காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே அர்ச்சகர்கள் மூலம் கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, காலை 4:20 மணியிலிருந்து 6 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு வழிபாடுகளுக்கு அடுத்து வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நகரில் உள்ள முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா வந்தார். இதில்,…
Author: admin
(பட வரவு: Pinterest) சந்தையில் கே-பியூட்டி தயாரிப்புகள் அதிகரித்து வருவதால், இன்றைய உலகில் ஒரு சில பெண்கள் தங்கள் தோலுக்கு இயற்கை சமையலறை ஸ்டேபிள்ஸின் நன்மைகளை நம்புகிறார்கள். இயற்கை பொருட்கள் எப்போதுமே தோல் பராமரிப்புக்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகும்.மக்கள் தங்கள் தோலுக்கு பெசன், பால், மஞ்சள் மற்றும் பலரைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், தோலில் மசூர் டாலின் நன்மைகள் பற்றி பலருக்கு முற்றிலும் தெரியாது. இந்த குறிப்பிட்ட எண்ணெயை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் இணைப்பதன் மூலம், நீங்கள் ஒரு கதிரியக்க மற்றும் ஆரோக்கியமான நிறத்தைப் பெறலாம். தோலில் மசூர் டாலின் சில நன்மைகளைப் பார்ப்போம்.தோல் சுத்திகரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களுடன் செறிவூட்டப்பட்ட இது ஒரு பயனுள்ள சுத்திகரிப்பு முகவரைப் போல செயல்படுகிறது, இது அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளிலிருந்து விடுபடுகிறது. மசூர் தால் ஃபேஸ் பேக் அனைத்து அழுக்குகளையும் ஊறவைத்து, மென்மையான எக்ஸ்போலியேட்டரைப்…
தன்னைப் பற்றிய புரிதல், பணி வாழ்க்கையைத் தேர்வு (Career Selection) செய்வதில் மிக முக்கியமானது. உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்து படிக்கும் போதும், அதன் பிறகு அது தொடர்புடைய பணிக்கு செல்லும் போதும் உங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி சாதனைகள் படைக்க முடியும். உளவியலாளர் பிராங்க் பார்சன் கருத்துப்படி, பணி வாழ்க்கையைத் தேர்வு செய்வதன் மூன்று முக்கிய காரணிகளுள் ஒன்று தன்னைப் பற்றி அறிதல் ஆகும். தன்னைப் பற்றிய புரிதல் மற்றும் படித்து முடித்த பின்பு செய்யப்போகும் வேலையை பற்றிய புரிதல், இவை இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பே வாழ்க்கைப் பணியை (Career Choice) தேர்வு செய்தல் என்கிறார் பிராங்க் பார்சன். ஆய்ந்தறிந்து இதனை அறிவியல் பூர்வமான உளவியல் தேர்வுகள் (Psychometric Test) மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்துதலே கரியர் கவுன்சிலிங். இதுகுறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் எம்.கருணாகரன் கூறியது:…
சென்னை மாநகரத்துக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் அருண் நேற்று கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சந்தேக நபர்களைக் கண்டறிய மக்களோடு மக்களாக போலீஸார் மப்டி உடையிலும், சீருடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை முழுவதும் வாகன சோதனையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரத்துக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எந்தவொரு அச்சுறுத்தலும் வரவில்லை. நேற்று சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக வரும் வெடிகுண்டு மிரட்டல் உண்மையா…
வைட்டமின் டி, எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது, பெரும்பாலும் உலகளவில் குறைபாடுடையது. சூரிய ஒளி வெளிப்பாடு, எண்ணெய் மீன் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் போன்ற சில உணவுகள் மற்றும் கூடுதல் மருந்துகள் போதுமான அளவை பராமரிக்க உதவும். தினசரி தேவைகள் வயதுக்கு ஏற்ப மாறுபடுகின்றன, பெரியவர்களுக்கு 10 எம்.சி.ஜி தேவைப்படுகிறது, 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்க 20 எம்.சி.ஜி தேவைப்படுகிறது. உங்கள் அம்மா சொல்வது சரிதான் (எப்போதும் போல)! சூரிய ஒளியின் காலை அளவைப் பெறுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வைட்டமின் dnaturally பெறுவதற்கான ஒரு வழி இது. ‘சன்ஷைன் வைட்டமின்’ என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி, எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி குறைபாடு என்பது சுமார் 1 பில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு பெரிய உலகளாவிய பொது…
சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு போர் நிறுத்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இன்று காலை முதல் எந்தவித தாக்குதலும் எல்லையோர பகுதிகளில் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பதை பார்ப்போம். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஒரு வார காலம் ‘ஐபிஎல் 2025’ சீசன் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூழல் காரணமாக மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தரப்பில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதை இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் சீசன் தற்காலிகமாக ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட்…
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தனது ஒரு மாத சம்பளத்தைத் தேசிய பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு எதிராக, நமது உண்மையான ஹீரோக்கள், எல்லைகளில் துணிச்சலுடன் செயல்படுவார்கள் என்பதை அறியாமலே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது முதல் சிம்பொனிக்கு ‘வேலியன்ட் (Valiant தைரியத்தையும் துணிச்சலையும் குறிக்கும் சொல்) என்று பெயரிட்டிருக்கிறேன். பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்க வும்…
சென்னை: பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் முதல்வராக பொறுப்பேற்றார். அப்பொழுது கரோனா தொற்று தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்தது. உயிர்ப்பலிகள் வாங்கியது. கரோனா தொற்று ஏற்படும்போது அச்சத்தில் ஒருவருடன் ஒருவர் சந்திப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அச்சம் சிறிதுமின்றி, கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களைப் பாதுகாத்த மகத்தான பணிகளை பத்திரிகைகள் பாராட்டின. தொழில் ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில்…
எந்தவொரு மனிதனும், எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும் அல்லது விதிவிலக்கானதாக இருந்தாலும், ஒரு ஆன்மா உள்ளது. இந்த ஆன்மா அவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆனால் அவர்கள் உட்கார்ந்து குழுவினர்களுக்கும். நீங்கள் சந்திக்கும், உட்கார்ந்து, பேச, மற்றும் விருப்பங்கள் உங்கள் ஆற்றலைப் பெறுகின்றன, மேலும் நீங்கள் அவர்களைப் பெறுகிறீர்கள் என்று நம்பப்படுகிறது. இது ஒரு எளிய உரையாடல் அல்லது தீவிரமான விவாதமாக இருந்தாலும், ஆற்றல் பரிமாற்றம் எளிமையான மற்றும் மிகவும் சிக்கலான நேரங்களில் தொடர்கிறது. இந்த நுட்பமான ஆற்றல் பரிமாற்றம் பாதிப்பில்லாததாக உணரக்கூடும், நீண்ட காலத்திற்கு, அது உங்களைத் தாங்கத் தொடங்கும். எனவே, நீங்கள் வேறொருவரின் ஆற்றலைச் சுமக்கிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால், அதை அடையாளம் கண்டு உங்களை சுத்தப்படுத்த சில அறிகுறிகள் இங்கே.
புதுடெல்லி: பிஹாரின் பக்ஸரில் மணமான மறுநாளே எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு கிளம்பியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். இதற்காக தன் கணவரை பெருமிதத்துடன் வழியனுப்பியுள்ளார் மணப்பெண். இந்திய ராணுவப் படையின் வீரர் என்பது பெருமைக்குரிய விஷயம். இப்பணியில் போரின்போது தேசத்துக்கு சேவை செய்வது ராணுவ வீரரின் கடமை. இதை உணர்த்தும் வகையில் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான தியாகி யாதவ் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவர் பணியமர்த்தப்பட்டு உள்ளார். இளைஞரான அவர் தன் திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்தது. இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பின் எல்லையில் பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் துவங்கிவிட்டது. இதனால், இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, அவர்களைத் தம் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று மணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பி விட்டார் ராணுவ வீரரான…
