புதுடெல்லி: இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ), இந்தியா போஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி பயிற்சியைப் பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர். இதன்மூலம் அவர்கள் நாட்டிலுள்ள சிறிய நகரங்கள், கிராமப்புறப் பகுதிகளில் மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தில் மக்களைச் சேர்க்கும் பணிகளைச் செய்வர். இதுகுறித்து ஏஎம்எப்ஐ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கட் நாகேஸ்வர் சலசானி கூறும்போது, “ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து 4 மாநிலங்களைத் தேர்வு செய்து அதிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவர். அடுத்த ஆண்டில் அந்த மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் இருப்பர்’’ என்றார்.…
Author: admin
ஆசியா என்பது வேலைநிறுத்த முரண்பாடுகளின் கண்டம். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற உலகளாவிய பொருளாதார நிறுவனங்களின் தாயகமாக, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களைக் கொண்டிருக்கும், மறுபுறம் வறுமை, மோதல் மற்றும் கட்டமைப்பு சவால்களுடன் நாடுகளும் உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வைப் புரிந்து கொள்ள, பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) திரும்பப் பெறுகிறார்கள், இது வாங்கும் சக்தி சமநிலை (பிபிபி) மூலம் சரிசெய்யப்படுகிறது, இது நாடுகளில் வாழ்வின் செலவு வேறுபாடுகளுக்கு காரணமாகும். ஆயினும்கூட, புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இந்த நாடுகளில் பல பொருளாதார கஷ்டங்கள் இருந்தபோதிலும் சாகச பயணிகளை தொடர்ந்து ஈர்க்கும் நிலப்பரப்புகள், பணக்கார கலாச்சாரங்கள் மற்றும் நெகிழக்கூடிய சமூகங்கள் ஆகியவற்றின் இடங்களுக்கும் சொந்தமானவை.2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அவுட்லுக் தரவுத்தள கணிப்புகளின் படி, பல ஆசிய நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (பிபிபி) ஏணியின் அடிப்பகுதியில்…
புதுடெல்லி: குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். அங்கு குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் முதல்வரிடம் புகார் மனு அளிக்க வந்தார். அவரை காவலர்கள் சோனை செய்து அனுப்பினர். மனு அளிக்க முதல்வர் ரேகா குப்தாவை நெருங்கிய அவர் சிறிது நேரம் பேசினார். பின்னர் முதல்வரை திட்டிய அவர் திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். முதல்வரை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். அதற்குள் முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்திருந்ததாகவும், அதற்காக…
செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்த உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் நேற்று 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதிய ஆட்டம் 37-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் லேவோன் அரோனியன் – பிரேசிலின் சாமுவேல் சேவியன் மோதிய ஆட்டமும், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் – அமெரிக்காவின் வெஸ்லி சோ ஆகியோர் மோதிய ஆட்டமும், போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் – பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்டமும் டிராவில் முடிடைவடைந்தது. 2 சுற்றுகளின் முடிவில் லேவோன் அரோனியன், அலிரேசா ஃபிரோஸ்ஜா, பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முதல்…
நடிகர் அசோக் செல்வன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர், தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்எல், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை கருத்தியல் யுத்தமாக முன்னெடுக்க காங்கிரஸ், திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்வாக குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்கிய இடத்தில் வைத்திருப்பதாகவும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தேர்தலின்போது வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் இண்டியா கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு கிளம்பியது. திமுக எம்.பி. திருச்சி சிவா வேட்பாளர் போட்டியில் இருப்பதாக பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இண்டியா கூட்டணி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதாக இண்டியா கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: தொடக்கத்தில் இருந்தே இண்டியா கூட்டணித் தலைவர்களுக்குள் சுமூகமான நிலை இல்லை. திமுக கூட்டணி சார்பில் சார்பில்…
பச்சை காபி, பொதுவாக அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது, இது ஒரு சக்திவாய்ந்த முடி பராமரிப்பு மூலப்பொருளாக உருவாகி வருகிறது. அன்ரோஸ்டட் பீன்ஸ் குளோரோஜெனிக் அமிலம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அமினோ அமிலங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது, இது உச்சந்தலையில் ஆரோக்கியத்தையும் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. கழுவுதல், முகமூடிகள் மற்றும் ஸ்க்ரப்கள் போன்ற எளிமையான வீட்டில் சிகிச்சைகள் முடியை புத்துயிர் பெறலாம், தடிமனான, வலுவான மற்றும் பளபளப்பான பூட்டுகளை அடைய இயற்கையான மற்றும் மலிவு வழியை வழங்குகின்றன. சரி, எனவே நீங்கள் பச்சை காபியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஏனெனில் அந்த நவநாகரீக சுகாதார பானம் மக்கள் எடை இழப்பு மற்றும் ஒளிரும் தோலுக்காக பருகுகிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? இந்த சிறிய பச்சை பீன் உங்கள் தலைமுடிக்கு மொத்த விளையாட்டு மாற்றியாகும். ஆமாம், இது உங்கள் காலை ஆரோக்கிய பிழைத்திருத்தத்திற்கு மட்டுமல்ல, இது அடிப்படையில் தடிமனான, வலுவான மற்றும் பளபளப்பான பூட்டுகளுக்கான ரகசிய…
புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியதில் பலத்தை பிரயோகித்தது குறித்தும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரத்தை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: அவசரநிலை காலத்தில் 1.07 கோடிக்கும் மேற்பட்டோருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இது அப்போதைய இந்திரா காந்தி அரசு நிர்ணயித்த இலக்கை விட 60% அதிகமாகும். அப்போது குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக 1,774 பேர் இறந்துள்ளனர். திருமணமாகாதவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டதாக 548 புகார்கள் வந்துள்ளன. அவசரநிலை காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு ஆண்டு இலக்குகளை மாநிலங்களுக்கு…
ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஸ்கீட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனந்த் ஜீத் நருகா 57-56 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான குவைத்தின் மன்சூர் அல் ரஷிதியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி 17-9 என்ற கணக்கில் சீன தைபேவின் லியு ஹெங் யு, ஹ்சீ ஹ்சியாங் சென் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா 16-12 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஜூனியருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி, கவின் அந்தோஷி ஜோடி 16-14 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யெஜின், கிம் டூயோன் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்குகிறார். இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களுக்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஸ்வர்யா கல்பாத்தியும் உள்ளனர். இந்நிறுவனம் தயாரிக்கும் 28 -வது படம் இது. இதன் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.