டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். குர்பாஸ் 26 ரன்களும், சுனில் நரேன் 27 ரன்களும் எடுத்தனர். அஜிங்க்யா ரஹானே 26 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். அணியின் அதிகபட்ச ரன் இதுவாகவே இருந்தது. அடுத்தடுத்து இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள், ரிங்கு சிங் 36, ரஸ்ஸல் 17, ரோவ்மேன் பவல் 5, என 20 ஓவர் முடிவில் 204 அடித்தது கொல்கத்தா அணி. 205 என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் பொரெல் 4 ரன்களுடன் நடையை கட்டினார். மறுமுனையில்…
Author: admin
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில் .24 மணி நேர கெடு முடிந்தும் அமெரிக்கா மீதான 34 சதவீத வரிவிதிப்பை சீனா திரும்பபெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று (மார்ச 28-ம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சின்னக் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது கோமளவல்லி தாயார் சமேத சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். இந்தக் கோயில் யதோக்தகாரி பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி அதிகாலையில் கடந்த 23-ம் தேதி கோயில் கொடிக்கம்பத்தில் பட்டாச்சாரியார்களால் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டது. யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஏற்றிய பிறகு கொடி மரத்துக்கும், உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. மாலையில் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார். தேரில் ராஜ…
சென்னை: தன்னுடைய படங்களில் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெற்றதே இல்லை என என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுடியூப் பேட்டி ஒன்றில் சுந்தர்.சி கூறியது: “என்னுடைய படங்களுக்கு அதிகமாக வரும் பார்வையாளர்கள் யாரென்று பார்த்தால் குழந்தைகளும், ஃபேமிலி ஆடியன்ஸும்தான். எனவே அவர்கள் ரசிக்கும்படிதான் நான் காட்சிகள் வைப்பேன். மிகவும் ஆபாசமான காட்சிகள், என் படங்களில் இருக்காது. டபுள் மீனிங் வசனங்களை என் படங்களில் நான் வைப்பதில்லை. ஒருவேளை அப்படி டபுள் மீனிங் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். நான் எந்த எண்ணத்தில் வைத்திருக்க மாட்டேன். காரணம், எழுதும்போதே டபுள் மீனிங் வசனங்களை நான் தவிர்த்து விடுவேன். அதே போல ஆபாச வசனங்களும் இருக்காது. என் படங்களில் கிளாமர் இருக்கும். நாம் வைக்கும் ஆங்கிள் தான் முக்கியம். புடவை கட்டிக் கொண்டு வந்தால் கூட டாப் ஆங்கிள் வைத்தால் தப்பாகி விடும். ஹீரோயின் கவுன் போட்டுக் கொண்டு…
திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியின் 18-வது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர், நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (ஏப்.29) யாசகம் பெறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் நகர் மன்றத்தலைவர் நா.குமார் தலைமையில் இன்று நடந்தது. நகராட்சி ஆணையர் (பொ) பால்ராஜ், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டம் தொடங்கியதுமே, 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். மேலும், அதிமுக கவுன்சிலர் தங்கம் பேசும்போது, “எனது 18-வது வார்டுக்கு, பொது நிதியிலிருந்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். எப்போது நிதி கேட்டாலும் பொதுநிதி இல்லை என நகர்மன்ற நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது 8 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனது வார்டு மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?…
பெங்களூரு: பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் பேரன் பிறந்த 17 மாதங்களில் டிவிடெண்ட் மூலமாக ரூ.3.3 கோடியை சம்பாதித்துள்ளார். இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும், ரோஹன் மூர்த்தி என்ற மகனும் உள்ளனர். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் இங்கிலாலந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் தம்பதிக்கு ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர், பெங்களூரில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர். பிறந்து 17- மாதமே ஆன ஏகாக்ராவுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு டிவிடெண்டாக மட்டும் ரூ.3.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏகாக்ராவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.04 சதவீத பங்குகள் அதாவது 15 லட்சம் பங்குகள் உள்ளது.…
நாங்கள் பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் எங்கள் நண்பர்கள் என்று அவர்கள் கூறலாம், எல்லோரும் எங்கள் நல்வாழ்வு அல்ல. அவை நம் முகத்தில் இனிமையாகத் தோன்றலாம், ஆனால் எங்கள் முதுகுக்குப் பின்னால் எங்கள் நச்சு பக்கம். இத்தகைய உறவுகள் நீண்ட காலத்திற்கு நமது மன ஆரோக்கியம், சுயமரியாதை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆழமாக பாதிக்கின்றன. யாரும் சரியானவர்கள் அல்ல என்றாலும், சில ஆளுமை வகைகள் உணர்ச்சி ரீதியாக வடிகட்டுதல், கையாளுதல் அல்லது தீங்கு விளைவிக்கும். எனவே, இங்கே நாம் சில வகையான நபர்களை பட்டியலிடுகிறோம், ஒருவர் அறிந்திருக்க வேண்டும், மேலும் விலகி இருக்க வேண்டும்:
அமெரிக்க குடிவரவு வக்கீல்கள் சங்கத்தின் (AILA) தலைவர் கெல்லி ஸ்டம்ப், எண்ணற்ற AILA உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் வழக்கு முயற்சிகள் காரணமாக, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகள் சர்வதேச மாணவர்களின் பதிவுகளை மீண்டும் நிலைநிறுத்துகிறார்கள் என்ற செய்தியை வரவேற்றனர்.அவள், “புதியது பனி கொள்கை அறிவிப்பு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட டஜன் கணக்கான வழக்குகளுக்கு பதிலளிக்கும் விதமாக செவிஸில் சர்வதேச மாணவர்களின் பதிவுகளை மீண்டும் நிலைநிறுத்துவது வரவேற்பு செய்தி. ஏஜென்சி செவிஸில் மாணவர் பதிவுகளை ரத்து செய்யும்போது, சரியான சோதனை சேனல்கள் வழியாகச் செல்லும் போது, அது செவிஸில் மாணவர் பதிவுகளை ரத்து செய்யும்போது மிகைப்படுத்தியது. நாடு மற்றும் உலகம் முழுவதும், மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இன்றும் இப்போதைக்கு ஒரு கூட்டு பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிர்வாகத்தின் குழப்பமான கொள்கைகள் புதிய இயல்பு என்பது ஒரு சோகமான உண்மை. நாம் முன்னேறும்போது, இதுபோன்ற மீறல் மீண்டும் நடக்காது…
புதுடெல்லி: உ.பி.யில் முதல்வர் பயிற்சித் திட்டத்தின் 13 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று குடிமைப்பணி பெற்றுள்ளனர். மேலும் 280 மாணவர்கள், மாநில குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். உ.பி.யில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்வர் அபியுதயா திட்டம் கடந்த 2021 முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சமூக நலத்துறை நடத்தும் இத்திட்டம் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் பயின்ற மாணவர்களில் 13 பேர் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் வென்றுள்ளனர். சமீபத்தில் வெளியான 2024 யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மாநில சமூக நலத்துறை இணை அமைச்சர் அசீம் அருண் கூறுகையில், “உ.பி.யின் 75 மாவட்டங்களில் மொத்தம் 166 அபியுதயா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த பயிற்சித் திட்டமமானது ஒரு கற்றல் தளம் மட்டுமின்றி, மாநில இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகுகள்…
2025-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார். நடப்பாண்டில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்தி செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. 2025-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் நன்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களை தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புத்தாண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு. கடந்த சில மாதங்களாக பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு வரவேற்பு மிகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும்,…
