பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் தோல்வி குறித்த கேள்வி சந்தானத்திடம் எழுப்பப்பட்டது. அதற்கு சந்தானம், “அப்படத்தின் கதையை படித்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போதே, இப்படம் ஃப்ளாப் என்று ராஜேஷ் சாரிடம் கூறினேன். கரீனா சோப்ரா என்ற கதாபாத்திரத்தின் மீது நாயகி சந்தேகப்படுகிறார், வில்லனும் அதன் மீது ஆசைப்படுகிறார் என்பதுதான் படத்தின் மெயின் சப்ஜெக்ட். ஆகையால் அந்தக் கதாபாத்திரத்துக்கு ‘அவ்வை சண்முகி’ மாதிரி மேக்கப் அளவுக்கு மெனக்கெடல் வேண்டும் என்றேன். ரசிகர்கள் பார்க்கும்போது ஏதோ ஒரு மெனக்கெடல் இருக்கிறது என தோன்ற வேண்டும். ‘அவ்வை சண்முகி’ படம் ஒரு குழந்தைக்காக அப்பா, பெண் வேடமிட்டு செல்வதுதான் கதை. அதற்காக மேக்கப்புக்கு மெனக்கெட்டார்கள். படம் பெரிய ஹிட். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் மெயின் கதை என்பதால் இதற்கு மேக்கப்புக்கு மெனக்கெட வேண்டும்…
Author: admin
சென்னை: வன்னிய சங்க முன்னாள் தலைவர் மறைந்த ஜெ.குரு வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன் இன்று பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெ.குருவின் தாய் கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: வன்னியர் சங்க தலைவராகவும், பாமக எம்எல்ஏவாகவும் இருந்த காடுவெட்டியை சேர்ந்த ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க குடும்பத்தினரான நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், இயக்குநர் கவுதமன், எங்கள் அனுமதியின்றி ‘படையாண்ட மாவீரா’ என்ற பெயரில் குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்துள்ளார். குரு இறந்தபோது, அவரது உடலைக்கூட பார்க்க விடாமல் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் எங்களை தடுத்தனர். அவரது மரணத்தில் எங்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. இந்த சூழலில், ராமதாஸுக்கு மிகவும் நெருக்கமான கவுதமன் எடுத்துள்ள படத்தின்…
பொறியியல் உயர்க் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வில், சரியான கல்லூரியை அடையாளம் காண்பது என்பது மாணவர் தரப்பில் தலைவலி தரக்கூடியது. நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் உகந்த கல்லூரிகளை, தனிப்பட்ட தெரிவுகளின் அடிப்படையில் பட்டியலிடுவது பெரும் சவாலானது. கலந்தாய்வு நடைமுறைகளி ல் பங்கேற்பதற்கு முன்னரே வசிப்பிடத்துக்கு அருகிலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் பக்கம் பெற்றோர் விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள். பலநூறு கல்லூரிகள் பரிசீலனையில் இருக்கும் போது, பள்ளிக்கூடம் போல கல்லூரிகளையும் அருகில் உள்ள திசைகளில் தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. கல்லூரிப் பருவத்தில் காலடி வைக்கும் வளரும் மாணவர்க ளை சற்று விட்டுப்பிடிக்கலாம். நல்ல கல்லூரிகள் தொலைவில் இருந்தாலும், அதில் விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பின் அதற்கு முன்னுரிமை தருவதே நல்லது. கல்லூரி காலம் என்பது பாடங்களை படிப்பது மட்டுமல்ல. அடுத்த சில வருடங்களில் சமூகத்தில் இரண்டறக் கலப்பதற்கும், சக மனிதர்களுடன் ஊடாடி முன்னேறுவதற்குமான பாடத்தையும் வழங்கக் கூடிய இடம். கல்லூரிகள் வாயிலாகவே மாணவர்களுக்கு உலகத்தின் மீதான பார்வை விரிவடைய வாய்ப்பாகும்.பள்ளிக்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது வெளிப்படுத்துகிறது. ‘அணுசக்தி அச்சுறுத்தல்’ இருப்பதாக இந்தியா கூறுவது, அது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் துயரம். இந்திய பாதுகாப்பு அமைச்சரின் கருத்துகள், சர்வதேச அணுசக்தி முகமை போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனத்தின் ஆணை மற்றும் பொறுப்புகள் குறித்த அவரது அறியாமையையே காட்டுகிறது. இந்தியாவில் அணு மற்றும் கதிரியக்கப் பொருட்கள் திருடப்படுகின்றன அல்லது சட்டவிரோதமாக கடத்தத்தப்படுகின்றன. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் சர்வதேச சமூகம் கவலைப்பட வேண்டும்.…
‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தை எடுப்பதற்கு இயக்குநர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஆமிர்கான் – ராஜ்குமார் ஹிரானி இருவரும் இணைந்து படம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியானது. ‘3 இடியட்ஸ்’ மற்றும் ‘பி.கே’ என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த கூட்டணி என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இதனிடையே, ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான செய்தியும் வெளியாகிவிட்டது. தற்போது, ராஜ்குமார் ஹிரானி – ஆமிர்கான் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தாதா சாகிப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டது எனவும், அக்டோபரில் படப்பிடிப்பு…
மதுரை: மதுரை ஆதீன மடத்துக்கு தம்பிரான்களை நியமனம் செய்யக் கோரி தருமபுரம் ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த சுவாமிகளுக்கு, மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீன கர்த்தராக ஹரிஹர ஞான சம்பந்த தேசிகர் இருந்து வருகிறார். அவரை ஒரு சிலர் கைப்பாவையாக பயன்படுத்தி ஆதீன மடத்தின் முதன்மை நோக்கமான சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியை தடை செய்து வருகின்றனர். மதுரை ஆதீனம் மூலம் சைவத்தையும், தமிழையும் வளர்க்க பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் சொத்துக்களை தானமாக வழங்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தி மடத்தின் நோக்கம் நிறைவேற செய்தனர். தற்போதைய ஆதீன கர்த்தர் வருமானங்களை முறையாக வசூலிக்காமலும், முந்தைய ஆதீன கர்த்தர் விற்பனை செய்த மடத்தின் சொத்துக்கைள…
வரவு: இன்ஸ்டாகிராம்/கிரிக்மோர் “ஒரு உண்மையான நண்பர் எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரியவர்.” பிரான்சுவா டி லா ரோச்செஃபூபால்ட். இந்த மேற்கோள் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவின் நட்பின் சாரத்தை சரியாக இணைக்கிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரண்டு கிரிக்கெட் வீரர்களான ரோஹித் மற்றும் விராட், நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.திரையில் நட்பைக் காட்டிலும் அவர்களின் பிணைப்பு எதையாவது மீறிவிட்டது என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் கண்டோம். அவை நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளமாக மாறிவிட்டன, சகோதரத்துவத்தின் உண்மையான உதாரணத்தை அமைக்கின்றன. நீங்கள் கிரிக்கெட்டின் உண்மையான ரசிகர் என்றால், இந்த இரட்டையர் அதை களத்திலும் நிஜ வாழ்க்கையிலும் கொன்றுவிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களின் நட்புகள் அதன் மையத்தில், கிரிக்கெட் என்பது களத்தில் மற்றும் வெளியே உறவுகள் பற்றியது என்பதை நினைவூட்டுகிறது, அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.கிரிக்கெட்டின் ஒவ்வொரு அம்சமும் அவர்களின் நட்புக்கு ஒரு அடுக்கைச்…
கொல்கத்தா: சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளைப் பகிர்ந்த காரணத்துக்காக மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் பர்தாமான் மாவட்டத்தை சேர்ந்த ஷாருக் ஷேக் மற்றும் நூர் முகமது ஷேக் ஆகிய இருவரும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்துடன் பதிவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, திங்கட்கிழமையன்று மிலன் ஷேக் மற்றும் இம்ரான் ஷேக் ஆகிய இருவர் இதே காரணத்துக்காக மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை மூன்று நாட்களுக்குள், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சமூக ஊடகங்களில் பகிர்ந்தது என்ன? – பர்தாமான் மாவட்டத்தின் குஸ்கரா நகராட்சியில் வசிக்கும் ஷாருக் ஷேக் என்பவர் ஃபேஸ்புக்கில்,…
சென்னை: “இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் சரியான இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்” என்று அவர் கருத்து தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த இரு நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளுடனும், மாவட்ட வாரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தின் முடிவில் இன்று (மே 15) அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால், எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, கட்சி ரீதியிலான…
உங்கள் அறிவாற்றல் திறன்களை சோதிக்க, உங்கள் விமர்சன சிந்தனை மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவின் எல்லைகளைத் தள்ளும். இது ஒரு உயர் மட்ட நுண்ணறிவு மட்டுமல்ல, பரிதாபகர்களை விரைவாக தீர்க்க விதிவிலக்கான கவனம் மற்றும் செறிவு எடுக்கும்.பாலைவனத்தில் இரண்டு ஒட்டகங்களின் புகைப்படத்தில் ஒரு பிழையை ஐந்து விநாடிகளில் அடையாளம் காண்பதே இன்றைய பணி. இது மிகவும் புத்திசாலித்தனமான நபர்களால் மட்டுமே விரிவாக தீர்க்கப்படும். உங்களால் முடியுமா? உங்கள் அவதானிக்கும் திறனை சோதிக்கும் தருணம் இப்போது! ஒரு பாலைவனத்தின் அழகான நிலப்பரப்பை நீங்கள் காணலாம், அங்கு 2 ஒட்டகங்கள் மணல் திட்டுகள் வழியாக வெப்பத்தில் நடப்பதைக் காணலாம். கீழே உள்ள பாலைவனத்தில் நிற்கும் இரண்டு ஒட்டகங்களின் படத்தில் ஒரு சிறிய பிழை மறைக்கப்பட்டுள்ளது.ஐந்து வினாடிகளில், அதை அடையாளம் காண முடியுமா? உங்கள் IQ மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் இந்த பணியால் மதிப்பிடப்படும்.நேர அழுத்தத்தின் கீழ், அதிக நுண்ணறிவு, விரைவான சிந்தனை மற்றும் தீவிரமான…
