புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்ககளுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போவர்களையும் எங்கிருந்தாலும் இந்தியா வேட்டையாடும் என்று பிஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச உரையாற்றினார். இதையடுத்து, கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர்…
Author: admin
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் 2 முடித்த பெண்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்தவாறே பி.எஸ்சி. உற்பத்தி அறிவியல் (மேனுபேக்சரிங் அறிவியல்) பட்ட படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக பிளஸ் 2 முடிந்தவுடன் உயர் கல்வியை தொடர முடியாத நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாணவிகள், அந்நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே பட்டப் படிப்பை படிக்கும் வகையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தொழில்துறை ஒத்துழைப்பு மையம் உதவி வருகிறது. இது குறித்து, பாரதியார் பல்கலைக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொழில் துறை ஒத்துழைப்பு மையம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பிளஸ் 2 முடித்த 561 மாணவிகளுக்கு பணி புரியும் இடத்தில் பி.எஸ்சி. உற்பத்தி அறிவியல் பட்டப் படிப்பு…
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகள் எப்போது தடுத்து நிறுத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை: சென்னை புழலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முருகனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முருகனைப் போன்றவர்களுக்கு ரூ.6 லட்சம் என்பது மிகப்பெரிய தொகையாகும். வங்கி ஊழியர் என்ற முறையில் ஈட்டிய வருவாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதன்பின்பு கடன்வாங்கியும் பெருந்தொகையை இழந்த நிலையில், வாங்கிய கடனை அடைக்கவே முடியாது எனும் சூழலில் முருகன் தற்கொலை செய்து…
புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அறிவித்தது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அளவுக்கு அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தைவிட மாணவிகள் 5% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 90% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவிகள் 91.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.70% ஆகும். மொத்தம் 16,92,794 பேர் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்த ஆண்டு முதல் ஐந்து மண்டலங்களில் வெற்றி பெற்ற பகுதிகளில் விஜயவாடா 99.60%…
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவது ஓர் இடி முழக்கம் போன்ற சகாப்தத்தைக் குறிக்கிறது என்றும், அவருடைய காலக்கட்டம் மன உறுதி, தீரம் மற்றும் துணிச்சலால் நிரம்பியது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் வானளாவ புகழ்ந்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் அவர் எழுதியதில் இருந்து சில பகுதிகள் இதோ: விராட் கோலியின் ஓய்வு சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே உருமாற்றம் செய்த ஓர் ஆளுமையின் அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஓய்வறை, கிரிக்கெட் களச் செயல்பாடு என்று கிரிக்கெட் கலாச்சாரத்தையே மாற்றியதில் சச்சின் டெண்டுல்கரையும் கடந்து விஞ்சி நிற்பவர் விராட் கோலி. விராட் கோலி ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் ஒளியும் உஷ்ணமும் நிறைந்த இருதயமாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை. எதிர்பார்ப்புகளுக்கு மறுவிளக்கமளிப்பது போன்றது அவரது…
சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து,…
பிரேமனந்த் மகாராஜின் கூட்டத்தில் விராட் மற்றும் அனுஷ்கா (படம்: @radhakelikunj/x) ஆன்மீகம் என்ற வார்த்தையை நாம் பெரும்பாலும் மிகவும் எளிமையான, வெற்று வடிவத்தில் பயன்படுத்துகிறோம். பலருக்கு, ஆன்மீகம் என்பது அகாய் கிண்ணங்கள், ஒலி சிகிச்சைகள், கோஷமிடுதல், குங்குமப்பூ ஆடைகளை அணிவது மற்றும் விருப்பங்களைப் பற்றியது. ஆனால் போக்குகள் மற்றும் பற்றுகளுக்கு இடையில் அவர்கள் தவறவிடுவது ஆன்மீகம் கொண்டு வரும் உள் மாற்றமும், அது மக்களை உள்ளே இருந்து எவ்வாறு மாற்றுகிறது என்பதும் ஆகும்.ஒரு மதம் அல்லது குறிப்பிட்ட நம்பிக்கையுடன் பிணைக்கப்படாமல், ஆன்மீகம் மக்களுக்கு வாழ்க்கையின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ளவும் உணரவும் உதவுகிறது, இது பொருள் ஆடம்பரங்கள், செல்வம், புகழ், சாதனைகள், சரிபார்ப்பின் தேவை, மற்றும் ஒன்று.ஆன்மீகம் அனைவருக்கும் கற்பிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அமைதியைக் கண்டுபிடிக்க, நீங்கள் விடாமல் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, ஆன்மீக ரீதியில் சாய்ந்த நபர் வெளி உலகில் அல்ல, ஆனால் மெதுவாக அவருக்கோ அல்லது அவளுக்கும் சேவை…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் தாக்குதல் மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ‘பயங்கரவாதமற்ற காஷ்மீர்’ என்ற வாசகத்தைக் கொண்ட சுவரொட்டிகள், ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இந்த பயங்கரவாதிகள் மூன்று பேரின் புகைப்படங்களை அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதோடு, அடில் ஹுசைன் தோக்கர், அலி பாய் மற்றும் ஹாஷிம்…
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகின இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். இப்படத்தின் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சார்பட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை பா.ரஞ்சித் வெளியிட்டார். ஆனால், அதன்பிறகு அப்படம் தாமதம் ஆனது. பா.ரஞ்சித் ‘தங்கலான்’ படத்தில் பிசியானார். தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்யா, ‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். தற்போது ‘வேட்டுவம்’ படத்தில் பா.ரஞ்சித்…
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், இன்று (மே.12) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சியாமளா, திமுக கழக சட்ட திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், திமுக நிர்வாகி தர்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை…
