மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், கூட்டணிக்காக மாநாட்டை நடத்தவில்லை என அன்புமணி தெரிவித்தார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், திருவிடந்தை மாநாட்டு திடலுக்கு நேற்று வருகை தந்த பாமகவின் தலைவர் அன்புமணி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. சமீப காலத்தில், தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாநாடு நடைபெறவில்லை என அனைத்து பொதுமக்களும், அனைத்து கட்சியினரும் கூறுகின்றனர். அந்த வகையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.மேலும், மாநாட்டை அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறப்பாக நடத்தினர். இந்த மாநாட்டில் பல மாநிலம்,…
Author: admin
எல்லா செல்வங்களும் பண வடிவில் வரவில்லை. நீங்கள் பெறக்கூடிய மிக மதிப்புமிக்க சொத்துகளில் சில மென்மையான திறன்கள், நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை வடிவமைக்கும், சிக்கல்களைத் தீர்க்கும், மற்றவர்களுடன் வளரக்கூடிய மனிதனை மையமாகக் கொண்ட குணங்கள். நீங்கள் ஒரு மாணவர், தொழில்முறை, அல்லது ஒரு பெரிய ஒன்றை உருவாக்குவது, மென்மையான திறன்களை மாஸ்டரிங் செய்வது காலமற்ற முதலீடு. இந்த ஃபோட்டோஸ்டரியில், உங்களுக்கு எப்போதும் பணம் செலுத்தும் எட்டு மென்மையான திறன்களைக் கண்டறியவும். எடுத்துக்காட்டுகள், பொதுவான தவறுகள் மற்றும் கற்றல் வளங்களுடன், உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் நம்பிக்கை, உங்கள் உறவுகள் மற்றும் உங்கள் தாக்கத்தை அதிகரிக்கும் கருவிகளைப் பெறுவீர்கள். வாழ்நாள் மதிப்பை உருவாக்க தயாரா? ஆரம்பிக்கலாம்.
புது தில்லி: அதிகபட்ச ஹாட்அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பரந்தஇது உலகின் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது வணிக விண்வெளி நிலையம்இந்திய ராக்கெட்டுகளை அதன் வரவிருக்கும் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.இதற்கு ஒரு நேர்காணலில் TOI. காகன்யான் ராக்கெட்டுகள் எங்கள் விண்வெளி நிலையத்திற்கான போக்குவரத்து சேவையாக. ”750+ குழு உறுப்பினர்களைக் கொண்ட விண்வெளி-வசதி நிறுவனம், ஹேவன் -2 என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பந்தயத்தில் உள்ளது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தின் வாரிசாக இருக்கும், இது 2031 வாக்கில் ஓய்வு பெறும்.தலைமை நிர்வாக அதிகாரி கூறினார், “நாங்கள் மனித விண்வெளிப் பயண பயணங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளுடனும் பணியாற்ற விரும்புகிறோம், மேலும் இந்தியா மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு தலைவராக இருக்கப்போகிறது என்பதைக் காண்கிறோம், இது உண்மையில் ஒரு பெரிய விஷயம். இந்தியாவுடன் ஒத்துழைக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். நாங்கள் பல நிலை…
புதுடெல்லி: அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நமது சகோதரிகள், மகள்களின் குங்குமத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் தெள்ளத் தெளிவாக இப்போது உணர்த்தப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும்…
புதுடெல்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதலின் போது அந்நாட்டு அணு ஆயுத கிடங்கை இந்திய ஆயுதப் படைகள் குறி வைக்கவில்லை என விமானப் படை அதிகாரி ஏ.கே.பார்தி கூறினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் 25 நிமிடங்கள் நீடித்தது. இதில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் படைகள் 3 முறை…
சுப.ஜனநாயகச் செல்வம்/ என்.சன்னாசி சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை மதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கம் விண்ணதிர, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முடிவுற்ற நிலையில், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கடந்த 8-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக 3-ம் நாளான 10-ம் தேதி அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். மூன்றுமாவடியில் 11-ம் தேதி எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கினார். பின்னர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி அருள்பாலித்தார். நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்புள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.…
இந்தியாவுடனான போர் சூழலை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கெஞ்சும் நிலையை, இந்திய முப்படைகள் ஏற்படுத்தியதாக முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார். ஒரு வழியாக இந்தியா -பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தான் பணிந்திருப்பது இந்திய மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமாரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் விவரம்: பாகிஸ்தான் விமான தளம் தாக்கப்பட்டதாக இந்திய முப்படைகள் அறிவித்திருப்பது குறித்து.. பாகிஸ்தானின் நூர்கான் விமானதளம் தாக்கப்பட்டு இருப்பதாக இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்திய அரசின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தனியார் செயற்கைக்கோள் புகைப்படங்கள், சீனாவின் செயற்கைக்கோள் முகமை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் அமெரிக்காவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் என 4 வகையான செயற்கைக்கோள் புகைப்படங்கள் அதை உறுதி செய்துள்ளன. எதற்காக நூர்கான் விமான தளம் குறிவைக்கப்பட்டது? எந்த விமானமும்…
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று போர் நிறுத்தத்தின் தாக்கம் எதிரொலித்தது. ஒரே நாளில் சென்செக்ஸ் சுமார் 3,000 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், “இந்திய பங்குச் சந்தையின் ராக்கெட் வேக எழுச்சிக்கு இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் முதன்மையான காரணம். அதுதவிர, இந்தியா -இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், பரஸ்பர நிதியின் வலுவான தரவுகள், எப்ஐஐ-க்களின் வரவு போன்றவையும் சந்தைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தன. மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் அதிகரித்து 82,429 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 916 புள்ளிகள் உயர்ந்து 24,924 புள்ளிகளில் நிலைத்தது. அமெரிக்கா – சீனா நாடுகள் பரஸ்பரம் வரியை குறைத்ததும் இதற்கு காரணம்” என்றனர். அமெரிக்காவில் மருந்து விலை 90%…
உங்கள் அன்றாட வழக்கத்தில் எளிய பழக்கங்களை இணைப்பதன் மூலம் ஆறு மாதங்களில் உங்கள் ஆரோக்கியத்தை மாற்றவும். பின்னோக்கி நடப்பது, எலுமிச்சை மற்றும் இஞ்சியுடன் நாள் தொடங்குவது, உடற்பயிற்சிகளின் போது நாசி சுவாசம் ஆகியவை தத்தெடுப்பதற்கான சில பழக்கவழக்கங்கள். குளிர்ந்த மழை, மாறி உட்கார்ந்து நின்று, சூரிய அஸ்தமனத்திற்கு முன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நீங்கள் இப்போது யார் என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகும். இல்லை, இதற்கு தீவிர உணவுகள் அல்லது கடுமையான உடற்பயிற்சி அமர்வுகள் தேவையில்லை. சிறிய, நிலையான பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்வது காலப்போக்கில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரும்.இங்கே எட்டு பழக்கங்கள் உள்ளன, அவை உங்கள் உடலமைப்பை மாற்றியமைக்கும் மற்றும் ஆறு மாதங்களில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.1. பின்னோக்கி நடந்து செல்லுங்கள்தினமும் 10 நிமிடங்கள் பின்னோக்கி நடப்பது உங்கள் மூட்டுகளை வலுப்படுத்தி சமநிலையை மேம்படுத்தும். இந்த குறைந்த தாக்க உடற்பயிற்சி…
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்க பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திட்டமிட்டார். இதற்காக புதூர் மண்மலைமேடு பகுதியிலுள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தங்கினார். அதிகாலை கள்ளழகரை தரிசிக்க போவதாக அறிந்த போலீஸார் அவரை வீட்டு காவலில் வைத்தனர். அவர் கூறுகையில், ‘தர்கா, மசூதி எங்கு சென்றாலும் காவல்துறை தடை விதிக்கிறது. மத நல்லிணக்கத்திற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்தேன். அதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மதுரையில் மட்டும் 18 முறை கைதாகி உள்ளேன்,’ என்றார். போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘ கன்னியாகுமரி செல்வதற்காக அவர் மதுரை வந்தபோது, முன்னேற்பாடு இன்றி கள்ளழகர் திருவிழாவுக்கு செல்ல விரும்பியதால் போக வேண்டாம், ’ என்றனர்.
