பெங்களூரு: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள கும்பர்பேட்டையை சேர்ந்தவர் முனீர் கான் குரேஷி (36). கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு தனது யூ டியூப் பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ”பஹல்காம் தாக்குதலானது மத்தியில் ஆளும் பாஜக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தீவிரவாதிகள் எப்படி எளிதாக தப்பிக்க முடியும்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாஜக இளைஞர் அணியினர் போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கல்பேட்டை போலீஸார் தாமாக முன்வந்து முனீர் கான் குரேஷி மீது 2 பிரிவுகளில்…
Author: admin
சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் 2 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முகாம் டிஏசி டெவலப்பர்ஸ், 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், ரோமா குரூப், காஸ்கோ இந்தியா பிரைவெட் லிமிட்டெட் ஆதரவுடன் நடத்தப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் துளசி ரெட்டி, எஸ்டிஏடி மேலாளர் மகேஷ்வரி, சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகத் துணைத் தலைவர் பி.ஜெகதீசன், துணைத் தலைவர் ஏ.தினகர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும்…
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியின் சூட்கேஸ் கைப்பிடியில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்தவர் சதீஷ் (35) என்பவர் சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோடை விடுமுறைக்காக கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் சென்னைக்கு நேற்று வந்தார். குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்துவிட்டு, தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். விமான நிலையத்தின் வெளிப்பகுதியில், பிக்கப் பாயிண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு உடமைகளை டிராலியில் வைத்து தள்ளி கொண்டு சென்றார். கார் அருகே டிராலியை நிறுத்தி டிராவல் பேக்கை எடுத்து காரில் வைக்க சதீஷ் முயன்றபோது, பேக்கின் கைப்பிடியில் பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சக பயணிகள் பாம்பு என்று கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்த போலீசார், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.…
ஹைதராபாத்: ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் ஜீவன் லால் லவாடியா கைது செய்யப்பட்டு உள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள வருமான வரித் துறை அலுவலகத்தின் ஆணையராக ஜீவன் லால் லவாடியா பணியாற்றி வருகிறார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திடம் இருந்து இவர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும பிரதிநிதி ஒருவர் மும்பையில் இடைத்தரகரிடம் ரூ.70 லட்சத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும துணை பொது மேலாளர் விரால் காந்திலால் மேத்தாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹைதராபாத்தில் பணியாற்றும் வருமான வரித் துறை ஆணையருக்காக லஞ்ச பணத்தை வழங்கியதாக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து ஜீவன் லால் லவாடியா, ஹைதராத்தில்…
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று அணியின் முன்னாள் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட்…
சென்னை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இந்திய அரசுக்கு பாராட்டுகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல் சம்பவம், போர்நிறுத்தம் ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய ராணுவத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். கேரளாவுக்கு படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவத்தினர் துவம்சம் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போரை திறமையாக, வலிமையாக, வீரியத்துடன் கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,…
குழந்தைகள் சிறிய கடற்பாசிகள் போன்றவர்கள் they அவர்கள் பார்க்கும், கேட்கும், உருட்டும் அனைத்தையும் தூக்கி எறிந்தனர். குப்பை உணவு விளம்பரங்களுக்கு வரும்போது? ஓ பையன், அவர்கள் அதையும் உறிஞ்சுகிறார்கள் – மற்றும் வேகமான. ஒரு புதிய ஆய்வு ஏற்கனவே பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிந்ததை உறுதிப்படுத்தியது: குழந்தைகளை அதிகமாக சாப்பிடுவதற்கு ஐந்து நிமிட குப்பை உணவு விளம்பரம் ஆகும்.இங்கே உதைப்பவர் – விளம்பரம் உண்மையான உணவைக் காட்டினால் கூட அது ஒரு பொருட்டல்ல.உடல் பருமன் குறித்த ஐரோப்பிய காங்கிரஸின் ஆராய்ச்சியாளர்கள், பிராண்ட் மட்டும் விளம்பரங்கள் கூட (லோகோக்கள், ஜிங்கிள்ஸ் மற்றும் கவர்ச்சியான கோஷங்கள் என்று நினைக்கிறேன்) ஒரு நாளைக்கு 130 கலோரிகளை கூடுதலாக உட்கொள்ள குழந்தைகளைத் தள்ளக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. இது ஒரு கூடுதல் சாக்லேட் பட்டி, மிருதுவான பை அல்லது ஒரு சில குக்கீகள் -ஒவ்வொரு நாளும் -இரண்டு விளம்பரங்களைப் பார்ப்பதிலிருந்து. அது ஒரு பெரிய ஒப்பந்தமாகத் தெரியவில்லை, ஆனால் அந்த…
புதுடெல்லி: பிஹாரின் பக்ஸர் மாவட்டம் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த சிப்பாயான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். அவர் தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்தது. இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பின் எல்லையில் பாகிஸ்தானுடன் போர் தொடங்கி விட்டது. இதனால், இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று திருமணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பி விட்டார் தியாகி யாதவ். அவரது பெற்றோரும் தாய்நாட்டிற்கு சேவை செய்வது முக்கியம் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். புது மனைவியான பிரியா யாதவும் தன் கணவர் தியாகி யாதவை பெருமிதத்துடன் வழியனுப்பி வைத்துள்ளார். இந்த நெகிழ்வான சம்பவம் வட மாநிலங்களின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பிரியா யாதவ் கூறும்போது, ‘எனது கணவர், தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் நிறைந்தவர். உறுதியான எண்ணம்…
கொழும்பு: மூன்று நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 101 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவல் 30, ஹர்லீன் தியோல் 47, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44, தீப்தி சர்மா 20 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.…
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி எழுந்தருளும் வைபவம் இன்று காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள்திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கண்டாங்கி பட்டு உடுத்தி,நெற்றிப்பட்டை, கரங்களில்வளைத்தடி, நேரிக்கம்பு பரிவாரங்களடன் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்குப் புறப்பட்டார். கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை நடந்தது. அன்றிரவு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி பகுதியிலுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் தங்கினார். அதிகாலை ஒரு மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கடச்சனேந்தல் வழியாக மதுரை மாநகர எல்லையான…
