புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி – வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, இவ்விஷயத்தில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்குள் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானிலிருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 1376 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும்…
Author: admin
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது, இன்னும் 2 டெஸ்ட்கள் இருக்கும்போது எப்படி ரிட்டையர் ஆவார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், ‘மைக் டெஸ்டிங் 1,2,3’ என்ற பாட்காஸ்ட்டில் மைக் ஹஸ்சியுடன் உரையாடிய அஸ்வின் மேலும் சில விஷயங்களைக் கூறினார். “உள்ளபடியே கூற வேண்டுமெனில், 100-வது டெஸ்ட்டுடன் ஓய்வு அறிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் சரி, உள்நாட்டுத் தொடர் விளையாடுவோம் என்று முடிவெடுத்தேன். அதாவது நன்றாக ஆடுகிறோம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறோம் இன்னும் கொஞ்சம் ஆடலாமே என்று முடிவெடுத்தேன். கொஞ்சம் கூட விளையாடலாம் என்பது அர்த்தமுள்ள முடிவுதான். நான் கேளிக்கையுடன் தான் இதைச் செய்தேன். மீண்டும் மைதானத்துக்கு திரும்புவதற்காக நான் மேற்கொண்ட பயிற்சி, உடலுழைப்புகள், கடினமான அடியெடுப்புகள்…
டாக்கா: வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சின்மயி கிருஷ்ண தாஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகரும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான சின்மயி கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சின்மயி கிருஷ்ணதாஸ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அக்டோபர் 25-ம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சின்மயி கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட 18 பேர் வங்கதேச கொடியை அவமதித்ததாக பெரோஸ் கான் என்பவர் புகார் அளித்தார். இதன் பேரில், சின்மயி கிருஷ்ணதாஸ் மீது தேச துரோக வழக்கு…
‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலகிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி. இதில் முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நெல்சன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். ரஜினி – சிவராஜ்குமார் காட்சிகள் முதல் பாகத்தில் பேசப்பட்டது போல், இதில் ரஜினி – பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. ரம்யாகிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சுரமுடு, பாலகிருஷ்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். நெல்சன் இயக்கி வரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை: “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத் தான் இருக்கும். எனவே, தமிழக அரசு மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்,” என்று பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை…
மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை வீடு, வாகன கடன் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியன் வங்கி ரெப்போவுடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை (ஆர்பிஎல்ஆர்) 9.05 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது ஆர்எல்எல்ஆர் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. இது, ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா ஆர்பிஎல்ஆர் கடன் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்து அமலாகியுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கு பணவியல் கொள்கை குழு ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தது. இதனால், வங்கிகளிடையே…
சுறா தொட்டி இந்தியாவின் அனுபம் மிட்டல் பிரபலமான இந்திய தொழில்முனைவோர் அனுபம் மிட்டல் shaddi.com ஐ நிறுவியதில் நன்கு அறியப்பட்டவர், அவர் தற்போது காணப்படுகிறார் சுறா டேங்க் இந்தியா ஒரு முதலீட்டாளராக. அவரது மிகப்பெரிய பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் அடிக்கடி அவரைப் பார்த்து, வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்க அவரது ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள். சமீபத்தில், ஒரு தொழில்முனைவோராக ஒருவர் வெற்றிபெற வேண்டிய முக்கிய திறன்களைப் பற்றிய தனது ஆலோசனையை யாராவது அனுபம் மிட்டலிடம் கேட்டபோது, மிட்டல் அதைப் பற்றிய வீடியோவை லிங்க்ட்இனில் இடுகையிட்டு அதற்கு பதிலளித்தார். ஒரு தொழில்முனைவோராக வெற்றிபெற ஒரு விலையுயர்ந்த கல்லூரியில் அல்லது பணி அனுபவத்திலிருந்து ஒருவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற பொதுவான நம்பிக்கையை சிதைத்து, மிட்டல் தனது கருத்துப்படி, மக்களுக்கு “வல்லரசுகள்” என்று பணிபுரியும் இரண்டு முக்கியமான திறன்கள் மட்டுமே தேவை என்று பகிர்ந்து கொண்டார்.தனது ஆலோசனையைப் பகிர்ந்து கொண்ட மிட்டல், “ஒருவர் வெற்றிகரமாக வளர்க்க…
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், மறைந்த மன்மோகன் சிங், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். இந்த விஷயத்தை…
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் – NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ல் தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் நிறைவு…
ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் இணையும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளன்று இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கு ‘டிராகன்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. ‘என்.டி.ஆர் 31’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், ‘சலார்’ படத்துக்குப் பின் பிரசாந்த் நீல் இயக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
