மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரர்களுக்கும் தங்களது சொந்த நகரை அடைந்தனர். இந்நிலையில் 11-ம் தேதி மாலை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது. இந்த வகையில் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி நிறுத்தி வைக்கப்பட்ட தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள…
Author: admin
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான கிடங்குகள் தாம்பரத்தில் உள்ளன. இவற்றில், டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ், மீட்டர், கேபிள், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. போதிய உபகரணங்கள் இருந்தாலும், அங்குள்ள ஊழியர்கள் இவற்றை முறையாக விநியோகிப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் சிலர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது: கிடங்குகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள ஊழியர்கள், உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை. இதற்காக அவர்கள் உதவி பொறியாளர்களிடம் பணம் எதிர்பார்க்கின்றனர். பொருட்களை தராமல் தாமதம் செய்கின்றனர். புதிய சாதனம் பொருத்தும்போது பழைய சாதனத்தை முறையாக கிடங்குகளில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவை முறைகேடாக விற்கப்படுகின்றன. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உபகரணங்கள் இருப்பு விவரத்தை வழங்குமாறு மேற்பார்வை பொறியாளர்களிடம் கேட்கின்றனர். ஆனால், இதுகுறித்து போலியான அறிக்கைகளே அளிக்கப்படுகின்றன.…
சுவாரஸ்யமான நபர்கள்”நாங்கள் சில சமயங்களில் மக்களை எதிர்கொள்கிறோம், சரியான அந்நியர்கள் கூட, முதல் பார்வையில் எங்களுக்கு ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள், எப்படியாவது திடீரென்று, ஒரே நேரத்தில், ஒரு வார்த்தை பேசப்படுவதற்கு முன்பு.” – ஒரு அழகான மேற்கோள், இது மக்கள் மக்களுடனான தங்கள் அனுபவங்களைப் பற்றி மீண்டும் சிந்திக்க வைக்கும்.
மதுரை: “மரத்தை வெட்டி போடுங்கள், கல்லெடுத்து அடியுங்கள் என்று சொன்ன அன்புமணி ராமதாஸ், தற்போது படியுங்கள் என சொல்லும் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மே 31-ல் நடைபெறும் மதச்சார்பின்மை காப்போம் எனும் மக்கள் எழுச்சி பேரணி தொடர்பாக தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமானில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர்கள் காளிமுத்து, ரவிக்குமார், அரச முத்துப்பாண்டியன், சிந்தனை வளவன், தீபம் சுடர்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 33 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தொல்.திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கொடும் காயத்துக்கு இடப்பட்ட மாமருந்து. இந்த தீர்ப்பு கூட்டுப் பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) அன்று ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏர்டெல் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை தமிழகம் முழுவதும் பரவலாக ஏர்டெல் பயனர்கள் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இதோடு மொபைல் நெட்வொர்க் மற்றும் மொபைல் டேட்டாவும் பயன்படுத்த முடியாமல் சில பயனர்கள் தவித்தனர். பல்வேறு தளங்களின் பாதிப்பு குறித்து தகவல் தரும் டவுன் டிடெக்டர் தளத்தில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை சுமார் 8,400-க்கும் மேற்பட்ட பேர் ஏர்டெல் சேவை பாதிப்பு குறித்து தெரிவித்திருந்தனர். சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி என தமிழக டெலிகாம் சர்க்கிள் பகுதிகளில் உள்ள பயனர்கள் ஏர்டெல் சேவையை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7 மணி முதல் ஏர்டெல் டெலிகாம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.…
குழந்தைகளில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. தண்ணீருடன் போதுமான நீரேற்றம், சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைவாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு போன்ற பழக்கங்களை ஊக்குவிப்பது அவசியம். அடிக்கடி குளியலறை இடைவெளிகளை ஊக்குவிப்பது மற்றும் சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான வருடாந்திர மருத்துவர் வருகைகளை திட்டமிடுவது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான சிறுநீரகங்களை பராமரிக்க கணிசமாக பங்களிக்கும். சிறுநீரகங்கள் முக்கிய செயல்பாடுகளைச் செய்கின்றன, அவை உடலை சமநிலையில் வைத்திருக்கும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்கின்றன, அதாவது இரத்தத்தை வடிகட்டுதல், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கழிவுகளை அகற்றுவது. குழந்தையின் வளர்ச்சி மற்றும் நீண்டகால நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான சிறுநீரக வியாபாரி முக்கியமானது, இருப்பினும் பல பெற்றோர்கள் தங்கள் முக்கியத்துவத்தை கவனிக்கிறார்கள். சிறுநீரக நோய் உலகளவில் 850 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது, மேலும் இளம் வயதிலிருந்தே சரியான பழக்கவழக்கங்கள் இந்த நோய்களில் பெரும்பான்மையைத் தடுக்க…
சென்னை: “இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.…
மதுரை: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரை – அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதனிடையே, தனியார் விமான நிறுவனம் ஒன்று மதுரை – அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் 3 நாட்கள் புதிய விமான சேவையை தொடங்க இருக்கிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியது: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரையிலிருந்து அபுதாபிக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் புதிய விமானம் இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்திய நேரப்படி, மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் அபுதாபி நேரப்படி, காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50…
ரோஸ் ஃபெரீரா | (பட ஆதாரம்: ப்ரூக் ஓவன்ஸ் சக) ரோஸ் ஃபெரீராகரீபியனில் ஒரு வறுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைப் பருவத்திலிருந்து நாசாவில் ஒரு முழுநேர நிலைக்கு குறிப்பிடத்தக்க பயணம், அசைக்க முடியாத பின்னடைவு, உறுதிப்பாடு மற்றும் அறிவியலுக்கான ஆர்வம் ஆகியவற்றின் கதை. டொமினிகன் குடியரசின் ஏழ்மையான சுற்றுப்புறங்களில் ஒன்றில் பிறந்த ஃபெரீரா, வீடற்ற தன்மை, துஷ்பிரயோகம் மற்றும் மொழி தடைகள் உள்ளிட்ட ஏராளமான கஷ்டங்களை எதிர்கொண்டார். இந்த மகத்தான சவால்கள் இருந்தபோதிலும், அவர் தனது வாழ்க்கையையும் கல்வியின் மூலமாகவும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான கடுமையான அர்ப்பணிப்பின் மூலமாகவும் மாற்றினார். அவரது வெற்றிக்கான பாதையில் தனிப்பட்ட மற்றும் சமூக தடைகளை எதிர்த்துப் போராடுவது, நியூயார்க் நகரில் பல ஆண்டுகளாக வீடற்ற தன்மையைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் குறிப்பிடத்தக்க சுகாதார பின்னடைவுகளை வெல்வது ஆகியவை அடங்கும். ஃபெரீராவின் பயணம் கல்வியின் உருமாறும் சக்தி மற்றும் விஞ்ஞான சமூகத்தில் பிரதிநிதித்துவத்தின் தாக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்.ரோஸ் ஃபெரீராவின் வறுமையிலிருந்து…
மதுரை: மதுரை மாநராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் சேர்த்து மொத்தமே 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெருநாய்களால் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நல துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சியில் தனியார் நிறுவனம், விலங்குகள் நலத்தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை மாநகராட்சி நகர் நலத்துறை, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் 23 வரை தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டது. இந்த சர்வே முடிவு அடிப்படையில் மாநகராட்சி 100 வார்டுளில் மொத்தமே 38,348 தெருநாய்கள் மட்டுமே…
