Author: admin

சென்னை: கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி இன்று அதிகாலை வெடித்ததில் அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கொதிக்கும் நிலையில் இருந்த ரசாயனக் கழிவுகள் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொதிக்கும் ரசாயனக் கழிவு நீர் புகுந்ததால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.…

Read More

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகருக்குச் சென்றார். பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் சென்ற ராஜ்நாத் சிங், ஸ்ரீநகரின் பதாமி பாக் கண்டோன்மென்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் பகுதியில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். சில சிதைவுகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சலான வீரர்களின்…

Read More

சென்னை: கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு-2025 எனும் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து தமிழக அரசின் பயிற்சி பெற்று எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 58 மாணவர்களை பாராடி கேடயங்களை அவர் வழங்கினார். அதன்பின் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: இங்கே ‘2கே கிட்ஸ்’ இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூறினால் பிடிக்காது என்பது எனக்கு தெரியும். ஆனாாலும், படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை. இங்கே உள்ள மாணவர்கள் பலரின் தாத்தா-பாட்டிகள் பள்ளிக்கு சென்றிருக்கமாட்டார்கள்.…

Read More

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் நேற்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி பதவிக் காலம் முடிவடையும் வரை சுமார் 6 மாதங்களுக்கு இவர் தலைமை நீதிபதியாக இருப்பார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த 1960-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி கவாய்…

Read More

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களைக் கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மேலும் வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 127-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை…

Read More

இயற்கையாகவே கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்க பெர்ரி சிறந்தது. இந்த சிறிய, வண்ணமயமான பழங்கள் கரையக்கூடிய நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிபினால்களால் நிரம்பியுள்ளன – இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன மற்றும் எல்.டி.எல் அளவைக் குறைக்கின்றன. அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரி அந்தோசயினின்களில் அதிகமாக உள்ளது, இது எல்.டி.எல் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது மற்றும் இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்கிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தினசரி பெர்ரி நுகர்வு எல்.டி.எல் கொழுப்பைக் கணிசமாகக் குறைத்து எச்.டி.எல் அளவை மேம்படுத்தியது.எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்​முதலில் ஒரு படத்தை எடுக்காமல் உங்கள் உணவை சாப்பிட முடியவில்லையா?எங்கள் உணவு புகைப்பட போட்டியில் சேர்ந்து, அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பைப் பெறுங்கள்!விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.சுவையான சமையல் குறிப்புகளைக் கண்டறியவும், கவர்ச்சிகரமான உணவுக் கதைகளை அனுபவிக்கவும், சமீபத்திய உணவு செய்திகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும் எங்கள் வாட்ஸ்அப் உணவு…

Read More

புதுடெல்லி: மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார். குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகள்: 1) ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன? 2) ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, ​​அமைச்சர்கள் குழுவால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா? 3) இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா? 4) பிரிவு 200-ன்…

Read More

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்’ இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் இடம்பெற உள்ளன. இந்த வழித்தடத்தில் அயனாவரம், ராயப்பேட்டை உட்பட பல இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணியில் `கல்வராயன்’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், நிலைய சுற்றுச்சுவர் மற்றும் நிலைய கட்டுமான பணிகளில்…

Read More

ஓக்லஹோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் FGF21 ஹார்மோன் கொழுப்பு கல்லீரல் நோயை மாற்றியமைக்க முடியும் என்று கண்டறிந்தனர். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த ஹார்மோன் மூளையை சமிக்ஞை செய்கிறது. இது கல்லீரல் கொழுப்பைக் குறைத்து ஃபைப்ரோஸிஸை மாற்றியமைக்கிறது. ஹார்மோன் கொழுப்பையும் குறைக்கிறது. இந்த கண்டுபிடிப்பு கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய மருந்துகளுக்கு வழிவகுக்கும். மருத்துவ பரிசோதனைகள் நல்ல சிகிச்சை நன்மைகளைக் காட்டுகின்றன. கொழுப்பு கல்லீரல் நோய் உலகளாவிய சுகாதார கவலையாக உயர்ந்து வருகிறது. பெரும்பாலும் ஒரு ‘அமைதியான’ நோயாகக் கருதப்படுவதால், இது சில அல்லது அறிகுறிகளைக் காட்டுகிறது என்பதால், கொழுப்பு கல்லீரல் நோய், அதன் காரணம் மற்றும் முன்னேற்றத்தைப் பொறுத்து தீவிரமடையக்கூடும். ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் கொழுப்பு கல்லீரல் நோயை மாற்றியமைக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது.ஓக்லஹோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஒரு அற்புதமான ஆய்வில், ஒரு ஹார்மோன் எலிகளில் கொழுப்பு கல்லீரல் நோயின் விளைவுகளை மாற்றியமைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.…

Read More

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு அடுத்தடுத்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை நமது பாதுகாப்புப் படை முறியடித்தது. மேலும், அந்நாட்டு விமானப்படை…

Read More