Author: admin

கீரை என்பது நம்பமுடியாத ஊட்டச்சத்து அடர்த்தியான இலை பச்சை, இது ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது இரும்பு நிறைந்துள்ளது, இது தோல் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உங்கள் தோல் கதிரியக்கமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இரும்பு மந்தமான தன்மை மற்றும் சோர்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது, இது சோர்வாக, மந்தமான நிறத்திற்கு வழிவகுக்கும்.இரும்புக்கு மேலதிகமாக, கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் கே. வைட்டமின் கே இருண்ட வட்டங்கள் மற்றும் நிறமிகளைக் குறைக்க உதவுகிறது, இது இன்னும் சமமான நிறத்திற்கு வழிவகுக்கிறது.கீரை லுடீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளால் ஏற்றப்பட்டுள்ளது, இது புற ஊதா தூண்டப்பட்ட சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான, ஒளிரும் தோல் தொனியை ஊக்குவிக்கிறது.சாப்பிடுவது எப்படி: கீரையை சாலடுகள், சாண்ட்விச்கள், சூப்கள் அல்லது மிருதுவாக்கிகளில் எளிதாக சேர்க்கலாம். இது ஒரு சுவையான பக்க உணவுக்காக பூண்டு மூலம் வதப்படலாம்.

Read More

ஆதம்பூர் (பஞ்சாப்): ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்குச் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற பதில் தாக்குதல் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும் என கூறினார். ஆதம்பூர் விமான தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள் இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் உத்வேகமாக மாறிவிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அனைத்து இந்தியர்களும் வீரர்களுடன் நின்று அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தனர். ஆபரேஷன் சிந்தூர் ஒரு வழக்கமான ராணுவ நடவடிக்கை அல்ல. இது இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான வலிமையின் உருவகமாகும். பயங்கரவாதிகள் கோழைகளைப் போல நாட்டுக்குள் வந்தனர், ஆனால் அவர்கள் இந்திய ராணுவத்துக்கு சவால் விடுத்ததை மறந்துவிட்டனர். நீங்கள் அவர்களை நேரடியாக, முன்பக்கத்திலிருந்து தாக்கினீர்கள். பொதுமக்கள்…

Read More

‘ஜெய் ஹனுமன்’ படத்தை மைத்ரி நிறுவனத்துடன் இணைந்து டி-சீரிஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. ‘ஹனுமன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களிடம் கதைகள் கூறினார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. இறுதியாக ரிஷப் ஷெட்டி நடிக்க ‘ஜெய் ஹனுமன்’ படத்தை இயக்கவிருப்பதாக பிரசாந்த் வர்மா அறிவித்தார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.‘ஜெய் ஹனுமன்’ படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தாலும், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. ஏனென்றால் ‘காந்தாரா’ 2-ம் பாகத்தின் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வந்தார் ரிஷப் ஷெட்டி. தற்போது ‘ஜெய் ஹனுமன்’ படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கிறது டி-சீரிஸ் நிறுவனம். இந்தியில் பல்வேறு பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டி-சிரீஸ். ‘ஜெய் ஹனுமன்’ படத்தில் இணைந்திருப்பதால், விரைவில் படத்தின் பணிகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜெய் ஹனுமன்’ படத்தின் 3டி மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவின் விவரம்: “தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசின் ‘நமஸ்தே திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

Read More

கரோனா தொற்றுக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் மோதல் புலம்பெயர்ந்தோரின் துயரங்களை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு மற்றும் பாதுகாப்புக்காக போராடுகிறார்கள். இது தொடர்பாக, ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரின் அனுபவப் பகிர்வை காண்போம். பஞ்சாபின் மிகப் பெரிய தொழில் துறை மையமான லூதியானாவில் உள்ள ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி, இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, அதாவது நான்கு நாட்களில் தன்னுடைய குடும்பம் மேற்கொண்ட துயரமான அனுபவத்தை விவரித்தார். லூதியானா நகரத்தில் அவசர நிலை ஏற்பட்டால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்த பயம், அவர்களின் குடும்பத்தை ஆட்கொண்டதாக கூறினார். அவரது சொந்த மாநிலமான ஒடிசாவிலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 50 வயதான இவர், தனது மனைவி மற்றும் 14 வயது மகனுடன் லூதியானாவில் வசித்து வருகிறார். “நாங்கள் நான்கு நாட்களாக பீதியில் இருந்தோம். எங்கள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம்…

Read More

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை தொகுத்து வழங்கினார் ஐஸ்வர்யா ரகுபதி. இந்தச் சந்திப்பின்போது, “இது கோடைக்காலம் என்பதால் அனைவரும் நிறைய தண்ணீர் குடியுங்கள்” என்று குறிப்பிட்டார். அப்போது நிருபர் ஒருவர் “நீங்கள் அணிந்திருக்கும் உடை வெயில் நேரத்துக்கு உகுந்தது தானா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “நீங்கள் கேட்கும் கேள்வி இங்கு சம்பந்தமில்லாதது” என்று குறிப்பிட்டார் ஐஸ்வர்யா ரகுபதி. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரகுபதி. அதில் “இன்றும் நம் சமூகத்தில் பல ஆண்கள் ஆண் என்கிற அகந்தையையும், ஆணாதிக்கத்தையும் தாங்கி நடப்பது மனதை உலுக்குகிறது. இன்னும் ஏமாற்றமளிப்பது என்னவென்றால், ஒரு நிருபர் போன்ற அறிவார்ந்தவர் அப்படி நடப்பதுதான். பல ஆண்டுகளாக, அறிவற்றவர்களிடம் இருந்து நிறைய தேவையற்ற கவனத்தைப் பெற்றிருக்கிறேன். அத்தகைய தருணங்களில், மேடையின் மாண்பைப் பேணுவதற்காக கோபத்துடன் பதிலளிப்பதா, அமைதியாக இருப்பதா என்று நான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.…

Read More

சென்னை: “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை…

Read More

கோஹ்லியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு பெற்ற பின்னர் ஆசீர்வாதம் பெற அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் பிருந்தாவனுக்கு விஜ்ரிந்தவனைப் பார்வையிட்டனர். அனுஷ்காவின் குறைவான பேஷன் சாய்ஸ், மென்மையான எம்பிராய்டரி கொண்ட ஒரு குறைந்தபட்ச தந்தக் குர்தா, கவனத்தை ஈர்த்தது. அவரது நேர்த்தியான குழுமம், பலாஸ்ஸோ பேன்ட் மற்றும் ஒரு சுத்தமான துப்பட்டாவுடன் ஜோடியாக, அவரது கையொப்ப பாணியை எளிமை மற்றும் கருணை ஆகியவற்றைப் பிரதிபலித்தது, இந்த ஜோடியின் ஆன்மீக பிரதிபலிப்பை பூர்த்தி செய்தது. அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் சமீபத்தில் பிருந்தாவனில் காணப்பட்டனர், அங்கு அவர்கள் ஸ்ரீ பிரேமனந்த் கோவிந்த் ஷரன் ஜி மகாராஜிடமிருந்து ஆசீர்வாதங்களை நாடினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கோஹ்லி அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு ஆன்மீக வருகை வந்தது, இது கிரிக்கெட்டரின் புகழ்பெற்ற வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.இந்த ஜோடி, அவர்களின் அடித்தள மற்றும் ஆன்மீக வாழ்க்கை முறைக்கு…

Read More

புதுடெல்லி: உண்மையான அதிகாரமளித்தல் என்பது இலவசங்கள், நன்கொடைகள் மூலம் நிகழாது என்றும், போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம் அவர்கள் தாங்களாகவே அதிகாரம் பெறுவதே உண்மையான அதிகாரம் அளித்தலாக இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் காரோ ஹில்ஸ், காசி ஹில்ஸ், ஜெயின்டியா ஹில்ஸ் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மேகாலயாவின் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களிடம் உரையாற்றிய ஜெகதீப் தன்கர், “நமது நாட்டின் வடகிழக்கு பிராந்தியமானது சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாகத் திகழ்கிறது. குறிப்பாக மேகாலயா, சுற்றுலா, சுரங்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மேகாலயா சாதனைகளைப் படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் உலகமே பொறாமைப்படும் மைல்கற்களை…

Read More

தமிழகத்தில் அண்மைக் காலமாக கலை – அறிவியல் கல்லூரிப் படிப்புகளுக்கு மவுசு கூடிய வண்ணம் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியது: மாணவர்களின் மேற்படிப்பையும், எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிப்பது பிளஸ் 2 மதிப் பெண் தான். அதனால் தான் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவ – மாணவிகளின் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மிகுந்த அக்கறை காட்டு கிறார்கள். பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சேர விரும்பும் படிப்பாக இன்ஜினியரிங் படிப்பு இருந்து வந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக கலை – அறிவியல் படிப்புகள் மீது அவர்களின் பார்வை திரும்பத் தொடங்கி யிருக்கிறது. இன்ஜினியரிங் கல்லூரியில் சேர எளிதாக இடம் கிடைத்துவிடுகிறது. ஆனால், கலை – அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக மாறிவிட்டது. அதுவும், பி.காம், பிபிஏ, பி.ஏ. ஆங்கில இலக்கியம், பிஎஸ்சி வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில…

Read More