கராச்சி: பாகிஸ்தான் நுகர்வோர் விலைக் குறியீடு பிப்ரவரி மாதத்தில் கடந்த ஆண்டு இதே மாதத்திலிருந்து 23.1% அதிகரித்து, மெதுவான விகிதத்தைக் குறிக்கிறது ஆண்டு பணவீக்கம் ஜூன் 2022 முதல், தரவு பாகிஸ்தான் புள்ளிவிவர பணியகம் வெள்ளிக்கிழமை காட்டப்பட்டது. நாடு உயரும் பணவீக்கத்துடன் போராடி வருகிறது, இது கடந்த காலத்தின் அடிப்படையில் 38% ஆக உயர்ந்ததாக இருக்கலாம், இது சர்வதேச நாணய நிதிக் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் விதித்த புதிய வரிவிதிப்பு நடவடிக்கைகளால் ஓரளவு இயக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இஸ்லாமாபாத்தின் நிதி ஒப்பந்தம் ஏப்ரல் 11 அன்று காலாவதியாகிறது. கடந்த ஜூலை மாதம் நிதியாண்டு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உயர்ந்துள்ள பிப்ரவரி சிபிஐ மாறாமல் ஒரு மாத கால அடிப்படையில். பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 24.5% -25.5% வரை உயரும் என்று பாக்கிஸ்தானின் நிதி அமைச்சகம் வியாழக்கிழமை ஒரு மாத அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது, பயிர் நிலைமை மற்றும் பொருட்களின் வழங்கல் மேம்படுவதால்…
Author: admin
புதுடெல்லி: காஜி , காஜியத் மற்றும் ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், தனியாக வாழ்வதற்கு மனைவியே காரணம் என கூறி ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்ததால், அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனு நீதிபதிகள் சுதான்சு துலியா, அஷானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி நீதிபதிகள் கூறியதாவது: காஜி…
சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அதன் ஃபைபர் இணைய இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிஎஸ்என்எல் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் அரசு வளர்ச்சி காரணமாக உலகமே உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இதனால் தொலைக்காட்சி சேவை, டிடிஎச், ஓடிடி செயலி, ஃபைபர் இணையம் மூலம் செட்டாப் பாக்ஸ் வழியே தொலைக்காட்சி சேவை என வளர்ச்சி பெற்றது. அடுத்தகட்டமாக இப்போது ஃபைபர் இணைப்பு மூலம், டேட்டா செலவு இல்லாமல் தொலைக்காட்சிகளை பார்க்கும் வசதி புதிதாக வந்துள்ளது. இந்த சேவையை இந்தியாவில் முதன்முறையாக பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைய இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் இலவசமாக 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை பார்க்க முடியும். இதுதொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டம் சோதனை அடிப்படையில் தமிழகம்…
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்துக்கான 8-ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஜூன்.1-ம் தேதி தேர்வு நடக்கிறது இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்துக்கான 8ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஜூன் 1ம் தேதி தேர்வு நடக்கிறது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகியவை கொண்ட தாகும். கணக்குத் தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்பை“ கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்…
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. மறுபுறம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சீசனை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த வெற்றி சிஎஸ்கேவுக்கு…
மியான்மிரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மண்டலே நகருக்கு அருகில் இதன் மையப் பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்தன. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 3,085 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4,515 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 341 பேரை காணவில்லை எனவும் அரசு கூறியுள்ளது. இந்நிலையில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உயிரிழப்பு இன்னும்…
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மாசிமக உற்சவமாக நடைபெற்ற தீர்த்தவாரியில், சக்கரத்தாழ்வாருடன் கடலில் இறங்கி பெண்கள் மற்றும் பக்தர்கள் புனித நீராடினர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் திருகடல்மல்லை எனப்படும் தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசிமக உற்சவமாக இன்று கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு உற்சவர் தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராஹ பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும், நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வந்து கடற்கரையில் எழுந்தருளினர். பின்னர், தீர்த்தவாரி நிகழ்ச்சியாக சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுடன் சக்கரத்தாழ்வார் கடலில் இறங்கினார். அப்போது, சுவாமியுடன் சேர்ந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் மஞ்சள் பூசி கடலில் இறங்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், தலசயன…
என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், “பட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயருக்கு முன்னால் பட்டப் பெயர்கள் போடுவதை விட என்னை அஜித் அல்லது ஏகே என்றே அழைக்க விரும்புகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். நான் ஒரு நடிகன். என்னுடைய வேலையை செய்வதற்காக நான் சம்பளம் பெறுகிறேன். புகழ், அதிர்ஷ்டம் எல்லாம் நமது வேலையின் மூலம் கிடைப்பவை. என்னுடைய வேலையை நான் நேசிக்கிறேன். அதை 33 ஆண்டுகளாக செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை எனது வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கிறேன். அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன். ஒரே நேரத்தில் அதிக படங்களை ஒப்புக் கொள்வதில்லை. என்னுடைய மற்ற பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் கவனம் செலுத்துகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு பத்ம பூஷண் விருது…
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் ஜூன் 4-க்கு தள்ளிவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த…
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கும் விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.76,400-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.108 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாகவும் இருந்தது.
