சென்னை: “உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளித்துள்ளார். நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த “சார்கள்” மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கூறியுள்ளதாவது: அந்த குற்றவாளி கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப்போல திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத்…
Author: admin
விஞ்ஞானிகள் பூமியில் வாழ்க்கை என்றென்றும் மறைந்துவிடும் என்று கணித்துள்ளனர் நாசாவின் கிரக மாடலிங் பயன்படுத்தி டோஹோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு அற்புதமான ஆய்வு, பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வியத்தகு மாற்றத்தை கணித்துள்ளது, இது வாழ்க்கையை சாத்தியமற்றது என்று நமக்குத் தெரியும். ஆராய்ச்சியின் படி, பூமியின் ஆக்ஸிஜன் சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் மறைந்துவிடும். நேச்சர் ஜியோசைன்ஸ் விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்ட இந்த கணிப்பு, கிரகத்தின் வளிமண்டல பரிணாமத்தைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. சூரியன் வயதாகி தீவிரமடைவதால் பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உருவாகக்கூடும் என்பதை ஆராய இந்த ஆய்வு 400,000 உருவகப்படுத்துதல்களை நடத்தியது. இந்த கடுமையான மாற்றம் எதிர்காலத்தில் வெகு தொலைவில் இருக்கும்போது, அதன் பின்னால் உள்ள வழிமுறைகளைப் புரிந்துகொள்வது கிரக அறிவியல் மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தின் எதிர்காலம் பற்றிய அத்தியாவசிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.விஞ்ஞானிகள் பூமியின் ‘காலாவதி தேதியை’ கண்டுபிடித்தனர், நீங்கள் நினைப்பதை விட இது விரைவில்”பூமியின் ஆக்ஸிஜனேற்ற வளிமண்டலத்தின்…
புதுடெல்லி: பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜெய்சங்கருக்கு ஏற்கெனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசி வருகிறார். இத்தகையச் சூழலில்தான், ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பான செய்தி வந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, விஐபிகளுக்கான பாதுகாப்பு…
சென்னை: பேராசிரியர் வருகை பதிவு குறைவு, பேராசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக தமிழகத்தின் 35 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடுமுழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது. அதன்படி, நடப்பாண்டு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகை பதிவு, பேராசிரியர் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதன்பேரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கோ, கலந்தாய்வுக்கோ எந்த தடையும் ஏற்படாது…
நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகங்கள், இரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவங்களை நிராகரிப்பதற்கான முக்கியமான பணியைச் செய்கின்றன, எல்லா நேரங்களிலும் நம் உடலை வேலை செய்கின்றன. இருப்பினும், சிறுநீரகங்கள் பலவீனமாக மாறும் போது, உங்கள் உடல் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கலாம், மேலும் நிலை அபாயகரமானதாக இருக்கும். பல காரணிகள் சிறுநீரகங்களின் தோல்வியையும் ஏற்படுத்தக்கூடும் (நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மரபணு நிலைமைகள் போன்றவை), நீண்ட காலமாக எடுத்துக் கொண்டால், சில மருந்துகளும் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள் ….
மே 13, 2025 அன்று, 1:02 AM EDT (0502 GMT), ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கை உருவாக்க மற்றொரு பணியை அறிமுகப்படுத்தியது. ஃபால்கன் 9 ராக்கெட் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து தொடங்கப்பட்டது, 28 ஐ அறிமுகப்படுத்தியது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் (லியோ). இந்த வெளியீடு ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் இணைய விண்மீன் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது, இது உலகளாவிய பிராட்பேண்ட் கவரேஜை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. விண்வெளிப் பயணத்தில் ஸ்பேஸ்எக்ஸின் தொடர்ச்சியான வெற்றியை இந்த பணி வலியுறுத்துகிறது, உலகெங்கிலும் அதிவேக இணைய இணைப்பின் அதிகரித்துவரும் தேவையை நிவர்த்தி செய்வதற்காக வழக்கமான துவக்கங்களை மேற்கொள்வதில் நிறுவனத்தின் செயல்திறனை நிரூபிக்கிறது.பூஸ்டர் பி 1067 இன் 28 வெற்றிகரமான விமானங்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் புதிய உயரங்களை அடைகிறதுஇந்த பணியின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று பால்கன் 9 முதல் நிலை பூஸ்டர், பி 1067 இன்…
புதுடெல்லி: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஷா பஞ்சாப் எல்லையில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது நிழலுக்காக ஓரிடத்தில் ஒதுங்கியதாகவும், சீருடையில் ரைஃபிலுடன் இருந்த அவர் ஒதுங்கிய பகுதி பாக். எல்லையாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்த நிலையில், அடுத்த நாள் ஏப்.23-ம் தேதி பிஎஸ்எஃப் வீரர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) காலை ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இன்று காலை 10.30…
பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள். ஆனால், போட்டித் தேர்வு, ஒரு படிப்பில் சேர்வதற்கான சிறப்புத் தேர்வு எனும்போது அதற்குத் தயாராகத் தொடங்குவது முதல் தேர்வை எதிர்கொண்டு வெற்றி காண்பதுவரை அதிக சவால் நிறைந்த பயணமாகவே இருக்கிறது. வெற்றிக்கான முதலீடு: போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர் ஒருவர், அதற்காக அதிக நேரத்தை முதலில் முதலீடு செய்ய வேண்டி வரும். அதிக உழைப்பும் பயிற்சியும் அவசியம். சுயமாகத் தயாராக முடியாதபட்சத்தில், பயிற்சிக்காகப் பணத்தையும் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்தக் காரணங்களாலும், அதிகப் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்பதாலும் பள்ளி, கல்லூரித் தேர்வுகளைவிட இது சற்று வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் போட்டித் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டது. அதற்கென நேரமும் உழைப்பும் முதலீடு செய்யப்படும்போது தேர்ச்சி…
அரசியலில், விட்ட இடத்தை பிடிக்க நினைப்பவர்களும் அப்படி பிடிக்க நினைப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே ஓரங்கட்ட நினைப்பவர்களுமே இன்றைக்கு நிறைந்திருக்கிறார்கள். அதுதான் அரசியலுக்கான எழுதப்படாத இலக்கணமும் கூட. நாமக்கல் மாவட்ட திமுக-விலும் இரண்டு பேர் அந்த இலக்கணத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றுபட்ட நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திச்செல்வன் தான் இருந்தார். ஸ்டாலினின் தீவிர விசுவாசியான இவர் மீது அதிருப்தி ஏற்பட்டதாலோ என்னவோ 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக காந்திச்செல்வன் அறிவிக்கப்பட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை மிகச் சீக்கிரமே அப்பொறுப்பில் இருந்தும் காந்திச்செல்வன் நீக்கப்பட்டு அவரது ஆதரவாளரான கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பார்.இளங்கோவன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்கவில்லை. அவரையும் நீக்கிவிட்டு, கிழக்கு…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகால் கெல்லர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவினர் உளவு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
