Author: admin

குழந்தைகளில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. தண்ணீருடன் போதுமான நீரேற்றம், சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைவாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு போன்ற பழக்கங்களை ஊக்குவிப்பது அவசியம். அடிக்கடி குளியலறை இடைவெளிகளை ஊக்குவிப்பது மற்றும் சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான வருடாந்திர மருத்துவர் வருகைகளை திட்டமிடுவது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான சிறுநீரகங்களை பராமரிக்க கணிசமாக பங்களிக்கும். சிறுநீரகங்கள் முக்கிய செயல்பாடுகளைச் செய்கின்றன, அவை உடலை சமநிலையில் வைத்திருக்கும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்கின்றன, அதாவது இரத்தத்தை வடிகட்டுதல், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கழிவுகளை அகற்றுவது. குழந்தையின் வளர்ச்சி மற்றும் நீண்டகால நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான சிறுநீரக வியாபாரி முக்கியமானது, இருப்பினும் பல பெற்றோர்கள் தங்கள் முக்கியத்துவத்தை கவனிக்கிறார்கள். சிறுநீரக நோய் உலகளவில் 850 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது, மேலும் இளம் வயதிலிருந்தே சரியான பழக்கவழக்கங்கள் இந்த நோய்களில் பெரும்பான்மையைத் தடுக்க…

Read More

சென்னை: “இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.…

Read More

மதுரை: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரை – அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதனிடையே, தனியார் விமான நிறுவனம் ஒன்று மதுரை – அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் 3 நாட்கள் புதிய விமான சேவையை தொடங்க இருக்கிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியது: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரையிலிருந்து அபுதாபிக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் புதிய விமானம் இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்திய நேரப்படி, மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் அபுதாபி நேரப்படி, காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50…

Read More

ரோஸ் ஃபெரீரா | (பட ஆதாரம்: ப்ரூக் ஓவன்ஸ் சக) ரோஸ் ஃபெரீராகரீபியனில் ஒரு வறுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைப் பருவத்திலிருந்து நாசாவில் ஒரு முழுநேர நிலைக்கு குறிப்பிடத்தக்க பயணம், அசைக்க முடியாத பின்னடைவு, உறுதிப்பாடு மற்றும் அறிவியலுக்கான ஆர்வம் ஆகியவற்றின் கதை. டொமினிகன் குடியரசின் ஏழ்மையான சுற்றுப்புறங்களில் ஒன்றில் பிறந்த ஃபெரீரா, வீடற்ற தன்மை, துஷ்பிரயோகம் மற்றும் மொழி தடைகள் உள்ளிட்ட ஏராளமான கஷ்டங்களை எதிர்கொண்டார். இந்த மகத்தான சவால்கள் இருந்தபோதிலும், அவர் தனது வாழ்க்கையையும் கல்வியின் மூலமாகவும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான கடுமையான அர்ப்பணிப்பின் மூலமாகவும் மாற்றினார். அவரது வெற்றிக்கான பாதையில் தனிப்பட்ட மற்றும் சமூக தடைகளை எதிர்த்துப் போராடுவது, நியூயார்க் நகரில் பல ஆண்டுகளாக வீடற்ற தன்மையைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் குறிப்பிடத்தக்க சுகாதார பின்னடைவுகளை வெல்வது ஆகியவை அடங்கும். ஃபெரீராவின் பயணம் கல்வியின் உருமாறும் சக்தி மற்றும் விஞ்ஞான சமூகத்தில் பிரதிநிதித்துவத்தின் தாக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்.ரோஸ் ஃபெரீராவின் வறுமையிலிருந்து…

Read More

மதுரை: மதுரை மாநராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் சேர்த்து மொத்தமே 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெருநாய்களால் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நல துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சியில் தனியார் நிறுவனம், விலங்குகள் நலத்தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை மாநகராட்சி நகர் நலத்துறை, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் 23 வரை தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டது. இந்த சர்வே முடிவு அடிப்படையில் மாநகராட்சி 100 வார்டுளில் மொத்தமே 38,348 தெருநாய்கள் மட்டுமே…

Read More

தேனி: “2040-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியுள்ளார். தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டு பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திராயன்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் உள்ள குறைகளை கண்டறிந்து பின்பு சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சந்திராயன் 3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது. ஆனால், சந்திராயன்-4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று சாம்பிள்களை எடுத்துகொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சந்திராயன் 4 திட்டம், 2027-ல் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த லேண்டர் நிலவின் தென் துருவத்துக்கு அருகில் மென்மையாக…

Read More

மதுரை: “தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும், அவர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தெரியும்” என ஆந்திரா மாநில எம்எல்ஏ சுந்தரபு விஜயகுமார் திருப்பரங்குன்றத்தில் கருத்து தெரிவித்தார். ஜனசேனா கட்சி நிர்வாகியும், ஆந்திரா மாநிலம் எலமஞ்சிலி தொகுதி எம்எல்ஏ-வுமான சுந்தரபு விஜயகுமார் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 13) தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் வழிகாட்டுதல்படி தமிழகத்திலுள்ள 6 முக்கிய முருகன் கோயில்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சடங்குகள் நடத்தப்பட்டன. இது நமது ஆயுதப் படைகளுக்கு ஆன்மிக ரீதியில் ஆதரவளிக்கும். இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு அடையாளப்படுத்துவதே நோக்கம். குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் , குஜராத் போன்ற பதற்றமான எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்களுக்கு தெய்வீகப் பாதுகாப்பு, வலிமை அவசியம் என பவன் கல்யாண்…

Read More

கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: “இந்தியா -இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக தற்போது ஒப்பந்தம்…

Read More

ராமேசுவரம்: ‘வெசாக்’ தினத்தையொட்டி இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் இன்று (மே 13) விடுதலை செய்யப்பட்டனர். புத்த பெருமான் பிறந்தது, ஞானமடைந்தது மற்றும் இறந்தது என மூன்று முக்கிய நிகழ்வுகளும் ‘வெசாக்’ மாத பவுர்ணமி நாளிலேயே நிகழ்ந்தது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையில் பவுத்த மக்கள் ‘வெசாக்’ மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை ‘வெசாக்’ பண்டிகையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த தினத்தை முன்னிட்டு சிறிய குற்றங்கள் மற்றும், அபாராத தொகையைச் செலுத்த தவறியதற்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யபட்ட மீனவர்கள் கொழும்பு மெருஹானாவில் உள்ள குடியேற்ற தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

பனாஜி: கோவாவில் அணுமின் நிலையம் அமைக்கும் பாஜகவின் பரிந்துரையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. கடற்கரை மாநிலமான கோவா பாஜகவின் ஆபத்தான பரிசோதனைகளுக்கான ஆய்வகம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் மனோகர் லால் கத்தார், தங்களுடைய பகுதிகளில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதாக திங்கள்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கோவாவின் நகர்புற மேம்பாடு மற்றும் மின்சாரத் துறையின் மறுஆய்வுக் கூட்டத்தில் கோவாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவா காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவா மாநிலமானது பாரதிய ஜனதா கட்சியின் ஆபத்தான பரிசோதனைகளுக்கான ஆய்வகமில்லை.…

Read More