பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன்பின் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் (மார்ச் 27) நிறைவு பெறுகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272சிறை கைதிகளும் அடங்குவர். பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர்…
Author: admin
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்தார். போட்டி முடிவடைந்ததும் அவர் கூறியதாவது: முதல் பந்தில் சிக்ஸர் விளாசுவது என்பது எனக்கு சாதாரண விஷயம். நான் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளேன், மேலும் உள்ளூர் அளவிலும் விளையாடியுள்ளேன்,…
திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாக இந்தியா – சீனா இடையே உறவுகள் பாதித்ததாலும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்திய யாத்தீரிகள் சீன எல்லையை கடந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். இதையடுத்து இந்தியா – சீனா இடையேயான உறவுகள் சீரடையத் தொடங்கின. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இருதரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-அம்ச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் திபெத் வருவதை ஊக்குவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்பின் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சீனா சென்றார். இதைத்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்கிறார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த குளத்தில் அட்சய திருதியை தினத்தில் (இன்று) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார். இந்த விழாவை காண வருபவர்கள் கோயில் தெற்கு வாசல் வந்து நவராத்திரி மண்டபம் வழியாக பார்வையாளர் இடத்துக்கு வர வேண்டும். அங்கிருந்து திருக்குளத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியையும் பொதுமக்கள் காணலாம். ஆதீனங்கள், சந்நியாசிகள் ஆகியோர் திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் தெப்பலில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகர்கள் பார்வையிட தெற்கு கோபுர வாயில் பகுதியிலும், பத்திரிகையாளர்கள் செய்திகளை…
’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் மதிமாறன் தெரிவித்துள்ளார். ’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘மண்டாடி’ குறித்து இயக்குநர் மதிமாறன் பேசும் போது, “சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.” என்று பேசினார் மதிமாறன். இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை…
சென்னை: கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து 20 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: இந்த துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். வாடகை கட்டிடங்களில் இயங்கும் 7 கல்லூரி மாணவியர் விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் சொந்தக் கட்டிடங்கள் கட்டித் தரப்படும். மேலும், ரூ.3 கோடியில் 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்கப்படும். அதேபோல், அனைத்து விடுதிகளுக்கும் சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும். கல்லூரி விடுதிகளில் மாணவர் எண்ணிக்கையானது ரூ.1.46 கோடியில் உயர்த்தப்படும். இதன்மூலம் 885 மாணவிகள் பயனடைவார்கள். விடுதி மாணவர்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு…
அரூர்: அரூர் பகுதியில் விலைவீழ்ச்சியால் தர்பூசணி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நரிப்பள்ளி, சிக்கலூர், கோட்டப்பட்டி, பையர்நாய்க்கன்பட்டி, புது கொக்கராப்பட்டி, மாலகாபாடி, வாச்சாத்தி, தாதம்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, முத்தனுார், கம்பைநல்லூர், மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் தர்பூசணி (பச்சை மற்றும் கிரண்) பழச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. வழக்கமாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜுன் மாத சீசனுக்காக 350 ஏக்கருக்கும் அதிகமாக தர்பூசணி பயிரிடப்படும். இதில் போதிய வருவாய் கிடைப்பதால் ஆண்டு முழுவதும் சிலப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சேலம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், உள்ளூர் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுகிறது. வழக்கமாக கோடை சீசனில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகும். ஆனால், நடப்பாண்டு தர்பூசணியில் ஊசி மூலம் நிறமேற்றப்படுவதாக சமீபத்தில் பரவிய தகவல்களால்…
குடிவரவு வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, உள்வரும் பயணிகளின் மின்னணு சாதனங்களைத் தேடுவதில் ஒரு முன்னேற்றம் உள்ளது அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) அதிகாரிகள். இருப்பினும், பெரும்பாலான தேடல்கள் அடிப்படை. இந்த பின்னணியில், அமெரிக்க குடிவரவு வக்கீல்கள் சங்கம் (AILA) மற்றும் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் (ACLU) போன்ற பல அமைப்புகள் கேள்விகளை வெளியிட்டுள்ளன. சிபிபி வலைத்தளமும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.இந்த தேடலுக்கு உட்பட்ட விசா -ஹோல்டர்கள் மட்டுமல்ல, இது பசுமை அட்டை வைத்திருப்பவர்களையும் அமெரிக்க குடிமக்களையும் கூட மறைக்க முடியும் -ஆனால் அவர்களின் உரிமைகள் வேறுபடுகின்றன. இங்கே ஒரு பயனுள்ள வழிகாட்டி:கேஜெட்களைத் தேட சிபிபிக்கு சக்தி இருக்கிறதா?ஆம், சட்டபூர்வமான நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவிற்குள் நுழையும் எவருக்கும் மின்னணு சாதனங்களை (தொலைபேசிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற கேஜெட்டுகள் உட்பட) தேட அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த தேடல்கள் அமெரிக்க நில குறுக்குவெட்டுகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஏற்படலாம்.…
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து விரிவான முறையில் விவாதிக்க ஏப்ரல் 28-ல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019, பிரிவு 18(1)-ன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை 10.30 மணிக்கு பேரவை கூடும். இவ்வாறு உத்தரவில் கூறப்பபட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பிறகான நிலவரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” என்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்ட ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த புன்கிழமை துணை…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் டிசம்பர் 11 முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. சிறப்பு அம்சங்கள் 6.82 இன்ச் எல்டிபிஓ AMOLED Q10 டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் நான்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் 6,000mAh பேட்டரி 120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது.…
