பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்படும் ஷெரீப் சவுத்ரி ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச தீவிரவாதியின் மகன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஜிஹாதி மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது என கூறப்படுவது உண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி. இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) இயக்குநராக பதவி வகிக்கும் இவர், பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவலை தெரிவி்த்தார். சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவின் நிறுவனரும் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு (9/511) காரணமானவருமான ஓசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளிதான் சுல்தான் பஷிருதீன் முகமது. அணு விஞ்ஞானியான இவர், அணு ஆயுத தொழில்நுட்பத்தை அல்-காய்தா அமைப்புக்கு வழங்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும்…
Author: admin
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று மாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில், கிரிவலப் பாதையில் தன்னார்வலர்கள், ஆன்மிக மடங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அடிப்படை வசதிகள்… இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று இரவு 8.47 மணிக்குத் தொடங்கியது. இன்று (மே 12) இரவு 10.43 மணிக்கு நிறைவு பெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதையொட்டி,…
திருச்சி: பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையோன போர் நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரம், போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது அவசியம். ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயகக் கட்சிகள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சுமுகமான உறவைப் பேண வேண்டும். போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக…
இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல்களால் பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்தின் பங்குகள் 66 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது. இவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு ஹரியானாவின் அம்பாலா, மேற்குவங்கத்தின் ஹசிமாரா விமானப்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை, இந்திய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி அழித்தன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன. அந்த போர் விமானத்தில் சீறிப் பாய்ந்த ஸ்கால்ப்-இஜி ஏவுகணைகள் தீவிரவாத முகாம்களை மிகத் துல்லியமாக தாக்கி தரைமட்டமாக்கின. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாமல் இந்திய எல்லையில் இருந்தே சுமார் 100 கி.மீ. தொலைவில்…
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள டிஆர்டிஓ அமைப்பின் பொறியியல் பிரிவு தலைவர் டலோலி கூறியதாவது: போர்க்களம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின்போது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மனிதர்களை போன்ற ரோபோ வீரர்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளாக மாதிரி ரோபோக்களை தயார் செய்திருக்கிறோம். இந்த ரோபோக்கள் கடினமான மலைப்பகுதிகளில் எளிதாக ஏறிச் செல்லும். நாம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்பட ரோபோக்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறோம். இவ்வாறு டலோலி தெரிவித்தார். ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கூறியதாவது: இந்திய ராணுவத்துக்காக மனிதர்களை போன்று கை, கால்களுடன் ரோபோ வீரர்களை தயார் செய்திருக்கிறோம். இந்த ரோபாக்களின் உடல் பகுதியில் இலகுரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் போர்க்களத்தில் முன்னேறி செல்வது, கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்வது, ஆபத்தான ரசாயனங்களை…
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் நாளை (மே 13) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 7.92 லட்சம் மாணவர்களில் 7 லட்சத்து 53,142 (95.03%) பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, பிளஸ் 2 வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (மே 12) வெளியிடப்படுகிறது. அவற்றை மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வுத் துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த தகவல் பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள்…
இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் கூடுதலாக 20 பேர் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் விபத்துக்கு இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக்குறைவு உட்பட…
வகை சி பெற்றோரை இரு உலகங்களுக்கும் சிறந்ததாக நினைத்துப் பாருங்கள். அவை வகை A (ஒழுங்கமைக்கப்பட்ட, சரியான நேரத்தில்) மற்றும் B இன் நெகிழ்வுத்தன்மை (தளர்வான, தன்னிச்சையான) ஆகியவற்றின் கட்டமைப்பை கலக்கிறது. ஒழுக்கம் உள்ளது, ஆனால் முழுமையின் சாமான்கள் இல்லை. அவர்கள் ஒழுங்குக்காக பாடுபடுகிறார்கள், ஆனால் வாழ்க்கை தலையிடும்போது மாற்றியமைக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், “எனக்கு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. சி அம்மா உண்மையானதல்ல, நான் அதை உருவாக்கினேன், நான் அதை உருவாக்கினேன். டைப் ஏ என பெயரிடப்பட்ட அம்மாக்கள் மற்றும் அழகான சிற்றுண்டிப் பொதிகளைக் கொண்ட அம்மாக்கள், மற்றும் அவர்களின் குழந்தைகளை தங்கள் குழந்தைகளின் துணிகளில் மறந்துவிட்டால், மற்றும் பி. சி. ”இந்த ‘விசித்திரமான ஒழுங்கின்மை’ பற்றி அவள் எப்படி நினைத்தாள் என்பது பற்றி மேலும் பேசினாள், ஆனால் இது உலகெங்கிலும் உள்ள பெற்றோரிடமிருந்து ஒரு பெரிய பதிலைப் பெற்றது. “நான் வகை சி அம்மா என்ற…
ஆண் குழந்தை பெயர்கள் செழிப்பைக் குறிக்கும்செழிப்பு என்பது செல்வத்தை விட அதிகம்-இது நல்வாழ்வு, வளர்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டம் பற்றியது. இந்த சக்திவாய்ந்த விருப்பத்தை பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள ஆண் குழந்தை பெயரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்திய மொழிகள் மற்றும் மரபுகள் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இங்கே:
சென்னை: வன்னியர்களக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் `சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு’ நேற்று மாலை நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி மாநாட்டு மலரை வெளியிட்டார். பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, செய்தி தொடர்பாளர் க.பாலு, செயற்குழு உறுப்பினர் ஈக்காட்டுத்தாங்கல் இரா.சிவகுமார், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உட்பட முக்கிய நிர்வாகிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநாட்டில் வன்னியர் சங்க கொடியை ராமதாஸும் அன்புமணியும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து…
