்​.பி. திருச்சி சிவா வேட்​பாளர் போட்​டி​யில் இருப்​ப​தாக பேச்​சுக்​களும் எழுந்​தன. இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்​டியை இண்​டியா கூட்​டணி அறி​வித்​தது. இந்த அறி​விப்​புக்கு முன் பல்​வேறு நிகழ்​வு​கள் அரங்​கேறி​யுள்​ள​தாக இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர். அதன் விவரம்: தொடக்​கத்​தில் இருந்தே இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​களுக்​குள் சுமூக​மான நிலை இல்​லை. திமுக கூட்​டணி சார்​பில் சார்​பில்…

Read More